tag:blogger.com,1999:blog-49620841708832650502024-03-20T00:25:45.605-07:00எதுவும் நடக்கலாம்!எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-35673232904083572172011-02-22T14:46:00.000-08:002011-02-22T14:46:35.724-08:00BLACK RIVER - (7) கடைசி அத்தியாயம்<table style="-moz-border-radius: 20px 20px 20px 20px; background-color: lime;"><tbody>
<tr><td><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"><b></b><span style="font-size: medium;"><b>மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்!<br />
இதுவும் பெரிய அத்தியாயம். இருக்கிறதிலேயே ரொம்ப பெரிசு! தொடர்ந்து படிக்கிறதுக்கு நன்றி! நன்றி! நன்றி!</b></span></span></div><div style="text-align: center;"><br />
</div></td></tr>
</tbody></table><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZlWUE1nxrYtko59aYSwvnPvPYEdkdlxVNkJRePyTljr5i4tqMBY_8MbXTOiO7RkNYwknPvxMfM-jeescUKUoU4-mJ4bnGcsYkAZvEKTT91-kbq4nxUKBEUzz2VFmJGdCQlFD6a4PmKotw/s1600/7blck.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZlWUE1nxrYtko59aYSwvnPvPYEdkdlxVNkJRePyTljr5i4tqMBY_8MbXTOiO7RkNYwknPvxMfM-jeescUKUoU4-mJ4bnGcsYkAZvEKTT91-kbq4nxUKBEUzz2VFmJGdCQlFD6a4PmKotw/s640/7blck.jpg" width="640" /></a></div><br />
<div style="text-align: center;"><span style="font-size: large;"><b><u>ஏழாம் - கடைசி அத்தியாயம்</u></b></span></div><div style="text-align: center;"><br />
</div><span style="font-size: small;"><u> </u></span><span style="font-size: small;">”சார் நான் உங்களுக்கு தகவல் கொடுத்ததும் நீங்க வரப்போறதும் நாகாவுக்கு எப்படியோ தெரிஞ்சிடுச்சு சார்!” என்று மூச்சு வாங்கி கொண்டே பேசினான் சௌந்தர்.<br />
<br />
“அது எப்படி தெரிஞ்சிருக்கும் எனக்கு புரியுது” என்றார் பாண்டியன்<br />
<br />
“இருந்தாலும் நீங்க யார்கிட்டையும் சொல்லாம யாரையும் கூப்பிடாம போனது தப்புதான் சார்” என்றார் சதீஷ்.<br />
</span><br />
<span style="font-size: small;">அமைதியாக இருந்தார் பாண்டியன்.<br />
<br />
“சார் நீங்க நல்லவர் நேர்மையானவர். ஆனா நீங்க நாகாவுடனான மோதலுக்கு பின் ரொம்ப எமோஷனலாயிட்டீங்க. அவங்களை பிடிக்கிறது முக்கியம்தான் ஆனா அதுக்காக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீங்க!”<br />
<br />
”சதீஷ் நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா ஒரு போலீஸ் ஒரு கிரிமினல் கையால அடிபட்டது எனக்கு அவமானம் அது உங்களுக்கு புரியாது. இவ்வளவு முயற்சித்தும் அவங்க தப்பிச்சிட்டாங்களே”<br />
<br />
சௌந்தர் பேசினான். “சார் அவங்க தப்பிச்சிருக்க முடியாது இந்தப் பக்கமா இருக்கிற ஏழுவண்ண மணல்திட்டு பக்கமாதான் போனாங்க அந்த பக்கம் போனா பிடிச்சிடலாம்”<br />
<br />
“சே, இதை ஏண்டா இவ்வளவு நேரம் சொல்லாம இருந்தே. சதீஷ் வாங்க போலாம் அவங்களை பிடிக்க”<br />
<br />
“சார் எதுக்கு அவசரம் என்னை பார்க்க வேற ஒருத்தன் வரேன்னு சொல்லியிருக்கான்”<br />
<br />
“அவன்கிட்ட உங்க போன் நம்பர் இருக்கில்ல அவன் மறுபடியும் போன்பண்ணா அவசர வேலை அப்புறம் பார்க்கிறோம்னு சொல்லிக்கலாம். நீங்க இப்ப கிளம்புங்க. அப்படியே நம்ம ஸ்குவாடுக்கும் தகவல் தாங்க”<br />
<br />
இவரை திருத்த முடியாது என மனதில் எண்ணிக்கொண்டே பாண்டியன், சௌந்தருடன் கிளம்பினார் சதீஷ்.<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> <br />
”ஏண்டா இவ்வளவு லேட்டு எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?” <br />
<br />
“சாரிடா ராம் கிளம்புற நேரத்தில எடிட்டர் வந்துட்டார். கமிஷ்னரை பார்த்து விஷயத்தை சொன்னாராம். ஆனா கமிஷ்னர் முதல்ல இதை நம்பலையாம் அப்புறம் எடிட்டர் ஸ்ட்ராங்க சொன்னதை கேட்டு, சில அதிகாரிங்க கூட கலந்து பேசிட்டு இன்னைக்குள்ள முடிவு சொல்றேன்னு சொல்லியிருக்காராம்”<br />
<br />
”அப்படியா அருண் நல்லதா போச்சு! ஆனா நான் இப்போ ஒரு போலீஸ்காரர்கிட்ட வேற பேசிட்டேன். போகலன்னா தப்பா போயிடும். என்ன பண்ணுறது?”<br />
<br />
“சரிடா அவரையும் பார்த்தா போச்சு! எடிட்டர் கூட பார்த்தா தப்பில்லை ஆனா நல்லவரான்னு தெரிஞ்சு பேச சொன்னார்!”<br />
<br />
“அதில்ல அருண், இப்ப எங்க மேடம் மேரி வீட்டுக்கு வேலைக்கு வேற போகணும். போகலைன்னா கடுமையா சத்தம் போடுவாங்க இஷ்டம் இல்லன்னா வேலைக்கு வராதன்னு கண்டபடி பேசுவாங்கடா!”<br />
<br />
“ஓ, அப்படியா. ம்! சரி ஒன்னு பண்ணுவோம், நாம இரண்டு பேரும் இப்ப மேரி வீட்டுக்கு போவோம் நானே இந்த மாதிரி ஒரு அவசர விஷயமா வெளியே போகனும்னு சொல்றேன். நான் சொன்னா கேப்பாங்க. வா அவங்களை பார்த்துட்டு அப்புறம் அப்படியே அந்த போலீஸ்காரரை பார்த்து விஷயத்தை சொல்லிடலாம்”<br />
<br />
“சரிடா வா போகலாம்”<br />
<br />
ராமும், அருண்பிரசாத்தும் மேரி வீட்டுக்கு கிளம்பினார்கள்.<br />
<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">ஜெயந்த் எதிர்பார்த்தது போலில்லை ஜானுடனான சண்டை. அவன் நோக்கம் முடிந்தவரை துப்பாக்கியை உபயோகிக்காமல் ஜானை வீழ்த்துவது. ஆனால் எக்காரணம் கொண்டும் ஜான் இப்போது சாகக் கூடாது. ஆண்டர்சனின் காதலி, பிறகு அந்த எக்ஸ், அப்புறம்தான் ஜான், கடைசியாக ஆண்டர்சன் தற்கொலை செய்து கொண்டது போல இருக்க வேண்டும்.<br />
<br />
இதுதான் பிரபாகரிடமும் ஜெயந்திடமும் பிஎஸ்வி சொன்ன திட்டம். ஆனால் ஜான் அவ்வளவு சீக்கிரத்தில் ஓய்ந்து விடவில்லை. அவனின் தேர்ந்த பயிற்சிகள் ஜெயந்தை திணறச் செய்தன. தன் இரண்டு மூன்று மாத பயிற்சியெல்லாம் ஜானிடம் காட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் அங்கே இயங்கிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் ஏஞ்சலினாவை சுற்றியே இருந்தது. குமார் ஒழுங்காக அவளை கடத்தி விடுவானா என எண்ணிக் கொண்டிருந்தான்.<br />
<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">செல்வா அந்த கல்லறையிலிருந்து வெளியே வந்தான் அந்த கல்லறையை மூடி அதன் மேல் பழையபடி பெரிய கல்லை வைத்தான். உள்ளேயிருந்து பிரசாத், ரமேஷ், மாதவன், மங்குனி, பாபு ஆகியோரது குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. வெளியே இருந்து யாராவது கல்லை நகர்த்தினாலொழிய அவர்களால் வெளியே வர முடியாது. அதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.<br />
<br />
செல்வா நகைகள் இருந்த சிறிய பெட்டியுடன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் பின்னாலேயே நாகாவும், யோகேஷும் பின் தொடர்ந்தனர். உள்ளுணர்வு காரணமாக யதேட்சையாக திரும்பிய செல்வா, தன்னை இருவர் பின் தொடர்வதை பார்த்தான். <br />
<br />
அவன் பார்த்து விட்டதை அறிந்த யோகேஷ், “நாகா அவன் பார்த்துட்டான் ஓடிப் போய் பிடி” என வேகமாக துரத்த ஆரம்பித்தார்கள். யார் அவர்கள் எதற்காக தன்னை துரத்துகிறார்கள் என புரியாவிட்டாலும் இருவர் துரத்துவது, மற்றும் தன் கையிலுள்ள நகைப்பெட்டி காரணமாக செல்வா வேகமாக ஓட ஆரம்பித்தான்.<br />
<br />
பின் திரும்பி பார்த்த போது அவனை நோக்கி வெறியுடன் நாகாவும் யோகேஷும் ஓடி வருவது தெரிந்தது. எங்கே போவதென தெரியாமல் எதிர்த் திசையில் வேகமாக ஓடினான் செல்வா.<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">வீட்டின் பின்பக்கமாக நுழைந்த பிரபாகர் படிக்கட்டுகளில் மெதுவாக ஏறினான். மாடியிலிருந்த அறையில் சாம் ஆண்டர்சனும் அவர் காதலியும் படுக்கையில் ஒன்றாக இருப்பது அவனுக்கு ஜன்னல் வழியாக தெரிந்தது. முதலில் அவர் காதலியை கொல்லனும் அவ்வளவுதானே!. அவளை சுட்டா ஆண்டர்சன் யாருன்னு பார்க்க வெளியே வருவார் அவரை அடிச்சு மயக்கப்படுத்திடலாம். எண்ணிக் கொண்டே ஜன்னல் வழியாக சைலன்சர் துப்பாக்கியால் குறிபார்த்தான் பிரபாகர்.<br />
<br />
ஜன்னல் வழியாக ஆண்டர்சன் காதலியின் தலை தெரிந்தது. துல்லியமாக குறிபார்த்து சுட்டான் பிரபாகர். கடைசி சமயத்தில் ஆண்டர்சனை செல்லமாக அடிக்க குனிந்த அவர் காதலி நகர குண்டு அவள் முதுகில் பாய்ந்தது. அவள் அலறிக்கொண்டே சாய்ந்தாள். சாம் ஆண்டர்சன் கத்தினார்.<br />
<br />
“மேரி........................”<br />
<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">ஏஞ்சலினா தன் கையிலிருந்த முகவரியை இன்னொரு முறை பார்த்து கொண்டாள். சே இங்க ராம் தன்னோட ஃபிரண்டு வீடு இருக்குன்னு ஒரு தடவை சொன்னாரில்ல! மேரி மேடம் வீடு கூட பக்கத்திலதான் இருக்குன்னார். ஆனா எதையும் ஒழுங்கா கேட்டு வைச்சுக்கவே இல்ல! சே! <br />
<br />
தன்னைதானே திட்டி கொண்டாள். ராம் இந்நேரம் மேரி வீட்டுக்கு போயிருப்பாரா? நம்மை அங்கே பார்த்தா என்ன சொல்வார் என பல எண்ணங்களோடு மேரியின் வீட்டை தேடிக் கொண்டு போனாள் ஏஞ்சலினா.<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">மேரியின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அருண்பிரசாத்தின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்து பேசினான்.<br />
<br />
“சார் சொல்லுங்க சார்” “யாரு, என் பிரண்டா என் கூடத்தான் இருக்கான்” “ஓ அப்படியா சார் ரொம்ப சந்தோசம் சார்” “எப்படியோ நல்லபடியா முடிஞ்சா சரி! ரொம்ப நன்றி சார்” “நான் இப்ப மேரி மேடம் வீட்டு போய்ட்டு அங்க வந்துடுறேன் சார்” போனை வைத்து விட்டு சந்தோசமாக ராமிடம் பேசினான் அருண்.<br />
<br />
“டேய் ராம் எங்க எடிட்டர் பேசினார் கமிஷ்னர் நம்ம சொன்னதை நம்பிட்டாராம் உடனே பிரசிடண்டுக்கு தகவல் கொடுத்து அவர் செக்யூரிடியை அதிகப்படுத்த போறாராம். பிஎஸ்வி, எஸ்.கே மேல நடவடிக்கையும் எடுக்கறேன்னு சொல்லியிருக்காராம். எதுக்கும் உன்னையும் ஏஞ்சலினாவையும் பார்க்க வரச் சொன்னார். நீங்க இரண்டு பேரும் நாளைக்கு அவரை போய் பாருங்க”<br />
<br />
“ரொம்ப சந்தோசம் எப்படியோ அருண் எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி. அப்போ இப்ப நாம அந்த போலீஸ பார்க்க வேண்டியதில்லைல! அப்ப நான் இப்படியே மேரி மேடம் வீட்டு வேலைக்கு போறேன்.”<br />
<br />
