Friday, November 26, 2010
பெண் மன வானில்.....
பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் பற்றிய இத்தொடருக்கு அழைத்த நண்பர் ராஜாவிற்கு நன்றியும் வணக்கங்களும்!
பெண் மனம் ஆழமானது ஒரு வானம்போல பரந்தது அதில் பல்வேறு உணர்வுகள் இருந்தாலும் பல சமயங்களில் அவற்றை ஆண்கள் போல வெளிப்படுத்த முடிவதில்லை. திரைப்படங்களில் பெண்கள் மட்டும் பாடல்கள், பெண் மனதை வெளிப்படுத்தும் பாடல்கள் பல வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலனவை காதல் சார்ந்தவையாக வந்துள்ளன. தாய்ப்பாசம் கூட ஆண் பாடுவது போலதான் பல பாடல்கள் உள்ளன. உண்மையில் மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் திரைப்படங்கள் அதிகமாக இல்லை என்பதே உண்மை.
Tuesday, November 23, 2010
காதல் என்பது..... பாகம்-2
குமாருக்கு பல விஷயங்கள் புதிராகவே இருந்தன. தியாகுவும் ரூபாவும் அந்த அளவு அன்னியோன்யமாக இருந்ததுபோல் தெரியவில்லை. ஒரு உணர்ச்சிவசப்படலில் காதலுக்காக தற்கொலை முடிவு எடுப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் ஒரு வருடம் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டு சரியாக அந்த நாளில் இறப்பது......
தியாகுவிற்கு அந்த வயதில் வந்தது காதல் இல்லாமல் வெறும் இனக்கவர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் அவன் அன்பு உண்மையானது என்று புரிகிறது, அதற்காக அவன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்றாலும் கூட....
இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் குமாரின் மனதில் அலைபாய காரணம் என்ன?
தியாகுவிற்கு அந்த வயதில் வந்தது காதல் இல்லாமல் வெறும் இனக்கவர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் அவன் அன்பு உண்மையானது என்று புரிகிறது, அதற்காக அவன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்றாலும் கூட....
இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் குமாரின் மனதில் அலைபாய காரணம் என்ன?
Labels:
வாழ்க்கை நிகழ்வு
15
கருத்துக்கள்
காதல் என்பது..... பாகம் 1
காதல் என்றால் என்ன?
காதல் என்பது....
ஒரு இனிமையான அனுபவம்
ஒரு அற்புதமான உணர்வு
அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்
காமம்தான் காதல்
கல்யாணத்து பிறகு வருவதுதான் உண்மையான காதல்
இப்படி ஆளாளுக்கு சொல்லிகிட்டே போகலாம்....
ஆனால்.....
காதல் என்பது....
ஒரு இனிமையான அனுபவம்
ஒரு அற்புதமான உணர்வு
அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்
காமம்தான் காதல்
கல்யாணத்து பிறகு வருவதுதான் உண்மையான காதல்
இப்படி ஆளாளுக்கு சொல்லிகிட்டே போகலாம்....
ஆனால்.....
Labels:
வாழ்க்கை நிகழ்வு
7
கருத்துக்கள்
Thursday, November 18, 2010
என்னோட எதிரி!
அவன் வந்துட்டுகிட்டு இருக்கான்! அவன்தாங்க என்னோட எதிரி! வரட்டும் வரட்டும் என்ன செஞ்சுருவானு பாக்கிறேன்! அவன் எல்லாம் என் முன்னாடி நிக்க முடியுமா! அவன்லாம் எனக்கு ஜுஜுபி மாதிரி!
Labels:
சிறுகதை
22
கருத்துக்கள்
Monday, November 15, 2010
ரஜினி ஒரு சிறந்த Entertainer!
பொதுவாக ரஜினியின் பெரும்பாலான படங்களை பிடிக்கும். சிலவற்றை திரும்ப திரும்ப பார்க்கலாம். அப்படிப்பட்ட படங்களில் எனக்கு பிடித்த சில படங்களை சொல்கிறேன். ஏதோ சாதாரண ரசிகனா இது புடிக்கும் அது புடிக்குங்கிற மாதிரி எழுதறேன். இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்ட சவுந்தரை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்.