“சரிடா. நானும் வரேன் அவங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு! அப்படியே அந்த போலீஸ் போன் பண்ணா வேற ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்”<br />
<br />
”ரொம்ப நன்றிடா” ”நமக்குள்ள நன்றி எதுக்குடா!” அருணும் ராமும் சந்தோசத்துடன் மேரி வீட்டிற்கு சென்றார்கள்.<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">பிஎஸ்வி ஜீப்பிலிருந்து இறங்கினார். மேரி வீட்டின் கதவை தட்டாமலேயே உள்ளே நுழைந்தார். அதேசமயம்....<br />
<br />
<br />
பிரபாகர் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. ஆண்டர்சன் மேரிக்கு அடிப்பட்டிருப்பதை கண்டு அவளை யார் சுட்டார்கள் என பார்க்க வெளியே வந்தார். ஆனால் பிரபாகரின் தாக்குதலிலிருந்து விலகி தப்பினார். பிரபாகர்-ஆண்டர்சனுக்கு இடையே பெரும்போராட்டம் நடந்ததில் இருவரும் படிக்கட்டில் உருண்டு விழுந்தனர். போராட்டத்தில் பிரபாகருக்கு பலமாக கால்களில் காயம்பட்ட போதும் சாமார்த்தியமாக ஆண்டர்சனை அடித்து மயக்கமாக்கினான். திட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு எழுந்தபோது எதிரே துப்பாக்கியுடன் நின்றார் பிஎஸ்வி.<br />
<br />
”பிரபாகர், என்கிட்டேயே நீயும் ஜெயந்தும் டபுள்கேம் ஆடுறீங்களா? நம்ம திட்டத்தின் தொடர்ச்சியா உன்னையும் ஜெயந்தையும் சேர்த்து முடிச்சிட வேண்டியதுதான்.”<br />
</span><br />
<span style="font-size: small;"> பிரபாகர் தன் திட்டம் வெளிப்பட்டதையும், தான் மரண விளிம்பின் உச்சியில் இருப்பதையும் உணர்ந்து, எழுந்திருக்கவும் முடியாமல் பயத்தில் உறைந்தான்.<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">செல்வா தன்னை துரத்திக் கொண்டிருந்த நாகா, யோகேஷிடமிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தான். எங்கே செல்வதென தெரியாமல் ஓடி வந்த அவன் முன் ஒரு ஒற்றை வீடு இருந்தது. அவசரமாக அதன் பின்பக்கம் ஓடினான். அப்போது..........<br />
<br />
ஜெயந்த் சண்டையில் சோர்ந்து போயிருந்தான். ஜானிடம் ஆயுதம் எதுவுமில்லாத போதும் அவன் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. தன் துப்பாக்கியை பிரோயோகிக்க முடிவெடுத்து துப்பாக்கியால் ஜானை சுட்டான். ஜான் மயிரிழையில் தப்பிக்க குண்டு செல்வாவை துரத்தி வந்த நாகாவின் மேல் பாய்ந்தது. இவன் யார் குறுக்கே என எண்ணிக்கொண்டே இம்முறை மிகச்சரியாக ஜானை சுட்டான். ஜானில் இடுப்பில் குண்டு பாய்ந்தது. ஜான் வீழ்ந்தான்.<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ***************************************************************</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">வீட்டின் பின்பக்கமாக நுழைந்த செல்வாவை துரத்தி பிடித்தான் யோகேஷ். யோகேஷ் நகைப்பெட்டியை பறிக்க முயன்றான் இருவருக்குள்ளும் சண்டை பலமானபோது...<br />
<br />
அருகிலிருந்த அறையில் இருந்த பிஎஸ்வி சத்தம் கேட்டு வாசல் பக்கம் வந்தார். அதேசமயம் பிரபாகர் உயிர் பயத்தால் நகர்ந்து கொண்டே அருகிலிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டான். பிஎஸ்வி வாசலருகே சண்டைபோட்டு உருண்டு கொண்டிருந்த செல்வாவையும் யோகேஷையும் கவனித்தார். அவர்களை எளிதாக மடக்கினார். அவர்களை வீழ்த்தி போட்டிருந்த சட்டைகளால் கட்டி போட்டு முடித்த சமயத்தில்..........<br />
<br />
<br />
ஜெயந்த் உள்ளே நுழைந்தான். அவன் துப்பாக்கி முனையில் ஏஞ்சலினாவை நடத்தி வந்தான். அங்கே இருந்த பிஎஸ்வியை கண்டு ஆச்சரியமடைந்தான்.<br />
”பாஸ் நீங்களா..? பிரபாகர் எங்கே? இவ இங்கே மேரியை பாக்க வந்தா போல, நான் கவனிச்சு பிடிச்சிட்டேன். நடுவில் எவனோ ஒருத்தன் குறுக்கில வந்து அவனை வேற சுட வேண்டியதா போச்சு! ஆனா ஜானை விடவில்லை! அவனையும் சுட்டுட்டேன். ஆனா இரண்டு பேரும் இன்னும் சாகலை அதுக்குள்ளே நம்ம திட்டத்திட்ட முடிச்சிடலாம்! ஆமா, நீங்க எங்க இங்க?”<br />
<br />
பேசிய ஜெயந்தை பார்த்து புன்னகைத்த பிஎஸ்வி ”கூடுதலா உன்னையும் பிரபாகரையும் முடிக்க வேண்டியது இருக்கே ஜெயந்த்! அதான் நான் வந்தேன்!” <br />
<br />
“பாஸ்......”<br />
<br />
துப்பாக்கியால் ஜெயந்தை குறிபார்த்துக் கொண்டே, “ப்ளடி ஷிட்! என்னையே பிளாக்மெய்ல் பண்ண நினைக்கிறீங்களா உங்களை விட மாட்டேன்.”<br />
<br />
”பாஸ் என்னை மன்னிச்சிருங்க எல்லா திட்டமும் பிரபாகர்தான் பண்ணான். நான் ஏஞ்சலினா மட்டுதான் வேணும்னு நினைச்சேன் சாரி பாஸ் சாரி...”<br />
<br />
”இதை என்னை நம்ப சொல்றியா? பிரபாகரை இந்நேரம் முடிச்சிருப்பேன், இந்த மடப்பசங்க வேற வந்துட்டாங்க. யார்டா நீங்க, எதுக்கு இங்க வந்தீங்க”<br />
<br />
யோகேஷ் “அது புதையல்.. எங்களுக்கு வேணும்” என உளறினான். செல்வாவும் பயத்துடன் ”அது ஒரு பழங்காலத்து புதையல் அதை எடுத்து வரப்ப இவங்க என்னை துரத்திகிட்டு....”<br />
<br />
“புதையலா???” ஆச்சரியத்துடன் நகைப்பெட்டியை திறந்தார் பிஎஸ்வி. உள்ளே பழங்காலத்து நகைகள்! “அட! கொல்ல வந்த இடத்தில புதையலா?”<br />
<br />
“பாஸ் என்னை மன்னிச்சிருங்க பிரபாகர்தான் எல்லாத்துக்கும் காரணம். எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு எதுவும் வேண்டாம் இந்த புதையல் எல்லாமே உங்களுக்குதான். நீங்க இந்த கொலைக்காக தரேன்னு சொன்ன பணம் கூட வேண்டாம். ஏஞ்சலினா மட்டும் தாங்க.” <br />
“நாளைக்கு அவகிட்ட சொத்துல கையெழுத்து வாங்கிட்டு அவளை விக்கத்தானே போறீங்க என்கிட்ட கொடுத்திடுங்க. நம்ம ரகசியமும் போகாது ப்ளீஸ்” கெஞ்சினான் ஜெயந்த்.<br />
<br />
யோசித்த பிஎஸ்வி “உன்னை நம்பலாமா?”<br />
<br />
”நிச்சயமா நம்பலாம் எனக்கு எதுவும் வேண்டாம். ஐ நீட் ஏஞ்சலினா.. ஏஞ்சலினா ஒன்லி!!!”<br />
<br />
நடப்பதையெல்லாம் மிகுந்த அதிர்ச்சியுடன் எதுவும் பேசமுடியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலினா. <i>ராம் நீ எங்கே? இப்ப இங்க வந்துராதே! உனக்கும் ஆபத்து!</i> என எண்ணிக் கொண்டிந்தாள்.<br />
<br />
யோசித்து பிஎஸ்வி “உன் டீலுக்கு ஒத்துக்குறேன் ஜெயந்த்” என்று சொன்ன போது கதவு தட்டப்பட்டது.<br />
<br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;">***************************************************************</span></div><br />
<span style="font-size: small;"> “மேடம்.. மேரி மேடம். நான் ராம் வந்துருக்கேன்! மேடம்... ”<br />
<br />
கதவுக்கு வெளியே ராமும் அருண்பிரசாத்தும் நின்றிருந்தனர். கதவை திறந்தார் பிஎஸ்வி. அவரை அங்கே எதிர்பார்க்காத ராம் “சார் நீங்க இங்க எப்படி...”<br />
<br />
பதில் சொல்லாது சைகையால் உள்ளே வரச் சொன்ன பிஎஸ்வியின் கண்களில் இருந்த கடுமையை கண்டு, அவரை பின் தொடர்ந்தான் ராம். அங்கே இருவர் கட்டி போடப்பட்டிருக்க, ஒருவன் துப்பாக்கி முனையில் ஏஞ்சலினாவை நிறுத்தியிருந்ததை பார்த்தார்கள் ராமும் அருணும்.<br />
<br />
ராமை பார்த்தவுடன் ஏஞ்சலினா, “ராம்” என கூப்பிட்டாள். “உனக்கு இவனை தெரியுமா” என கேட்ட ஜெயந்திடம் “அவன் இவள் காதலன்” என்றார் பிஎஸ்வி.</span><br />
<span style="font-size: small;"><br />
ராமுக்கு எல்லாமே அதிர்ச்சியாக இருக்க, ஏஞ்சலினாவை நோக்கி “ஏஞ்சலினா” என கத்திக் கொண்டே அவன் நகர்ந்தபோது.......<br />
<br />
<br />
<b>அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான் அருண்பிரசாத்.............</b><br />
</span><br />
<span style="font-size: small;">“அடிங்! என்னா காதல் பொங்குதோ! ஓடுறே! உன்னை எதுக்கு கூட்டிட்டு வந்தா? நீ லவ் பண்ணுறியா?”<br />
<br />
“அருண் நீயா ஏண்டா... ”<br />
<br />
“ஹா... ஹா... ஹா! என்னடா பழகுன நண்பனே இப்ப இப்படி பண்ணுறானேன்னு பாக்குறியா? லூசே! இந்த கொலை திட்டத்தில் நீயும் ஒரு விக்டிம்டா! உனக்கு புரியலைல? சொல்றேன் கேளு”<br />
<br />
“நான் ரிப்போர்டர் வேலை கூட இன்னோர் வேலையும் பார்த்துகிட்டு இருந்தேன்! அதான் பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களை தெரிஞ்சிகிட்டு பிளாக்மெய்ல் செஞ்சு பணம்பறிக்கிறது! அப்படி ஒரு தடவை ஆண்டர்சனை பின் தொடர்ந்தப்ப அவர் கள்ளக்காதல் விஷயம் தெரிஞ்சிச்சு! அவர் பிரசிடண்ட்றதுனால இதை அவர்கிட்ட பிளாக்மெய்ல் பண்ண ஒரு தயக்கம். அதான் எதிர்க்கட்சி தலைவர் எஸ்கேவை சந்திச்சேன். விஷயத்தை சொன்னேன் அவர் பெரிய திட்டம் போட்டார். எனக்கு பணமும் தந்தார். திட்டம் என்னான்னா சாம் ஆண்டர்சன் கள்ளக்காதல் உலகத்துக்கு தெரியிறப்ப அவர் உயிரோட இருக்க கூடாது. ஆனா அது கொலையாவும் இருக்க கூடாது. அதனால <i>மேரிக்கு வேறொருத்தன் கூட பழக்கம் இருக்கிறது தெரிஞ்சு ஆத்திரத்தில் அவனையும் மேரியையும் கொன்னுட்டு சாம் ஆண்டர்சன் தற்கொலை பண்ணிக்கிட்டார்</i> அப்படின்னு மீடியாவும் அரசாங்கமும் நினைக்கிற மாதிரி இருக்கணும்கிறதுதான் திட்டம். அந்த இன்னொருத்தன், கள்ளக்காதலன் தாண்டா நீ!!!!” சிரித்தான் அருண்பிரசாத்.<br />
<br />
“உன்னை இங்க மேரிகிட்ட சேர்த்தது அதுக்காகத்தான். இல்லன்னா உன்னை மாதிரி கேணையனையெல்லாம் இங்க வெளிநாட்டில் வேலைக்கு சேர்த்து விடனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? இன்னைக்கு இங்க வேலை அப்படின்னு வரச் சொன்னது என் ஏற்பாடுதான். இந்த பிஎஸ்வியும் அவர் ஆளுங்களும் மீதி பேரை முடிச்சிருவாங்க. என்ன பிஎஸ்வி நான் சொன்ன மாதிரி இவனை இங்க கூட்டிட்டு வந்துட்டேன் பார்த்தீங்களா நீங்கதான் சொன்ன வேலை இன்னும் முடிக்கலை!”<br />
<br />
ராம் அதிர்ச்சியுடன் பார்ப்பதை கண்ட அருண் பேசுவதை தொடர்ந்தான். “என்ன ராம் அப்படி பாக்குற! எடிட்டர்கிட்ட பேசுனேன்னா, ஹா ஹா அது பொய். நான் யார்கிட்டவும் எதுவும் சொல்லலை!!! இவரும் எஸ்கேவும் பேசுனதை கேட்டுட்டு நீங்க என்கிட்டேயே வந்து சொன்னீங்க நானும் உங்களை போலீஸ்க்கு போக விடாம பார்த்துகிட்டேன், பிஎஸ்விகிட்டயும் சொன்னேன். நடுவில் நீ எவனோ ஒருத்தன் சொன்னான்னு போலீஸ்கிட்ட போக பார்த்தே. உன்னை தடுத்து இங்க கூட்டி வரத்தான் நான் உன் கூடவே வந்தேன்! நான் போன் பேசுனது கூட பிஎஸ்வி கிட்டதான் உன்னை இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லத்தாண்டா முட்டாள்! அங்க எதுவோ சொதப்ப இவளும் இங்க உன்னை பார்க்க வந்திட்டா போல”<br />