Thursday, November 11, 2010
கருணை
நேரம் மாலை 4.40
இனிமையான கடற்கரை காற்று வீசியது. அதை அனுபவித்தபடியே நடந்தேன்.
”அய்யா தர்மம் பண்ணுங்கய்யா”
குரல் கேட்டு திரும்பினேன். ஒரு வயதான மூதாட்டி நின்று கொண்டிருந்தாள்.
யோசித்தேன். பிறகு சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 1 ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுக்கு போட்டேன்.
”தர்மராசா நீங்க நல்லாயிருக்கணும்”
நான் புன்னகைத்து கொண்டே நடந்தேன்.
நேரம் மாலை 4. 15
இனிமையான கடற்கரை காற்று வீசியது. அதை அனுபவித்தபடியே நடந்தேன்.
”அய்யா தர்மம் பண்ணுங்கய்யா”
குரல் கேட்டு திரும்பினேன். ஒரு வயதான மூதாட்டி நின்று கொண்டிருந்தாள்.
யோசித்தேன். பிறகு சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 1 ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுக்கு போட்டேன்.
”தர்மராசா நீங்க நல்லாயிருக்கணும்”
நான் புன்னகைத்து கொண்டே நடந்தேன்.
நேரம் மாலை 4. 15
Labels:
சிறுகதை
24
கருத்துக்கள்
Tuesday, November 9, 2010
உலகத்தின் கடைசி நாள்
இந்த பதிவு எழுதவுதற்கு முக்கிய காரணம் நண்பர் டெனிம் மோகன் தான். அவர்கூட பேசுறப்ப உலகம் அழிவது பற்றி சில தகவல்கள் சொன்னார். ஆர்வம் அதிகமாகி அதை இன்னும் விவரமா தெரிஞ்கிட்டு எழுதுகிறேன். அவருக்கு மிக்க நன்றி!
எவ்வளவோ சுருக்கி எழுதினேன். ஆனாலும் ரொம்ப பெரிசா ஆயிடுச்சு. அதனால் பதிவா போடாம பிரசண்டேசனா மாத்திட்டேன். இது பெரிசா இருப்பதா நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க. ஃபுல்ஸ்க்ரீனில் படித்தால் நன்றாக இருக்கும்.
கருத்துக்களை சொல்லுங்க!
அனைவருக்கும் நன்றி!
Labels:
கட்டுரை
17
கருத்துக்கள்
Sunday, October 31, 2010
ஆவியுடன் பேசலாம் வாங்க!
ஆவியுடன் பேச வேண்டும் என எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. அப்போது எனக்கு 13 வயது இருக்கலாம். ஒரு புத்தகத்தில் ஆவியுடன் பேசும் முறை என சில விசயங்களை போட்டிருந்தார்கள். எனக்கு ஆசை. சரி பலிக்கிறதோ இல்லையோ முயற்சித்து பார்ப்போமே என தீர்மானித்தேன்.
துணைக்கு என் தம்பி மற்றும் அவன் நண்பர்கள் இருவரை அழைத்துக் கொண்டேன். இதில் மணி என்பவன் மிகவும் தைரியசாலி(அப்படித்தான் நினைத்தோம்). எனக்கும் என் தம்பிக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் தயாரானோம்.
துணைக்கு என் தம்பி மற்றும் அவன் நண்பர்கள் இருவரை அழைத்துக் கொண்டேன். இதில் மணி என்பவன் மிகவும் தைரியசாலி(அப்படித்தான் நினைத்தோம்). எனக்கும் என் தம்பிக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் தயாரானோம்.