<br />
ராம் அதிர்ச்சி கோபத்துடன் அருண்பிரசாத்தை பார்த்தான்.<br />
<br />
“ஹேய், எங்களை மீறி நீ எதுவும் பண்ண முடியாதுடா! என்ன, பிஎஸ்வி நீங்க மேரியை முடிச்சுட்டீங்களா”<br />
<br />
“ஷி இஸ் ஆன் த வே டு ஹெவன்... நெக்ஸ்ட் இவன்தான்”<br />
<br />
“ஏஞ்சலினா காதலனை என் கையாலையே கொல்றேன்” என சொல்லிகொண்டே துப்பாக்கியை குறிபார்த்தான் ஜெயந்த்.<br />
<br />
“டுமீல்! டூமீல்!!!”<br />
<br />
ஜெயந்த் கையிலிருந்த துப்பாக்கி எகிறி விழுந்தது. வாசலருகே பாண்டியனும் சதீஷும் நின்றிருந்தனர்.<br />
<br />
“எல்லோரும் துப்பாக்கியை கீழே போடுங்க.. இந்த வீட்டை சுத்தி போலீஸ் ஸ்க்வாட் இருக்கு. யாரும் தப்பிக்க முடியாது.<br />
<br />
போலீஸ் ஸ்குவாட் வீட்டில் நுழைந்தது. பாண்டியன் சதீஷ்க்கு பின்னால் மாதவன், பிரசாத், ரமேஷ் நின்றிருக்க.. மங்குனியும் பாபுவும் கையில் விலங்குடன் இருந்தனர்.</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: large;"><b>*********************************** முற்றும் ***********************************</b></span></div><span style="font-size: small;"> <br />
<span style="color: #000066;"><u><b>பின் கதை:</b></u></span></span><br />
<span style="font-size: small;"><span style="color: #000066;"><u><b><br />
</b></u></span><span style="color: #000066;">அடுத்து வந்த சில நாட்களில் சில செய்திகள் மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தன.......<br />
</span><span style="color: #000066;"> </span></span><br />
<span style="font-size: small;"><span style="color: #000066;">“சாம் ஆண்டர்சன் கொலை முயற்சி! அவர் காதலியும் உதவியாளரும் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர்”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“சாம் ஆண்டர்சனை கொலை செய்ய முயன்றதற்காக எதிர்கட்சி தலைவர் எஸ்.கே, செக்யூரிட்டி ஆபிசர் பிஎஸ்வி, அவரின் உதவியாளர்கள் ஜெயந்த், பிரபாகர், ரிப்போர்ட்டர் அருண்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“கள்ளக்காதல் அம்பலமானதால் ஆண்டர்சன் பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்தார். அரசியலுக்கும் முழுக்கு!”</span><br style="color: #000066;" /><span style="color: #000066;"><br />
”பழங்கால புதையலை சட்ட விரோதமாக அடைய முயற்சி செய்த புரொபசர் மங்குனி, செல்வா, பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புதையல் நகைகள் அரசு மியூசியத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான நாகா, யோகேஷ்க்கு 5 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்ரூவரான கூட்டாளி சௌந்தர்க்கு குறைந்தபட்ச தண்டனை கிடைத்தது.”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“போதை மருந்து குற்றவாளிகளை பிடித்ததற்காகவும், கொலை முயற்சியை தடுத்ததற்காகவும் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தது.”</span><br style="color: #000066;" /> </span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"><span style="color: #000066;">***************************************************</span></span></div><br />
<span style="font-size: small;"><span style="color: #000066;"> ”பிரசாத் நாம நமக்கு சொந்தமில்லாத பொருள் மேல ஆசைப்பட்டா, என்ன நடக்கும்னு பார்த்தேயில்ல! ஏதோ அன்னைக்கு யாரையோ தேடி வந்த போலீஸ்க்கு நம்ம குரல் கேட்டு காப்பாத்துனாங்க. இல்லன்னா எல்லோரும் என்ன ஆகியிருப்போமோ!”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“புரிஞ்சிச்சு தாத்தா, நம்ம இனத்தின் கொள்கைபடி நானும் நேர்மையானவனா வாழ்வேன். நான் இனிமே அளவுக்கு மீறி ஆசைப்பட மாட்டேன். இனி கிடைக்கிறதை வச்சு சந்தோசமா வாழ்வோம்”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
அங்கே வந்தார் ரமேஷ்.</span><span style="color: #000066;"> “பிரசாத்”</span><br style="color: #000066;" /><span style="color: #000066;"><br />
“சார் கிளம்பறீங்களா......!”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“ஆமா பிரசாத். எங்க பரம்பரைக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும்னு நினைச்சு தேடி வந்த புதையலை, வேண்டாம்னு கிளம்பறேன். செல்வம் மேல் அதிக ஆசைப்படுறதினால என்ன நடக்கும்னு எங்க மூதாதையர்கள் வாழ்க்கையிலும் இங்கு நடந்த நிகழ்வுகளிலும் தெரிஞ்சுகிட்டேன். சந்தோசம் பொருள்களால் வரதில்ல, நல்ல மனிதர்களால வருதுன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்.”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“அந்த புதையல் எங்க அரச பரம்பரைக்கு சொந்தம்னு விளக்கமா அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டிருக்கேன். ஒருவேளை அது கிடைச்சாலும் இங்க இருக்கிற ஏழை மக்களுக்கு பயன்படுற மாதிரி அதை பயன்படுத்துவேன். எனக்கு இங்க கிடைச்ச புதையல் உங்களை மாதிரி உறவுகள்தான்!”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
நெகிழ்ச்சியுடன் மாதவனும் பிரசாத்தும் ரமேஷை வழியனுப்பினர்.</span><br style="color: #000066;" /><span style="color: #000066;"><br />
“இனி வருசாவருசம் இங்க வருவேன் நீதான் பிரசாத் எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டு போகனும் ஒரு டூரிஸ்ட் கைடா இல்ல ஒரு சகோதரனா!”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
</span></span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"><span style="color: #000066;">***************************************************</span></span></div><div style="text-align: center;"><br />
</div><span style="font-size: small;"><span style="color: #000066;"> அதே பழைய லைட் ஹவுஸ்.</span><br style="color: #000066;" /><span style="color: #000066;"><br />
”ராம் என்னென்னவோ நடந்துபோச்சு. இப்ப எனக்குன்னு யாருமில்ல........இப்ப எனக்கு எனக்கு இருக்கிற ஒரே உறவு நீங்க மட்டும்தான்...”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“ஏஞ்சலினா அழாதே... இங்கே பார், என்னை பார். எனக்கும் நீதானே இருக்கே. அழாதே.........சரி ரொம்ப நாளா நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அன்பை வார்த்தைகளால நானும் சொல்லலை..நீயும் சொல்லவே இல்லை. இப்ப சொல்றியா?”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
ஏஞ்சலினா வெட்கத்துடன் அமைதியாக தலைகுனிந்தாள்.</span><br style="color: #000066;" /><span style="color: #000066;"><br />
ராம் அவளருகே நெருங்கி அவள் கைகளை பற்றி மெல்ல முத்தமிட்டான். </span></span><br />
<br />
<span style="font-size: small;"><span style="color: #000066;">“ஏஞ்சல், ஐ லவ் யூ”</span><br style="color: #000066;" /> <span style="color: #000066;"><br />
“ஐ டூ லவ் யூ ராம்”</span><br />
</span><br />
<div style="font-family: Verdana,sans-serif; text-align: center;"><b><span style="background-color: white; color: red; font-size: large;">--- THE END ---</span><span style="font-size: large;"><br style="color: #000066;" /></span></b></div><span style="font-size: small;"><br />
</span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"> ------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>--------------</span></div><span style="font-size: small;"> <br />
<u><b>இத்துடன் கதை முடிகிறது.... ஆனா இங்கிலீஷ் படம் மாதிரி, படக் கடைசி ட்விஸ்ட் வேணுங்கிறவங்களுக்காக...<br />
</b></u></span><span style="font-size: small;"><b><span style="background-color: white; color: #330033;"> </span></b></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><span style="font-size: small;"><b><span style="background-color: white; color: #330033;"><span style="color: purple;">அந்த மியூசியம் நள்ளிரவில் அமைதியாக நின்று கொண்டிருந்தது. இருட்டில் குதித்தான் அவன். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த மொட்டைத் தலைக்காரன் கன்னத் தழும்பை கீறிக் கொண்டே மியூசத்தினுள் நுழைந்தான்....................</span><wbr style="color: purple;"></wbr><span style="color: purple;">..............</span></span></b></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj64PWpsNkCedInpGY6RqoB1nMkb8xCQ-HtdNJMuzdT8SwGEcAYLoU8pt9PXhGbFlS0GUjTF3geadwPAzjorpsI5j70KHMAQ7MyXMo6YEIQnAsi3sYzvBWKFEBGuO0F738jd9gu9joE0jec/s1600/final+black.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj64PWpsNkCedInpGY6RqoB1nMkb8xCQ-HtdNJMuzdT8SwGEcAYLoU8pt9PXhGbFlS0GUjTF3geadwPAzjorpsI5j70KHMAQ7MyXMo6YEIQnAsi3sYzvBWKFEBGuO0F738jd9gu9joE0jec/s1600/final+black.jpg" /></a></div><span style="font-size: small;"><b><span style="background-color: white; color: #330033;"><span style="color: purple;"> </span><br />
<table style="-moz-border-radius: 20px 20px 20px 20px; background-color: #45ffa5;"><tbody>
<tr><td><br />
<span style="font-size: small;"><b> </b></span><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"><b> இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!</b></span><br />
<span style="font-size: small;"><u> <i><span style="color: red;">அன்புடன் எஸ்.கே</span></i></u></span><br />
</div></td></tr>
</tbody></table></span></b></span><br />
<br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"> <a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart7.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b7.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-4854645215965045152011-02-21T03:49:00.000-08:002011-02-22T14:47:31.784-08:00BLACK RIVER - அத்தியாயம் ஆறு<u><b style="color: red;"><span style="font-size: medium;">நண்பர்களே தொடர்ந்து பொறுமையாக படித்து வருவதற்கு மிக்க நன்றி!</span></b></u><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKc29VN38jijLLJQBgF_XSpPQ7DnSLOQBuiZ1eLReZPc2LZDBK5mAvgj9WRxzXXk4kZqq0VXAsYPJZIv1suyllShsI_bvfgw3Psfg9jYJVm9lj5edoQtZyCqZfsZ-rjK7kPAfZbxcaWmQW/s1600/black+6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKc29VN38jijLLJQBgF_XSpPQ7DnSLOQBuiZ1eLReZPc2LZDBK5mAvgj9WRxzXXk4kZqq0VXAsYPJZIv1suyllShsI_bvfgw3Psfg9jYJVm9lj5edoQtZyCqZfsZ-rjK7kPAfZbxcaWmQW/s640/black+6.jpg" width="640" /></a></div><br />
<div style="text-align: center;"><u><span style="font-size: x-large;">அத்தியாயம் ஆறு</span></u></div><br />
<br />
ராம் சதீஷை பார்க்க ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தான். திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது. அருணிடம் இதை சொன்னால் என்ன? அவனுக்கும் அவன் எடிட்டருக்கும் பாவம் தொல்லை தந்து விட்டேன்! அருண்பிரசாத்துக்கு ராம் ஃபோன் செய்தான்.<br />
<br />
“அருண் நான் ராம் பேசறண்டா”<br />
<br />
“சொல்லுடா! எடிட்டர் இப்பத்தான் பேசுனார், கமிஷ்னர் கிட்ட பேசப் போயிருக்கார். அவர் மதியம் என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு சொல்றாராம். நீ மதியம் மேல வந்துடு!”<br />
<br />
”இல்லடா இங்க என் ஃபிரண்டு ஒருத்தர் மூலமா ஒரு போலீஸை பார்க்க போறேன், அவர்கிட்ட சொல்லலாம்னு”<br />
<br />
”என்னடா சொல்றே? இப்ப எதுக்கு திடீர்னு, சரி அவர் நல்லவரா?”<br />
<br />
“இல்லடா அவர் நல்லவர்தானாம் சரி நீயும் கூட வந்தா நல்லாதான் இருக்கும்”<br />
<br />
“அப்படியா சரி நீ எங்க இருக்க” “ஓ அந்த ரெஸ்டாரண்ட் பக்கமாவா சரி நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க வந்துடுறேன் நாம இரண்டு பேரும் சேர்ந்து போய் அவரை பார்ப்போம் நான் என் எடிட்டர் சொன்னதையும் சொன்னா நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும்”<br />
<br />
ராம் ஃபோனை வைத்து விட்டு அருணுக்காக காத்திருக்க தொடங்கினான்.<br />
<a name='more'></a><br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
<div class="gmail_quote">“ஓடாத நில்லு”<br />
<br />
“ஓடாத சௌந்தர் நீ எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”<br />
<br />
நாகாவும் யோகேஷும் சௌந்தரை வேகமாக துரத்தி ஓடிக் கொண்டிருந்தனர்.<br />
<br />
சௌந்தர் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. நாம் பாண்டியனுக்கு தகவல் கொடுத்தது இவங்களுக்கு எப்படி தெரிந்தது. பாண்டியன் வரதுக்குள்ளே தப்பிச்சிட்டாங்களே. நான்தான் சொன்னேன்னு வேற தெரிஞ்சு போச்சு, இவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது? <br />
<br />
உயிர் பயம் சௌந்தரை வேகமாக ஓட வைத்தது. சந்து பொந்துகளில் ஓடினான். பின்னால் துரத்தி வந்த நாகாவும் யோகேஷும் சௌந்தர் எங்கே சென்றான் என தேடினர்.<br />
<br />
“எங்கே போனான் தெரியலை மவனே மாட்டினான் அவ்வளவுதான்”<br />
<br />
“சே மிஸ் பண்ணிட்டமோ”<br />
<br />
“நாகா அந்த கலர் கலரா இருக்கே மணல்திட்டு அந்த பக்கமாதான் அவன் போனான் வா போய் பார்ப்போம்!”<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
வண்டியில் துப்பாக்கி முனையில் இருந்த ரமேஷும் பிரசாத்தும் அமைதியாக இருந்தன. பிரசாத் என்ன பேசுவது என தெரியாமலும் தன் வீட்டை நோக்கி செல்கிறார்கள் என்ற அதிர்ச்சியாலும் எதுவுமே பேசாமல் இருந்தான்.<br />
<br />
“சார் ஏழு வண்ண மணல்திட்டுக்கு வந்தாச்சு இங்கே எங்க கான்வாஸ் பழங்குடி மக்களை தேடுறது”<br />
<br />
“பார்ப்போம் அதோ அந்த வீட்டருகே ஒரு பெரியவர் நிக்கிறார் பார் அவர்கிட்ட கேப்போம்”<br />
<br />
“தாத்தா வணக்கம்”<br />
<br />
“வணக்கம்”<br />
<br />
“இங்க பழங்குடி மக்கள், குறிப்பா கான்வாஸ் பழங்குடி மக்கள் எங்க இருப்பாங்கன்னு தெரியுமா”<br />
<br />
“எதுக்கு கேக்கிறீங்க?”<br />
<br />
“அது.. அது வந்து, நாங்க ஆராய்ச்சி மாணவர்கள். இவர் எங்க புரொஃபசர். பழங்குடி மக்கள் அவர்களின் நாகரீகங்கள், அவர்களின் இன்றைய நிலை பற்றி ஆராயறோம் அதைப் பற்றி கவர்மெண்டுக்கும் எழுதிப் போடுவோம் அதுக்குதான்” பாபு சரளமாக பொய் சொன்னான்.<br />
<br />
“அப்படியா நல்ல விஷயம் அது ஏன் குறிப்பா கான்வாஸ் பழங்குடி மக்களை பற்றி கேட்கறீங்க”<br />
<br />
மங்குனி பேசினார் “அதுவா, அவங்க ரொம்ப பழமையான இனத்தை சேர்ந்தவங்களா அவங்க ரொம்ப குணமுடையவர்கள்னு கேள்விப்பட்டிருக்கோம்”<br />
<br />
“ஆமா அவங்க நேர்மையானவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர் நானும் கான்வாஸ் இனத்தை சேர்ந்தவன்தான்”<br />
<br />
“நீங்களா” <br />
<br />
”என்னைபார்த்தா இந்தியன் மாதிரி இருக்கா என் தாத்தா இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு இவங்க கூடவே வாழ ஆரம்பிச்சவர். இப்ப எங்க இனத்தை சேர்ந்தவங்க ரொம்ப இல்லை இந்த மொரீசியஸ் தீவிலேயே நாலைஞ்சு குடும்பம்தான் இருக்கும். இந்த பகுதியில் நானும் என் பேரன் மட்டும்தான் இருக்கோம்”<br />
<br />
வந்த வேலை சுலபமாக முடிந்ததை உணர்ந்த மங்குனி பாபுவிற்கு சைகை காட்ட ரமேஷை அழைத்து வந்தான்.<br />
<br />
“பெரியவரே இது என்னன்னு தெரியுதா” ரமேஷின் மார்பில் இருந்த முத்திரையை காண்பிக்க, மாதவனின் கண்கள் விரிந்தன.........<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
”ஜெயந்த் நீ அந்த ஜானை கவனி! நான் உள்ளே போய் சைலண்டா ஆண்டர்சனையும் அவர் காதலியையும் முடிச்சிடுறேன்.” பிரபாகர் சொல்லிவிட்டு வீட்டின் பின்பக்கமாக மெதுவாக சென்றான்.<br />
<br />
ஜெயந்த் மனதில் குமார் வெற்றிகரமாக ஏஞ்சலினாவை கடத்துவானா என்ற எண்ணமே இருந்தது. அதே மனதுடன் தோட்டத்தில் இருக்கும் ஜானை தேடி மெதுவாக நகர்ந்தான்.<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
வெண்டிலேட்டர் வழியே மெதுவாக இறங்கிய ஏஞ்சலினா, தன் வீட்டு காம்பவுண்டிற்கு ஒரு மொட்டை தலைக்காரன் உள்ளே நுழைவதை பார்த்தாள். உடனே அருகிலிருந்த இரும்பு குழாயை கையில் எடுத்துக் கொண்டாள்.<br />
அவன் பின்பக்கம் சென்று அந்த மொட்டை தலைக்காரனின் தலையில் ஓங்கி அடித்தாள். அவன் அங்கேயே விழுந்தான். ஏஞ்சலினா அவசர அவசரமாக வெளியே சென்று ஒரு டாக்ஸி பிடித்து ராமின் கடை நோக்கி சென்றாள்.<br />
<br />
அதே நேரம் பிஎஸ்வியின் கார் வீட்டருகே வந்தது.<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
”இது யார்? நீங்கல்லாம் உண்மையாகவே யாரு?” மாதவன் அதிர்ச்சியாக கேட்டார்.<br />
<br />
“பெரியவரே இந்த முத்திரையை பார்த்தவுடனே ஏன் அதிர்ச்சியானீங்க இதை பற்றி தெரிஞ்சதை சொல்லிடுங்க” <br />
<br />
“இல்ல எனக்கு ஒண்ணும் தெரியாது”<br />
<br />
“மரியாதை சொல்லுங்க”<br />
<br />
அங்கே செல்வா பிரசாத்தை அழைத்து வந்தான்.<br />
<br />
பிரசாத் “தாத்தா” என கூப்பிட்டான்.<br />
<br />
“பிரசாத் நீ எப்படி இவங்ககிட்ட”<br />
<br />
“ஓ இவன்தான் உன் பேரனா நல்லதா போச்சு இப்ப நீ உண்மைய சொல்லலன்னா மூணு பேர் உயிரும் போயிடும்”<br />
<br />
“இல்லை எனக்கு எதுவும் தெரியாது நான் எதுவும் சொல்ல மாட்டேன்”<br />
<br />
ரமேஷ் பேசினார் “பெரியவரே நான்தான் கேங்குலா நாட்டின் கடைசி வாரிசு. எங்க நாட்டு புதையலை தேடித்தான் நான் வந்தேன் இவங்களும் அதை அடைய ஆசைப்படுறாங்க”<br />
<br />
மாதவன் சிறிது நேரம் கண்மூடி யோசித்து விட்டு, தன் பாதத்தை தூக்கி பார்த்தார். அவர் பாத்திலும் கேங்குலா நாட்டு முத்திரை இருந்தது. இந்த முத்திரை பற்றி ஒரு நாள் சொல்வேன் என தாத்தா சொன்னது பிரசாத்துக்கு ஞாபகம் வந்தது.<br />
<br />
“நீங்க அந்த புதையலுக்கு உரிமையானவர்தான். பல ஆண்டுகளுக்கு முன் இந்த புதையலை எடுத்துகிட்டு கேங்குலா நாட்டு இளவரசர் இங்க இருந்த எங்க இனத்து ஆள் ஒருத்தர்கிட்ட வந்தார். அவர் எங்கிட்ட ஒரு உதவி கேட்டர் இந்த முத்திரையை நெஞ்சில் தாங்கி வருபவரிடம் புதையலை ஒப்படைக்க வேண்டும். இந்த இடம் பற்றிய குறிப்புகளை அவர் நாட்டுக்கு அனுப்பிவிடுவதா சொன்னாராம். ஆனா அப்படி யாரும் வரலை ஆனா எங்க ஆளுங்க அவங்க வரப்ப ஒப்படைக்கருதுக்காக அந்த புதையலை பரம்பரை பரம்பரை பாதுகாத்துட்டு வரோம்.”<br />
<br />
“இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு மரியாதையா புதையல் எங்கேன்னு சொல்லு”<br />
<br />
“முடியாது கெட்டவங்க கையில் அந்த புதையல் சிக்க விடமாட்டேன்.”<br />
<br />
“சொல்லைன்னா எல்லோரும் செத்துடுவீங்க”<br />
<br />
“வேண்டாம் பெரியவரே புதையல் எனக்கு வேண்டாம் அதனால உயிர்கள் போறதை விரும்பலை நான்”<br />
<br />
அப்போது பாபு கத்தினான். ”சார் புதையல் எங்கே இருக்கும்னு தெரிஞ்சிடுச்சு”<br />
<br />
“என்ன சொல்றே”<br />
<br />
“அந்த பெட்டிகளில் இருந்த வார்த்தைகள் one people sleeping peacefully அப்படின்னா அது அதோ அந்த சமாதியை குறிக்குது நினைக்கிறேன்”<br />
<br />
மாதவன் பதட்டப்படுவதை கவனித்த மங்குனி புன்னகைத்தார். “ஆமான்னு இவர் பதட்டமே சொல்லுதே அது கரெக்டுனு, வா போகலாம்”<br />
<br />
பிரசாத் வியந்தான். இத்தனை நாள் புதையல் அருகே இருந்த போது நேர்மையாக ஏழ்மையில் ஏன் தாத்தா வாழ்ந்தார், அவர் சொன்னாரே நேர்மையாக இருப்பது கொடுத்த வாக்கை காப்பாற்றுவது தன் இனத்தின் கொள்கை என்று நானும் அந்த இனம்தானே! அப்படியானால் இந்த புதையல் இந்த கெட்டவர்களிடம் சிக்க விடக் கூடாது!<br />
<br />
வேகமாக பாபு மீது பாய்ந்தான் துப்பாக்கி எகிறி விழுந்தது. பிரசாத் பாபுவுடன் சண்டை போட, ரமேஷை மங்குனி தடுத்தார். போராட்டங்கள் நடக்கும்பொழுது.....<br />
<br />
“நிறுத்துங்க இல்லைன்னா இவர் காலி!” செல்வா துப்பாக்கியுடன் மாதவனை குறி பார்த்திருந்தான்.<br />