Labels:
வாழ்க்கை நிகழ்வு
33
கருத்துக்கள்
Saturday, October 30, 2010
பாகம் 1
முதலிடம் வர நினைத்தேன் முடியவில்லை பள்ளியில்
முதலிடம் பெற நினைத்தேன் முடியவில்லை விளையாட்டில்
எதிர்பாரா தருணத்தில் வந்தேனே நான்!
வடை எனக்கே!
முதலிடம் பெற நினைத்தேன் முடியவில்லை விளையாட்டில்
எதிர்பாரா தருணத்தில் வந்தேனே நான்!
வடை எனக்கே!
Labels:
க.......
7
கருத்துக்கள்
Monday, October 25, 2010
காலப்புதிர்கள் - பாகம் மூன்று (இறுதிப் பாகம்)
யோகேஷ் மற்றும் ஜெயந்த் வாசலில் காத்திருந்தனர்.
கொஞ்ச நேரத்தில் டாக்ஸியில் இருந்து இறங்கினார் தேவா.
”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”
”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”
”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்”
“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”
கொஞ்ச நேரத்தில் டாக்ஸியில் இருந்து இறங்கினார் தேவா.
”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”
”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”
”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்”
“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”
Labels:
நாவல்
13
கருத்துக்கள்
காலப் புதிர்கள் - பாகம் இரண்டு
RHINO ELECTRONICS.
ரமேஷ் உள்ளே பதுங்கி பதுங்கி நுழைந்தான். கோட் சூட் போட்ட ஒருவர் ஒரு அறையிலிருந்து வெளியேறுவது தெரிந்தது. அவர் சென்றவுடன் வேகமாக உள்ளே நுழைந்தான்.
பாண்டியன் வெளியே சென்றவர் கார் சாவி எடுக்க மறந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் தன் அறை நோக்கிச் சென்றார்.
ரமேஷ் ஆள் வரும் சத்தம் கேட்டதும் அருகே இருந்த ஒரு பீரோவின் பின்னால் ஒளிந்தான். உள்ளே ஒருவர் நுழைந்தார். அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தான். அவர் ஒரு சிறு கதவின் பக்கம் சென்றார் ஆட்கள் யாரும் இல்லை என்ற நினைப்பால் சாதாரணமாக எண்களை தட்டினார், ரமேஷின் கண்கள் அதை மிக கவனமாக பதிவு செய்தது.
ரமேஷ் உள்ளே பதுங்கி பதுங்கி நுழைந்தான். கோட் சூட் போட்ட ஒருவர் ஒரு அறையிலிருந்து வெளியேறுவது தெரிந்தது. அவர் சென்றவுடன் வேகமாக உள்ளே நுழைந்தான்.
பாண்டியன் வெளியே சென்றவர் கார் சாவி எடுக்க மறந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் தன் அறை நோக்கிச் சென்றார்.
ரமேஷ் ஆள் வரும் சத்தம் கேட்டதும் அருகே இருந்த ஒரு பீரோவின் பின்னால் ஒளிந்தான். உள்ளே ஒருவர் நுழைந்தார். அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தான். அவர் ஒரு சிறு கதவின் பக்கம் சென்றார் ஆட்கள் யாரும் இல்லை என்ற நினைப்பால் சாதாரணமாக எண்களை தட்டினார், ரமேஷின் கண்கள் அதை மிக கவனமாக பதிவு செய்தது.
Labels:
நாவல்
3
கருத்துக்கள்
காலப் புதிர்கள் - பாகம் ஒன்று
“இந்த பாடலோடு நான் விடைபெறுகிறேன்! அடுத்து வருவது இனிய கீதங்கள். ரசிச்சு ரசிச்சு கேளுங்க டெக்னோ எஃப் எம்” சந்தோசமாக கூறிவிட்டு தன் ஹெட்போனை கழற்றினான் ஆர்ஜே செல்வா.
இப்பவே நைட் மணி 11 ஆச்சா. கிளம்பனும், நிம்மதியா போய் தூங்கணும். என்றபடியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் சென்று கொண்டிருந்தான். கும்மிருட்டு. சாலையின் யாருமில்லை தூரத்தில் யாரோ நிற்பதுபோல் தெரிந்தது அருகில் சென்றதும் அவர் லிஃப்ட் கேட்பது தெரிந்தது. நிறுத்தினான் பைக்கை.