<br />
எல்லாம் கைமீறி போனதை பிரசாத்தும் ரமேஷும் உணர்ந்தனர். <br />
<br />
“இதோ பாருங்க ஒழுங்கா எங்க சொல்படி நடந்தா உயிர் மிஞ்சும் இல்லான்ன அவ்வளவுதான்”<br />
<br />
வேறு வழியின்றி ரமேஷும் பிரசாத்தும் முன்னே நடக்க பாபுவும் மங்குனியும் அந்த சமாதி அருகே சென்றனர்.<br />
<br />
“இந்த சமாதியின் மேல் கல்லை நகர்த்தி உள்ளே இருப்பதை தரணும் இதான் எங்களுக்கு சொல்லப்பட்டது நாங்க யாரும் அதை பார்த்ததில்லை” என்றார் மாதவன்.<br />
<br />
அவர்கள் கல்லை நகர்த்தினர். உள்ளே ஒரு சுரங்கப் பாதை பாதை தெரிந்தது. உள்ளே ஆறு பேரும் சென்றனர்.<br />
<br />
இவற்றையெல்லாம் வீட்டின் பின்புறம் இருந்து ரகசியமாக பார்த்து கொண்டிருந்தனர் நாகாவும் யோகேஷும்........<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
ரெஸ்டாரண்டில் காத்திருந்த சதீஷுக்கு பாண்டியனிடமிருந்து அழைப்பு வந்தது. சதீஷ் ரெஸ்டாரண்டில் இருப்பதை அறிந்து அங்கே வந்து சேர்ந்தார் பாண்டியன்.<br />
<br />
”சே நான் போறதுக்குள்ளே அவனுங்க தப்பிச்சிட்டாங்க சதீஷ்”<br />
<br />
“சார் நீங்க யார்க்கும் சொல்லாம போனது தப்பு சார்! ஆமா அப்புறம் எப்படி அவங்களுக்கு தகவல் போச்சு”<br />
<br />
“நான் போற தகவலை கமிஷ்னர்கிட்ட மட்டும் சொல்லியிருந்தேன் அவர் அவங்களுக்கு துணை போவார்னு நினைக்கவே இல்லை! அவங்க ஆளு ஒருத்தன் அப்ரூவரா ஆக தயாரா இருந்தான். சே! எல்லாம் மிஸ்ஸாயிடுச்சு!”<br />
<br />
“சார் நீங்க அவங்களையே எப்பவும் நினைக்கிறதால ரொம்ப பதட்ட படுறீங்க. நீங்க நேர்மையானவர் நல்லவர் ஆனா உங்க கோபம் உங்களை தடுமாற வைக்கும் யோசிக்க விடாது.”<br />
<br />
சதீஷின் பேச்சில் இருந்த உண்மையை இருந்த பாண்டியன் அமைதியாக இருந்தார்.<br />
<br />
“சார் மனசை வேற கேஸ்ல திசை திருப்புங்க. இப்ப கூட ஒருத்தன் ஏதோ ஒரு கேஸ் விஷயமா என்னை பாக்க வர்றன்ன நீங்க விசாரிங்க நல்ல யோசனை சொல்லுங்க”<br />
<br />
பேசிக் கொண்டிருந்த பாண்டியன், சதீஷ் முன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றான் சௌந்தர்.<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
ராமின் கடைக்கு சென்ற ஏஞ்சலினா அவன் இல்லாததை தெரிந்து கொண்டாள் அவன் வெளியே சென்று விட்டு மதியம் மேரி வீட்டு செல்வதை கேள்விப்பட்டாள். மதியம் ஆகப் போவதால் மேரியின் முகவரி வாங்கி கொண்டு அங்கே கிளம்பினாள்.<br />
<br />
அதே நேரம் தன் வீட்டிற்குள் நுழைந்த பிஎஸ்வி உள்ளே மயங்கி கிடந்த குமாரையும் ஏஞ்சலினா தப்பிச் சென்றதையும் அறிந்து அதிர்ந்தாள்.<br />
குமாரை அடித்து விசாரித்தார். குமார் தான் ஜெயந்த், பிரபாகரால் அனுப்பப்பட்டதையும், ஏஞ்சலினாவை கடத்த வந்ததையும். பிஎஸ்வி பேசியவற்றை ஆதாரமாக கொண்டு அவரை பிளாக்மெய்ல் செய்ய போவதையும் உளறினான்.<br />
<br />
“என்கிட்டேயே டபுள்கேம் ஆடுறாங்களா அவங்களை விடப்போறதில்ல”<br />
<br />
எஸ்கேவுக்கு ஃபோன் செய்தார். “எஸ்கே திட்டத்தில் சின்ன மாறுதால் நானே நேரடியாக களத்தில் இறங்க போறேன். நீ கவலைப்படாத எல்லாம் நல்ல படியா முடியும்.”<br />
<br />
குமாரை அடித்து மயங்கச் செய்து ஒரு அறையில் போட்டு பூட்டினார். இப்போ ஏஞ்சலினாவை விட ஆண்டர்சன்தான் முக்கியம். சாம் ஆண்டர்சனின் காதலி வீட்டை நோக்கி கிளம்பினார் பிஎஸ்வி.<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------------------------------------------------</div><br />
”நாமளும் உள்ளே போலாமா” கேட்டான் யோகேஷ்.<br />
<br />
“வேண்டாம் இங்கேயே இருப்போம் ஏதோ புதையல் அது இதுன்னுறாங்க எப்படியும் வெளியே எடுத்துட்டு வருவாங்கல்ல அப்ப பார்த்துப்போம்”<br />
<br />
உள்ளே நுழைந்த ஆறு பேருக்கும் நீண்ட வருடங்களாக யாரும் வராத அந்த இடத்தின் தோற்றம், வாசனை எல்லாமே ஒரு வித கலக்கத்தை தந்தது. பிரசாத்தும் மாதவனும் தங்கள் வாக்கை காப்பாற்ற முடியாததை எண்ணி மிகவும் வேதனையடைந்தனர். ரமேஷும் தங்கள் ஐஸ்வர்யம் மீண்டும் பறிபோவதை எண்ணி வேதனை அடைந்தார். <br />
<br />
அவ்விடம் மோசமாக இருந்தபோதும் அவர்கள் தேடி வந்ததை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படவில்லை. அங்கே கேங்குலா நாட்டு முத்திரையும் கான்வாஸ் பழங்குடி மக்களின் சின்னமும் கொண்ட ஒரு பழங்கால பெட்டி இருந்தது. அதை கஷ்டப்பட்டு மங்குனி திறந்தார். உள்ளே ஐந்து நகைகள் இருந்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் ஏராளமான நவரத்தின கற்கள் ஒளிவீசின. <br />
<br />
மங்குனி சந்தோசத்தின் கத்தினார். “ஆஹா! இதான் இதான் இந்த ஒவ்வொரு நகையும் எத்தனை எத்தனை கோடி போகுமோ ஆஹா நாம ஜெயிச்சிட்டோம் இந்த நகை இனிமே நமக்குதான் சொந்தம்! நமக்குதான் சொந்தம்!”<br />
<br />
<b>“சாரி சார், இனி இந்த நகைகள் எனக்கு மட்டும் தான் சொந்தம்” செல்வா தன் கையில் இருந்த துப்பாக்கியை மங்குனியின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.</b><br />
<br />
<b style="color: #000099;"><span style="font-size: medium;">(அடுத்த பாகத்தில் முடியும்)</span></b></div><br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"> <a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart6.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b6.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-52840295394094962002011-02-18T15:30:00.000-08:002011-02-21T03:50:36.401-08:00BLACK RIVER - அத்தியாயம் ஐந்து<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfRLbEqPrlKabpJ060yxmM9FD4NgoM-1VtQIHqxoJm2nF93QVCa2yIW1bHQtK4LSENpMZECGBB42tT2CoeqTLX0-62iJ4ot0NB_Pq8UAmV3HxK6OFE3pmUkB9G4FiS48P1t1SWLBrvQV4W/s1600/black+5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="427" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfRLbEqPrlKabpJ060yxmM9FD4NgoM-1VtQIHqxoJm2nF93QVCa2yIW1bHQtK4LSENpMZECGBB42tT2CoeqTLX0-62iJ4ot0NB_Pq8UAmV3HxK6OFE3pmUkB9G4FiS48P1t1SWLBrvQV4W/s640/black+5.jpg" width="640" /></a></div><br />
<div style="text-align: center;"><u><span style="font-size: x-large;">அத்தியாயம் ஐந்து</span></u></div><br />
அன்று நிகழப்போகும் நிகழ்வுகளைப் பற்றி அறியாமல் அமைதியாக விடிந்தது அந்த நாள்.......<br />
<br />
ரமேஷ் நேற்று நடந்த சம்பவங்களை எண்ணினார். என்ன நடந்தபோதும் தான் எண்ணி வந்த வேலையை செய்யாமல் போகக் கூடாது என்ற மன உறுதி அவரிடத்தில் இருந்தது!<br />
<br />
ரமேஷ் கேங்குலா நாட்டின் கடைசி வாரிசு. கிட்டதட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன் கேங்குலா நாட்டு மன்னரின் தாய் வீடான பிளாக் ரிவர் நாடு அளித்த பரிசுகள் கப்பலில் வந்து கொண்டிருந்த போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. அவர்கள் தாய்வீட்டின் பரிசு கொள்ளயடிக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ஆபத்து என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால் பரிசை எப்பாடு பட்டும் காப்பாற்ற முடியவில்லை. இளவரசர் இறந்தார். அது மட்டுமில்லாமல் நாளடைவில் கேங்குலா நாட்டு சாம்ராஜ்யமும் வீழ்ந்தது. அவர்களின் ராஜ குடும்பம் காணாமல் போனது. மீதம் இருந்த சில வாரிசுகளும் சாதாரண மக்களாய் வாழ ஆரம்பித்தனர். காலங்கள் மாறினாலும் அவர்கள் மனதில் அந்த நம்பிக்கை இன்னும் மாறாமல் இருந்தது. <br />
<a name='more'></a><br />
ரமேஷ் சிறு வயதிலிருந்து சாதாரணமாகவே வளர்ந்தார். பல்வேறு நாடுகளுக்கு சென்று ஒரு தேர்ந்த வியாபாரியாக இருந்தபோதும் அவருக்குள் அவரின் பரம்பரை பற்றி செய்திகள் மனதில் வேராய் ஊன்றியிருந்தன. அப்போதுதான் புதையல் பற்றிய குறிப்புகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்திருப்பதாய் ஆராய்ச்சி குழுவில் இருந்த அவரின் ராஜவிசுவாசி ஒருவர் மூலம் தெரிய வந்தது. மேலும் குறிப்புகளின் நகலும் கிடைத்தது. தன் தாய் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அப்புதையலை தேட கிளம்பினார். அவருக்கு அப்புதையல் கிடைத்தால் பரம்பரையின் ஐஸ்வர்யம் திரும்பிவிடும் என நம்பினார். ஆனால் இங்கு வந்த போதுதான் வேறு சிலரும் அதை தேடுவதை புரிந்து கொண்டார். <br />
<br />
இப்போது அவர்களை தேட விட்டு எல்லா குறிப்புகளும் கிடைத்த பின் அதை பறிப்பது அவர் திட்டம். அதே சமயம் பிரசாத்திடம் தன்னைப் பற்றியோ தான் தேட வந்திருப்பது பற்றியோ சொல்ல அவர் விரும்பவில்லை. ஆனால் நேற்றைய சம்பவம் அவரை மாற்றி முடிவெடுக்க வைத்தது. <i>இந்நேரம் அவர்கள் உஷாராகி இருப்பார்கள். அதனால் நான்காவது குறிப்பை நாமே முதலில் எடுத்து விட வேண்டும். அதன் பின் எப்படியாவது மீதியை அவர்களிடமிருந்து எடுக்க வேண்டும்.</i> நான்காவது குறிப்பை பார்த்து கொண்டிருந்தார். 1bomb church. அதில் o அடிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
அப்போது பிரசாத் வந்தான்.<br />
<br />
“உடம்பு எப்படி இருக்கு சார்” <br />
<br />
“உடம்பு நல்லாயிருக்கு பிரசாத். இங்கே சர்ச் ஏதாவது இருக்கா குறிப்பா bயில் ஆரம்பிக்கும் சர்ச்”<br />
<br />
”bயில் ஆரம்பிக்கும் சர்ச்...Bacia church, bambus church, Barretta church, Bathsheba church என நாலு சர்ச் இருக்கு சார் எதுக்கு கேட்கிறீங்க?”<br />
<br />
“இரண்டாவதா சொன்னியே பேம்பஸ் சர்ச் அங்க போகலாம் வா”<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><div class="gmail_quote"><br />
சீக்கிரமாகவே காலையில் யாரிடமும் சொல்லாமல் சதீஷை கூட கூட்டிக் கொள்ளாமல் தனியாக நாகாவை பிடிக்க வேண்டுமென்ற வேகத்தோடு சௌந்தர் தந்த தகவல்படி அவர்கள் மறைவிடத்திற்கு தனியாக சென்று கொண்டிருந்தார் பாண்டியன்.<br />
<br />
அதே நேரம்............<br />
<br />
”நாகா! டிபார்ட்மெண்டை சேர்ந்த நம்ம ஆள் தகவல் தந்தான். அந்த பாண்டியன் தனியா நம்மளை பிடிக்க நம்ம இடத்துக்கு வரப் போறாராம். அவருக்கு எப்படி நம்ம இடம் தெரிஞ்சிருக்கும் நாகா?” கவலையோடு பேசினான் யோகேஷ்.<br />
<br />
நாகா கோபமாக கத்தினான்... “சௌந்தர்.......!”<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><br />
“சார் நேற்று வந்தவன் யாரா இருக்கும்”<br />
<br />
“தெரியலை யாரா இருந்தாலும் நம்ம புதையல் வேட்டைக்கு இடையூறு வந்தாச்சு நாம சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சாகனும்.”<br />
<br />
“சார் இன்னும் ஒரு பெட்டிதான் பாக்கி அப்புறம் மொத்தம் 7 படங்களாயிடும் ஏழு எழுத்துக்களாயிடும்! C N A A S A இன்னும் ஒரு எழுத்து. அப்புறம் இந்த வார்த்தைகள் வேற இருக்கு”<br />
<br />
“நான் ஆராய்ந்த வரைக்கும், குறிப்புகளை வச்சி பார்க்கிறப்ப அந்த நாலாவது இடம் பேம்பஸ் சர்ச்சாதான் இருக்கும் வாங்க போகலாம்”<br />
<br />
“சார் மிச்ச பெட்டிகளை பத்திரமா வச்சிட்டு வரேன்”<br />
<br />
“வேண்டம் செல்வா அது நம்ம கூடவே இருக்கட்டும் அந்த தோல்பையில் எடுத்துக்க இங்க இருப்பதும் ஒரு வகையில் ரிஸ்க்தான்”<br />
<br />
மூவரும் சர்ச்சை நோக்கி கிளம்பினார்கள்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><br />
”<b>கூட்டணி பற்றி இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட போகிறது. ஜனாதிபதி முக்கிய அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு! மாலை முடிவு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது</b>” டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. <br />
<br />
ஆனால் அதை கவனிக்காத அளவுக்கு கடையில் இருந்த ராம் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். தனக்கு ஏன் அந்த பயங்கர விஷயம் தெரிய வேண்டும்! என்ன செய்வது! குழப்பமாக இருந்தது!<br />
<br />
கடையில் வேறு மதியம் மேரி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அருண் வேறு இன்று ஏதோ நல்ல முடிவு சொல்ல போவதாக சொன்னான். என்ன செய்தி வரப்போகுதோ! அவன் ஃபோனிற்காக காத்திருந்தான். தொலைபேசி மணி அடித்தது.<br />
<br />
“ராம் நான் அருண் பேசறேன்”<br />
<br />
“சொல்லுடா விஷயம் என்னாச்சு”<br />
<br />
“எங்க எடிட்டர்கிட்ட விஷயத்தை சொல்லிட்டண்டா அவர் சில நல்ல உயரதிகாரிகள் இருக்காங்க அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு, நான் உனக்கு சொல்றேன்”<br />
<br />
”மேடம் வீட்டுக்கு வேற மதியானம் வேலைக்கு போகனும்னு கடையில் சொல்லிட்டாங்கடா”<br />
<br />
“ஓ! அப்படியா சரி! அப்படி நீ வேலையை முடிச்சுட்டு ஒரு மூணு மணிக்கு பத்திரிக்கை ஆபிஸ்க்கு வந்துடு”<br />
<br />
“அப்ப ஏஞ்சலினா?”<br />
<br />
“அந்த பொண்ணை இப்ப டிஸ்டர்ப் பண்ணாத விஷயம் நல்லபடியா முடியட்டும் அதுவும் நம்ம கூட வந்தா அதுக்குதான் பிரச்சினை, ஏன்னா சம்பந்தபட்டவர் அவர் மாமா”<br />
<br />
“ஆமா நீ சொல்றது சரிதான்! சரி நீ சொன்ன மாதிரியே வரேண்டா”<br />
<br />
போனை வைத்து விட்டு யோசித்தான். எதற்கும் ஒரு முறை ஏஞ்சலினாவை தொடர்பு கொள்ளலாம் என முயன்றான் ஆனால் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. அவனுக்கு கொஞ்சம் கலக்கமா இருந்தது. ஒரேகுழப்பம்! மன அமைதியில்லாமல் தவித்தான். தன் குழப்பத்தை யாரிடம் சொல்வது?? அவனுக்கு பிரசாத் ஞாபகம் வந்தது. சரி அவனை போய் பார்ப்போம் அட்லீஸ்ட் மனசாவது ரிலாக்ஸ் ஆகும்! <br />
<br />
கடையில் லீவ் சொல்லிவிட்டு மதியம் நேராக மேடம் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு பிரசாத் வீட்டிற்கு கிளம்பினான் ராம்.<br />
<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><br />
தன் ஃபோன் எங்கே? தூங்கும்போது அருகில்தானே வைத்தோம். காணோமே ஏஞ்சலினா தேடிக் கொண்டிருந்தாள். சரி வெளியே தேடலாமென்று கதவை திறக்க போனாள் ஆனால் கதவு வெளியே தாளிடப்பட்டிருந்தது. யார் அது தாழ்ப்பாள் போட்டது.<br />
<br />
“மாமா மாமா” கத்தினாள். யாருமே வரவில்லை. எந்த பதிலுமில்லை. வீட்டில் யாருமில்லையா. மாமா ஒருவாரம் வேலைக்காரர்களுக்கு லீவ் அளித்து அனுப்பியது ஞாபகம் வந்தது. நாளை தன் பிறந்தநாள்! மாமா ஏதோ திட்டத்தோடு இருக்கிறார் என அவளுக்கு புரிந்தாலும் இப்போது ஏன் அடைத்து வைத்தார். ஒருவேளை ராமுடனான காதல் அவருக்கு தெரிந்து விட்டதோ! அச்சச்சோ அப்படியானால் ராமுக்கு ஆபத்தாயிற்றே!. அவர் ஒரு கொலைக்கு வேறு திட்டிமிட்டிருக்கிறார் அது என்னைக்கு நடக்க போகிறதோ!<br />
<br />
ஏஞ்சலினாவிற்குள் கலக்கமும் பயமும் அதிகரித்தது அங்கிருந்து தப்பிப்பது எப்படி என யோசித்தாள். பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியே வெளியேறுவதென முடிவெடுத்தாள்.<br />
<br />
அதேநேரம்.. அவளை கடத்துவதற்காக ஜெயந்த்-பிரபாகரால் அனுப்பப்பட்ட மொட்டைத்தலை குமார் தன் முகத்தழும்பை கீறிக் கொண்டே அவள் வீட்டருகே வந்தான்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><br />
ராம் தூரத்திலிருந்து அந்த ஏழுவண்ண நிலத்தின் அழகை ரசித்துக் கொண்டே நடந்தான். ஆனாலும் ஒரு ஓரத்தில் அவன் மனம் குழப்பத்தில் இருந்தது.<br />
<br />
“ராம்” குரல் கேட்டும் திரும்பாமல் யோசனையிலிருந்தான்.<br />
<br />
“ராம் ராம்” பலமாக குரல் எழ திரும்பினான். மாதவன் தாத்தா நின்று கொண்டிருந்தார். <br />
<br />
“என்ன ராம் என்ன யோசனையிலிருக்கே?”<br />
<br />
“ம் ஒன்னுமில்ல தாத்தா” <br />
<br />
“ஒன்னுமில்லையா எனக்கு தெரியுது நீ ஏதோ குழப்பத்தில இருக்கே. என் கிட்ட சொல்ல கூடாதா?”<br />
<br />
“அது வந்து தாத்தா, ஒரு.. ஒரு.. குற்றம் பற்றிய தகவல் எனக்கு தெரிஞ்சிச்சு ஆனா அதை நான் நேரா போலீஸ்ல சொல்லாம்னா அவங்க நல்லவங்களா இல்லாம இருந்தாங்கன்னா எனக்கு ஆபத்து. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. என் ரிப்போர்ட்டர் ஃபிரண்டுகிட்ட சொன்னேன் அவன் எடிட்டர்கிட்ட பேசிட்டு சொல்றேன் சொன்னான் ஆனா இன்னும் முடிவு தெரியலை அதான் குழப்பமா இருக்கு”<br />
<br />
மாதவன் புன்னகைத்தார்...“நல்ல போலீஸ்கிட்ட அந்த விசயத்தை சொல்லணும் அவ்வளவுதானே”<br />
<br />
“ஆமா தாத்தா”<br />
<br />
“கவலையை விடு எனக்கும் பிரசாத்துக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தெரியும் அவர்கிட்ட சொன்னா போது எல்லாம் பார்த்துக்குவார் ”<br />
<br />
“தாத்தா அவர் எப்படி....”<br />
<br />
“கவலைப்படாதே அவர் ரொம்ப நல்லவர். பேரு சதீஷ். அவரோட இன்ஸ்பெக்டரும் நல்லவர்தானாம் பேர் கூட பாண்டியன்னு நினைக்கிறேன். இரு. சதீஷோட ஃபோன் நம்பர் என் கிட்ட இருக்கு”<br />
<br />
மாதவன் ஃபோன் செய்தார் சதீஷுக்கு. பாண்டியன் எங்கே சென்றார் என்ற குழப்பத்தில் சதீஷ் இருந்தபோது அவரின் ஃபோன் அடித்தது. சதீஷ் பேசினார். மாதவன் ராம் சொன்ன விஷயங்களை சொன்னார். ராமும் நேரில் எல்லாவற்றையும் சொல்வதாக சொன்னான். என்ன விஷயம் என புரியவில்லை. ஆனால் மாதவன் சொல்வதால் அந்த ராமை பார்க்கலாம் என முடிவு செய்தார் சதீஷ். மாதவன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டுக்கு அருகில் தான் இருப்பதாகவும் அங்கே ராமை வரச் சொன்னார்.<br />
<br />
ராம் மனதில் சிறிது சந்தோசத்தோடு மாதவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சதீஷை பார்க்க கிளம்பினான்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><br />
பாம்பஸ் சர்ச்.<br />
<br />
சர்ச்சின் பின்புறமிருந்து அந்த பெட்டியை எடுத்தார் ரமேஷ். கேங்குலா நாட்டின் ராஜ முத்திரை அதை பரிவோடு தடவினார். பெட்டியை கஷ்டப்பட்டு திறந்தார் அதில் ஒரு படம் இருந்தது. ஒரு சமுத்திரம்-கடலின் படம். கடலில் பறிபோன புதையல் அவருக்கு ஞாபகம் வந்தது. <br />
<br />
“அந்த பெட்டியை எங்கிட்ட தந்திடுறியா”<br />
<br />
குரல் கேட்டு திரும்பினார் ரமேஷ் அங்கே பாபுவும் செல்வாவும் நின்று கொண்டிருந்தனர்.<br />
<br />
“அந்த படத்தை எங்கிட்ட தா”<br />
<br />
“முடியாது” என்றார் ரமேஷ்.<br />
<br />
“தரலைன்னா இவன் உயிர் போயிடும்” அங்கே மங்குனி துப்பாக்கி முனையில் பிரசாத்தை பிடித்து வைத்திருந்தார்.<br />
<br />
பிரசாத்தை தனியாக விட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு! <br />
<br />
“ம் பெட்டியை தா”<br />
<br />
பெட்டியை தருவது போல் மங்குனி மேல் பாய்ந்தார் ரமேஷ் அவரின் துப்பாகியை தட்டி விட்டு சண்டை போட்டார். மங்குனி, பாபு, செல்வா, பிரசாத், ரமேஷ் ஐவரிடையே கடும் சண்டை நிலவியது.<br />
<br />
ஆனால் இடையில் துப்பாக்கியை கைப்பற்றிய செல்வா பிரசாத்தை மீண்டும் பிடித்தான். <br />
<br />
“ஹா ஹா இப்ப எங்கிட்ட வாலாட்டலாம்னு நினைக்காதே! பாபு, அந்த பெட்டியை எடு”<br />
<br />
“சார்....”கத்தினான் பாபு.<br />
<br />
“என்ன”<br />
<br />
“அங்கே பாருங்க” சண்டையில் கிழிந்திருந்த ரமேஷின் சட்டை வழியாக அவரின் நெஞ்சில் பச்சை குத்தப்பட்டிருந்த கேங்குலா நாட்டின் ராஜ முத்திரை தெரிந்தது.<br />
<br />
“இது கேங்குலா நாட்டு ராஜ முத்திரையாச்சே அப்படின்னா இவன் கேங்குலா ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் புதையலை பற்றி எல்லாம் தெரிஞ்சிருக்கு!”<br />
<br />
“மரியாதையா சொல்லு புதையலை பற்றி உனக்கு எப்படி தெரியும் என்ன தெரியும்?”<br />
<br />
ரமேஷ் அமைதியாய் இருக்க “நீ எதுவும் பேசலன்னா இவன் தலை போயிடும்”<br />
<br />
“ரமேஷ் சார் என்ன சார் புதையல் அது இதுன்னு சொல்றாங்க” பிரசாத் கேட்டான்.<br />
<br />
“என்னை மன்னிச்சிடு பிரசாத் நான் சீக்ரெட் ஏஜெண்ட் இல்ல. எங்க ராஜ குடும்பத்த சேர்ந்த புதையல் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. அதை தேடதான் நான் வந்தேன் . இவங்களும் அதை பறிக்க ஆசைப்படுறாங்க”<br />
<br />
“இவன்கிட்ட என்ன பேச்சு நீ எங்க கேள்விக்கு பதில் சொல்”<br />
<br />
ரமேஷ் சிறிது அமைதியானார். தன் நாட்டை நினைத்துக் கொண்டார். பிரசாத்தை பார்த்தார் பின் பேசினார். ”எனக்கு அந்த எழுத்துக்கள் பத்தியோ பெட்டியில் உள்ள வார்த்தைகள் பத்தியோ தெரியாது. ஆனா அந்த படங்கள் பத்தி தெரியும்.”<br />
<br />
“என்ன சொல்லு”<br />
<br />
“நிறங்கள். இதுதான் அந்த காலத்திலிருந்து எங்களுக்கு கிடைச்ச ஒரே குறிப்பு. அப்புறம் இப்ப இந்த குறிப்புகள். அதை வச்சு பார்க்கிறப்ப இந்த ஒவ்வொரு படமும் ஒரு நிறத்தை குறிக்குது.”<br />