உடனே சாலையில் இருந்தவன் திடீரென வேகமா வந்தான் கையில் எப்போது பேனாக்கத்தி முளைத்தது என்றே தெரியவில்லை. “ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு போ சத்தம்போட்டே அவ்வளவுதான்.” செல்வா அமைதியாக அவனை ஏற்றிக் கொண்டு வண்டியில் சென்றான்.
இப்பவே நைட் மணி 11 ஆச்சா. கிளம்பனும், நிம்மதியா போய் தூங்கணும். என்றபடியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் சென்று கொண்டிருந்தான். கும்மிருட்டு. சாலையின் யாருமில்லை தூரத்தில் யாரோ நிற்பதுபோல் தெரிந்தது அருகில் சென்றதும் அவர் லிஃப்ட் கேட்பது தெரிந்தது. நிறுத்தினான் பைக்கை.
உடனே சாலையில் இருந்தவன் திடீரென வேகமா வந்தான் கையில் எப்போது பேனாக்கத்தி முளைத்தது என்றே தெரியவில்லை. “ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு போ சத்தம்போட்டே அவ்வளவுதான்.” செல்வா அமைதியாக அவனை ஏற்றிக் கொண்டு வண்டியில் சென்றான்.
Labels:
நாவல்
3
கருத்துக்கள்
பீட்டரும் ரோஸியும் - சிறுகதை
நாங்கள் மேரியின் வீட்டில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிதுதான். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. நாங்கள் மேரியின் வீட்டில் மிகவும் சந்தோசமாகத்தான் இருந்தோம், பீட்டர் வரும் வரை.
பீட்டர் வந்த நாள் முதல் எங்களுக்கு அவனை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கும் எங்களை பிடிக்கவில்லை. அவன் மிகவும் முரட்டுத்தனமானவன். அவன் முரட்டுத்தனம் நாளடைவில் எங்களை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும்போது நாங்கள் வெளியே செல்வதில்லை.
பீட்டர் வந்த நாள் முதல் எங்களுக்கு அவனை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கும் எங்களை பிடிக்கவில்லை. அவன் மிகவும் முரட்டுத்தனமானவன். அவன் முரட்டுத்தனம் நாளடைவில் எங்களை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும்போது நாங்கள் வெளியே செல்வதில்லை.
Labels:
சிறுகதை
2
கருத்துக்கள்
எதுவும் நடக்கலாம்!
விரும்பியது கிடைக்காமல் போகலாம், கிடைத்ததும் பறிக்கப்படலாம்.
வாழ்விற்கு முடிவு போல தோன்றலாம், கூடவே ஒரு காற்புள்ளியும் வரலாம்.
காற்புள்ளி கேள்விக்குறியாய் மாறி சில ஆச்சரியங்களை தரலாம்.
வாழ்வை எண்ணி வியந்து கொண்டே வாழ ஆரம்பித்தால் மேலும் அதியசங்கள் காணலாம்!
மொத்தத்தில் வாழ்வில் எதுவும் நடக்கலாம்! காத்திருங்கள் மாற்றம் வரும் வரை நம்பிக்கை இழக்காமல்!
வாழ்விற்கு முடிவு போல தோன்றலாம், கூடவே ஒரு காற்புள்ளியும் வரலாம்.
காற்புள்ளி கேள்விக்குறியாய் மாறி சில ஆச்சரியங்களை தரலாம்.
வாழ்வை எண்ணி வியந்து கொண்டே வாழ ஆரம்பித்தால் மேலும் அதியசங்கள் காணலாம்!
மொத்தத்தில் வாழ்வில் எதுவும் நடக்கலாம்! காத்திருங்கள் மாற்றம் வரும் வரை நம்பிக்கை இழக்காமல்!
Subscribe to:
Posts (Atom)