<br />
“நிறமா என்ன நிறமா இருக்கும்” யோசிக்க ஆரம்பித்தார்.<br />
<br />
ரமேஷ் தன் ராஜாங்க நடப்புகளின் படி சொன்னார். <br />
<br />
நெருப்பு- சிவப்பு, வலிமை(யான மனிதன்) - பழுப்பு, மகிழ்ச்சி(யான குழந்தை)-மஞ்சள், (கோழிக்குஞ்சு) பாதுகாக்கப்படுதல்-பச்சை, சொர்க்கம்-நீலம், அலங்காரமான பெண்- கருநீலம், கடல்-ஊதா<br />
<br />
“சார் இது ஏதோ வானவில் நிறம்போல இருக்கே”<br />
<br />
”இல்லை இது ஏதோ இடத்தை குறிக்குதுன்னு நினைக்கிறேன்.” ரமேஷ் சொன்னார்.<br />
<br />
”சார் இப்ப ஞாபகம் வருது இங்க ஒரு ஏழுவண்ண மணல்திட்டு இருக்கு” என்றான் பாபு.<br />
<br />
”சரி இந்த எழுத்துக்கள் வார்த்தைகள்”<br />
<br />
”வார்த்தைகள் one sleeping peacefully people புரியலையே”<br />
<br />
“இந்த எழுத்துக்கள் C N A A S A V என்னவா இருக்கும் Canavas, Casvana, Cavanas,...Ca ”<br />
<br />
"இரு...I got it! அது CANVAS அவங்க ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவங்க. அவங்க அந்த பகுதியில் இருக்கலாம். அப்போ அந்த ஏழுவண்ண திட்டு போனா தெரிஞ்சிடும் அந்த வார்த்தைகளும் என்னான்னு!"<br />
<br />
”சார் அப்போ இவங்க”<br />
<br />
”இவங்களையும் கையை கட்டி வாயை அடைச்சி நம்ம வந்த வண்டியில ஏத்து”<br />
<br />
அதுவரை அமைதியாக ஆச்சரியத்தோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பிரசாத் அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.<br />
<br />
ஏனெனில் அவன் வீடு அந்த ஏழு வண்ண திட்டு அருகில்தான் உள்ளது. மேலும் அவனும் அந்த கேன்வாஸ் பழங்குடி இனத்தை சேர்ந்தவன். <br />
<br />
அப்படியானால்........<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------<wbr></wbr>-------------------------</div><br />
அந்த ஒதுக்குபுறமான வீட்டின் முன்னால் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து தன் பொய்த் தோற்றத்தோடு பிரசிடெண்ட் சாம் ஆண்டர்சன் இறங்கினார். அவருடன் அவர் செகரெட்டரி ஜானும் மாறுவேஷத்தில் இறங்கினார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆண்டர்சன் ஏதோ சைகை காண்பிக்க, ஜான் காரை செட்டில் விட்டு விட்டு வீட்டின் பக்கவாட்டில் இருந்த சிறு தோட்டத்தில் நுழைந்தார். ஆண்டர்சன் தன் காதலியை காண வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.<br />
<br />
<b>அதுவரை தூரத்தில் ஓர் மறைவிடத்திலிருந்து பைனாகுலரில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரும் ஜெயந்தும் எழுந்து வீட்டை நோக்கி நடந்தனர்.</b><br />
<b><br />
</b><br />
<i><b>(தொடரும்........)</b></i></div><br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"> <a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart5.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b5.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-38648473813857895992011-02-16T16:15:00.000-08:002011-02-18T14:11:14.338-08:00BLACK RIVER - அத்தியாயம் நான்கு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBdJtSP4J4SFWO2zjft-98vIGInWdDy879Lzxxc2jCfCsPKAbN96bGFlQ2tI7pq0OoNxvdzNj1YGAa9-4oY6uDsAnxIBxfblRuAQtbjn4Fn2kplj0teUxcAsu-fIg98Wh8YAaXCcPgS7W-/s1600/B+4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBdJtSP4J4SFWO2zjft-98vIGInWdDy879Lzxxc2jCfCsPKAbN96bGFlQ2tI7pq0OoNxvdzNj1YGAa9-4oY6uDsAnxIBxfblRuAQtbjn4Fn2kplj0teUxcAsu-fIg98Wh8YAaXCcPgS7W-/s1600/B+4.jpg" /></a></div><div style="text-align: center;"><b><span style="font-size: small;"><u><br />
</u></span></b></div><div style="text-align: center;"><span style="font-size: large;"><b><u>அத்தியாயம் நான்கு</u></b></span></div><br />
”சார் இரண்டாவதா எடுத்த பெட்டியில் இருந்த இரண்டு படங்களில், ஒன்னு ஒரு சந்தோஷமான குழந்தை படம், இன்னொன்னு ஒரு கோழி தன்னோட குஞ்சை பாதுகாப்பா அணைச்சுக்குற மாதிரியான படம்!”<br />
<br />
“அது மட்டுமில்லாம அதுகளுக்கு பின்னாடி A, A அப்படிங்கிற எழுத்துக்கள்தான் இருந்தது.”<br />
<br />
“சார் அது என்ன வார்த்தையா இருக்கும்?”<br />
<br />
“சார் அந்த படங்கள் எதை சொல்லுது?”<br />
<br />
பாபுவும் செல்வாவும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மங்குனி ஏதோ யோசனையிலிருந்தார்.<br />
<br />
“சார் நாங்க கேட்டுகிட்டே இருக்கோம் நீங்க அமைதியா இருக்கீங்க?”<br />
<br />
“இதோ பாருங்க, எல்லா பெட்டிகளும் கிடைக்கிற வரைக்கும் நம்மால எதையும் கண்டு பிடிக்க முடியாது. அதனால மீதி இருக்கிற 2 பெட்டிகளை முதல்ல எடுப்போம் அப்புறம் இதையெல்லாம் யோசிப்போம். இப்போ நாம அடுத்த பெட்டி இருக்கிற இடத்துக்கு போவோம்.”<br />
<br />
“சார் அடுத்த பெட்டி எங்கே இருக்கும்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?”<br />
<br />
“ஆமா 2who have male and female living here - இது சிவனை குறிக்கிறது நாமை இங்கே இருக்கிற அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு போகணும்”<br />
<a name='more'></a><br />
<br />
<div class="gmail_quote"><div style="text-align: center;"><wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------- </div><div style="text-align: center;"><br />
</div>சிவன் கோவில்.<br />
<br />
சௌந்தர் முடிந்தவரை அடையாளங்கள் மாற்றி ஒரு சுற்றுலா பயணி போல அடையாளமிட்டு காத்திருந்தான். அவன் முடிவெடுத்து விட்டான், தன்னால் இனியும் ஓட முடியாது. அதனால் போலீஸில் அப்ரூவராக போகிறான். ஆனால் இப்போது அவன் மட்டும் சரணடைவதில் அவனுக்கு விருப்பமில்லை. அதனால் அவனுக்கு பின்னால் நாகா மற்றும் யோகேஷால் ஆபத்து வரலாம். அதனால் அவர்களையும் போலீஸில் மாட்டி விட முடிவெடுத்து விட்டான்.</div><div class="gmail_quote"><br />
இங்கே அவன் காத்திருப்பது பாண்டியனுக்காக. பாண்டியன் வாராவாரம் இந்த கோவிலுக்கு வருவார். அவரை நேரடியாக சந்திக்காமல் ஒரு கடிதம் மூலம் தாங்கள் நாளை செய்யப்போகும் ஒரு வேலையை பற்றியும் அவர்கள் இருக்குமிடத்தை பற்றியும் தான் அப்ரூரவாக விரும்புவதையும் சொல்லிவிட திட்டமிட்டு காத்திருக்கிறான். ஒரு ஃபோன் மூலம் கூட இதை சொல்லாம் ஆனால் நாகாவிற்கு போலீஸிலும் ஆட்கள் உண்டு இது அவனுக்கு தெரிந்தால் சௌந்தர் அவ்வளவுதான்!<br />
<br />
இருந்தாலும் அவனுக்குள் ஒரு சிறிய குற்ற உணர்ச்சி. இத்தனை நாள் கூட ஒன்றாக இருந்தவர்களை காட்டி கொடுப்பதா.... ஆனால் ஓடி ஓடி ஒளிவதிலும் விருப்பமில்லை... இப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது...........<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------------------------------- </div><br />
“சரி சார் நீங்க கண்காணியுங்க நான் கோயிலுக்கு வெளியே இருக்கேன்.” சொல்லிவிட்டு சென்றான் பிரசாத்.<br />
<br />
ரமேஷ் வழக்கம்போல் அவர்களை கண்காணித்தார். ஆனால் இம்முறை அவரை பாபு கவனித்தை கவனிக்க தவறினார்.<br />
<br />
“சார் நம்மை யாரோ வாட்ச் பண்ணுறாங்க”<br />
<br />
“என்ன பாபு சொல்றே”<br />
<br />
“ஆமாம் சார் நீங்க சடார்னு திரும்பாம சாதாரணமா உங்க வலது பக்கமா பாருங்க அந்த தூணுக்கு பின்னால் ஒருத்தன் நின்னுகிட்டு நம்மளையே பாக்குறது தெரியும்.”<br />
<br />
மங்குனியும் கவனித்தார்.<br />
<br />
”சரி நாம இன்னும் தேட வேண்டிய இடம் எது?”<br />
<br />
”அந்த சிறிய கோயில்தான் சார்.”<br />
<br />
”சரி. அது ஆள் நடமாட்டமில்லாமதான் இருக்கு! நீயும் செல்வாவும் அந்த கோயிலுக்கு பின்புறமா போய் தேடுங்க. நான் வெளியே போய்ட்டு வர மாதிரி லேட்டா வரேன் அவன் உங்களை ஃபாலோ பண்ணா நான் பின்னால வந்து பிடிச்சிடுறேன்.”<br />
<br />
“அவன் யார்னே தெரியலை சார் ஆனா அவனை இதுக்கு முன்னாடி அந்த லைட் ஹவுஸ்ல பார்த்த ஞாபகம்.”<br />
<br />
“யாரா வேணா இருக்கட்டும் என்னோட சைலன்சர் பொருத்தின துப்பாக்கி முன்னாடி அவன் என்ன பண்ணுறான் பாக்கிறேன்”</div><div class="gmail_quote"><br />
</div><div class="gmail_quote"><div style="text-align: center;">------------------------------------------------------------------------------------- </div><br />
ராமும் ஏஞ்சலினாவும் அருண்பிரசாத் முன் உட்கார்ந்திருந்தனர்.<br />
<br />
“ராம் நீ சொல்றது உண்மையா?” என்றான் அருண்பிரசாத்.<br />
<br />
“ஆமா அருண் இவங்க மாமாவும் அந்த எஸ்கேவும் பேசுனத கேட்டோம். அவங்க போனப்புறம் நாங்க வெளியே வந்தும் அந்த அதிர்ச்சி எங்களை விட்டு போகலை. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை! நீ ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் உன்கிட்ட சொன்ன யோசனை சொல்வேன்னுதான் வந்தேன்.”<br />
<br />
“நல்லவேளை! நீ என்கிட்ட வந்த போலீஸ்கிட்ட போகலை. போயிருந்தா அவ்வளவுதான்! அந்த எஸ்கேவுக்கு ஆள்பலமும் செல்வாக்கும் அதிகம். போலீஸ்லயும் ஆள் இருக்கு. விஷயம் தெரிஞ்சா நமக்கும் ரிஸ்க்கு. உஷாராகவும் ஆயிடுவாங்க!”<br />
<br />
“என் மாமாவும் சம்பந்தபட்டிருக்கார்னு நினைக்கிறப்பதான் வேதனையா இருக்கு!” என்றாள் ஏஞ்சலினா.<br />
<br />
“பிஎஸ்வி பெரிய ஆள்தான், ஆனா அவர் இப்படிபட்டவர்னு தெரியலை. சரி யார் எப்படிபட்டவங்கன்னு யார்க்கு தெரியும்!”<br />
<br />
“சரி அருண் இப்ப என்ன பண்ணுறது?”<br />
<br />
“இப்போதைக்கு நீங்க இந்த விஷயம் வெளியே தெரியாம பார்த்துகுங்க. நான் என் எடிட்டர்கிட்ட பேசுறேன். அவர்க்கு நிறைய நல்ல போலீஸ் ஆட்களை தெரியும்; அது மட்டுமில்லாம நமக்கு பிரச்சினையில்லாம இந்த விஷயத்தை முடிக்க யோசனை பண்ணுவார். நீங்க இரண்டு பேரும் இப்ப வீட்டுக்கு போங்க. நானே நாளை போன் பண்ணுறேன். அப்ப நீங்க வாங்க! கவனமா இருங்க!”</div><div class="gmail_quote"><br />
<div style="text-align: center;">------------------------------------------------------------------------------------- </div><br />
பிரசாத் கோயிலை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தவன் திடீரென நின்றான்.<br />
<br />
அது அவன்தானே.. அந்த மூன்றுபேரில் ஒருவன். இவன் பேரு சௌந்தர்னு நினைக்கிறேன். இவன் இங்க எங்கே? இவனை பிடிச்சா பரிசுல்ல! அந்த நினைப்பு வந்த உடனே சௌந்தரை நோக்கி ஓடினான் பிரசாத்.<br />
<br />
சிந்தனையில் இருந்த சௌந்தர் உள்ளுணர்வு காரணமாக தன்னை நோக்கி ஒருவன் ஓடி வருவதை உணர்ந்தான். அவனை பார்த்தான் உடனே வேகமாக ஓட்டம் பிடித்தான். அவன் எதற்காக ஓடி வருகிறான் என புரியவில்லை. ஆனாலும் அவன் மனதில் இப்போது தீர்மானமாக அப்ரூவராவது என்ற எண்ணம் உண்டானது. </div><div class="gmail_quote">வேகமாக கோயில்களின் பிரகாரங்கள் இடையே ஓடி பிரசாத்தை திசை திருப்பினான். ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தப்பித்து ஓரிடத்தில் ஒளிந்தபோது எதிரே பாண்டியன் பிராசதக் கூடையுடன் நின்று கொண்டிருப்பதை கவனித்தான். <br />
<br />
அவர் கவனிக்காதபோது அருகில் சென்று அந்த பிரசாதக் கூடையில் தன் கையில் இருந்த கடித்ததை அதில் போட்டுவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றான்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------------------------------- </div><br />
<i>”ஜெயந்த் நீ வெளியே நிக்கிற செகரெட்டரி ஜானை தீர்க்கணும். அவன் மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிஞ்சவன். பிரபாகர் நீ வீட்டுகுள்ளே போய் ஆண்டர்சனையும் அவர் காதலியையும் தீர்த்துகட்டணும்”</i><br />
<i> </i> <br />
பிஎஸ்வியின் வார்த்தைகளை பிரபாகர் யோசித்துக் கொண்டிருந்தான். ஜெயந்த் வேறு திட்டத்துடன் இருந்தான். <br />
<br />
“பிரபா குமாரை வரச்சொல்லு.”<br />
<br />
“அவன் எதுக்கு”<br />
<br />
“இதப்பார் நாளை மறுநாள் ஏஞ்சலினா பிறந்தநாள் அன்னைக்கே சொத்த மாத்திடுவார் அது மட்டுமில்லாம அவளை விக்கிறதுக்கு ஆளை வரச்சொல்லிட்டார் அன்னைக்கே அதுக்கு முன்னாடி அவளை நான் அடையணும்.” என்றான் ஜெயந்த்.<br />
<br />
“அது மட்டுமில்ல பிரபா, நீ பிஎஸ்வி சொன்னதையெல்லாம் ரெகார்ட் பண்ணிட்டே அதைவைச்சு பிளாக்மெய்ல் பண்ணி பணம் வாங்கிப்பே ஆனா எனக்கு? எனக்கு பணம் வேண்டாம் ஏஞ்சலினாதான் வேண்டும் நாம பிஎஸ்வி சொன்ன வேலையை செய்யற அதே டைம் பிஎஸ்வியும் பிஸியா இருப்பார். அதான் சரியான சமயம் குமாரை வச்சு அவளை நம்ம இடத்துக்கு கடத்திட வேண்டியதுதான்! இத்தனை நாளா அவன் எங்கே போய்ட போறான்னு பார்த்தேன் ஆனா நீ போட்டு காமிச்ச டேப்பை கேட்டதுக்கு அப்புறம்தான் இந்த முடிவு எடுத்தேன்”<br />
<br />
“சரி குமாரை வரச்சொல்றேன் நாம ஆண்டர்சனை கொல்ற அன்னைக்கு ஏஞ்சலினாவ துக்கணும்! அதாவது....”<br />
<br />
“நாளைக்கு”<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------------------------------------------------------- </div><br />
சௌந்தரை தவற விட்ட கோபத்தில் வெறுப்புடன் வந்து கொண்டிருந்த பிரசாத் முன் கையில் குண்டிபட்டு ரத்தத்துடன் ரமேஷ் வந்தார்.<br />
<br />
”சார் என்னாச்சு”<br />
<br />
“இங்க ஒண்ணும் பேச வேணாம் நாம வந்த வண்டியை எடுத்துட்டு வா”<br />
<br />
ஓட்டலை வந்தடைந்தனர் இருவரும்.<br />
<br />
“சார் எப்படி குண்டடிபட்டுச்சு”<br />
<br />
“அந்த கண்ணாடி போட்ட ஆள் கையில் துப்பாக்கி இருந்தது அவன் வெளியே போனான்,. நான் மத்த 2 பேரையும் கண்காணிச்சேன். ஆனா இவன் என் பின்பக்கமா வந்து என்னை மடக்கிட்டான் அவனை அடிச்சுட்டு தப்பிக்கிறப்ப அவன் சுட்டுட்டான். நல்ல வேளை குண்டு உரசிகிட்டு போயிடுச்சு. லேசான காயம்தான்”<br />
<br />
“சார் அவங்க மோசமானவங்கதான் சார். இனிமே உஷாரா இருக்கணும். வேணும்னா போலீஸ்ல சொல்லிடலாமா?”<br />
<br />
“இல்லை வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். இது ரகசியமா இருக்கணும்.”<br />
<br />
”சரி சார். சட்டையெல்லாம் ரத்தமா இருக்கு, கழட்டிடங்க நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?”<br />
<br />
“இல்ல வேண்டாம்! நீ போய்ட்டு நாளைக்கு வா.”<br />
<br />
“சரி சார் வரேன் உடம்ப பார்த்துகுங்க ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிகிங்க!”</div><div class="gmail_quote">பிரசாத் போனபின் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்த ரமேஷ் ரத்தம் படிந்த சட்டையை கழற்றிவிட்டு தன் மார்பினை தொட்டுப் பார்த்தார். <b>அதில் கேங்குலா நாட்டின் ராஜ முத்திரை பச்சை குத்தப்பட்டிருந்தது.</b><br />
<br />
<b>(தொடரும்)</b></div><br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"> <a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart4.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b4.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-41981444352311106692011-02-14T17:39:00.000-08:002011-02-18T14:10:42.172-08:00BLACK RIVER - அத்தியாயம் மூன்று<div style="border: 2px ridge red; color: black;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;">தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!</div></div></div></div><div style="color: black;"><br />
</div><div class="separator" style="clear: both; color: black; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9atkgaK9x-jsjaPuBCcSt09kknTLzpZ8NXt8FZKZgHwWUuSqCao6F1ecrr78qv5hBojG2UYiqmjL3cRXy2M5JHMoTUlKbKwRwtfx6KkI9iSTr_2qHgHnTZwCBfr9aTc_DqxAo0NzK-fbS/s1600/black+river+main3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9atkgaK9x-jsjaPuBCcSt09kknTLzpZ8NXt8FZKZgHwWUuSqCao6F1ecrr78qv5hBojG2UYiqmjL3cRXy2M5JHMoTUlKbKwRwtfx6KkI9iSTr_2qHgHnTZwCBfr9aTc_DqxAo0NzK-fbS/s1600/black+river+main3.jpg" /></a></div><div style="color: black;"><br />
</div><div style="color: black;"><span style="font-size: small;"><div class="im"><div style="text-align: center;"><b><u>அத்தியாயம் - 3</u></b><br />
<u><br />
</u></div></div>ராம் ஒரு உற்சாகத்துடன் ஏஞ்சலினா வீட்டை அடைந்தான். அவள் அவனுக்காகவே புன்னகை ஏந்தி காத்திருந்தாள். ராம் நாம் அங்கே போய்டுவோம் என அவள் மாமா கட்டியிருந்த அந்த தனி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.<div class="im"><br />
<br />
அவள் வெகுநேரம் மவுனமாக நடந்தாள். பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். கதவு தானா பூட்டிக் கொண்டது. ராம் பயந்தான். ஏஞ்சலினா தன்னிடம் ஒரு சாவி இருப்பதாகவும் அதனால் போகும்போது திறந்து கொள்ளலாம் என சொன்னாள். ராம் சந்தோசம், பயம் இவை கலந்த மனநிலையில் இருந்தான்.<br />
<br />
“ராம் ”<br />
<br />
”என்ன ஏஞ்சலினா”</div>“இந்த வீடு எனக்கு சந்தோசம் துக்கம் இரண்டையும் கொடுத்த வீடு!”<div class="im"><br />
<br />
“என்ன சொல்ற”<br />
<br />
“ஆமாம் ராம் என் சின்ன வயசிலேயே என் அம்மா அப்பா இறந்துட்டாங்க. என் மாமா என் அம்மா கூடப் பிறந்தவர். திருமணமே செஞ்சுக்கலை. என்னை வளர்த்தார்”</div>“அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டானவர். பிஎஸ்வின்னு சொன்னா எல்லோரும் நடுங்குற அளவுக்கு பயங்கரமான போலீஸா இருந்தவர். அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்தமா செக்யூரிடி நிறுவனம் தொடங்கினார். எதுக்குன்னு தெரியலை.”<br />
<br />
“பெரும்பாலும் எனக்கு எல்லாமே செஞ்சார். ஆனா ரொம்ப கட்டுப்பாடு அதிகம். எல்லாம் என் மேலே இருக்கிற அன்பினால செய்யறார்னு நினைச்சேன் ஆனா அது என் பேர்ல இருக்கிற சொத்துக்காகத்தான்னு பின்னாடி புரிஞ்சது. இன்னும் இரண்டு நாளில் என் பிறந்தநாள் வரப்போகுது. அப்ப எனக்கு 21 வயசு. எனக்கு 21 வயது முடிஞ்சவுடன் என் சொத்தை யாருக்கு வேணா எழுதலாம்கிறது என் அப்பா எழுதி வச்ச உயில் அதை அவரு பேருக்கு மாற்றும் வரைக்கும்தான் நான் நல்லா இருக்க முடியும்....”<div class="im"><br />
சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் ஏஞ்சலினா. <br />
<a name='more'></a></div></span><br />
<span style="font-size: small;">”ஏஞ்சல், அழாதே நான் இருக்கேன் உனக்கு”</span></div><span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">“ராம் எனக்கு எப்ப கஷ்டம் வந்தாலும் என் அப்பா அம்மாவோடபொருட்களை வச்சு பார்த்துகிட்டு இருப்பேன். ஒரு நாள் அதை என் மாமா கோபத்தில் இங்கே கொண்டு வந்து போட்டுட்டார். அப்புறம் அவருக்கு தெரியாம ஒரு டூப்ளிகேட் சாவி ரெடி பண்ணிணேன் அப்பப்ப இங்க யாருக்கும் தெரியாம வந்து இருப்பேன்”<div class="im"><br />
<br />
“இதான் என் மாமா அவர் நண்பர்களோடு பேசும் அறை.” அதற்கு அருகிலிருந்து ஒரு அறைக்குள் நுழைந்தாள். அதில் குப்பைகள் கொஞ்சம் இருந்தன. அதில் ஒரு ஃபோட்டோவை எடுத்தாள்.<br />
<br />
“இதான் என் அம்மா அப்பா இது அவங்க என் பிறந்த நாளுக்கு கடைசியா கொடுத்த கிஃப்ட்”<br />
அதை பார்த்து விட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள்.<br />
<br />
“ஏஞ்சலினா அழாதே இனி உனக்கு நான் இருக்கேன். உன் மாமாகிட்ட இருந்து நான் உன்னை காப்பாத்துறேன்.”<br />
அவளுக்கு ஆறுதல் சொன்னான். அவள் சமாதானமாகினாள். அவள் அவன் கண்ணை பார்த்தாள். அவனும்... ராம் மெதுவாக கையை எடுத்து அவள்கையை பிடித்தான், அவளை நெருங்கி அணைக்க....<br />
<br />
க்றீச்ச்ச்ச்.....<br />
<br />
வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>-------------</div><br />
”நாகா நாம எவ்வளவு கஷடப்பட்டு அந்த இரண்டு போலீஸ்காரங்க கிட்ட இருந்து தப்பி வந்தோம்னு தெரியுமில்ல. யோகேஷ்க்கு வேற அடிபட்டிருச்சு”<br />
<br />
“அது சின்ன காயம்தானே சரியாயிடும்.”<br />
<br />
“நாகா நீ இன்னும் பிரச்சினையின் வீரியத்தை புரிஞ்சுக்கலையா இல்லை. ஆணவத்தில இருக்கியா!”<br />
<br />
“சௌந்தர் என்ன நீ நாகாவை இப்படி பேசறே”<br />
<br />
“யோகேஷ் உனக்கு அடிபட்டிருக்கு அப்பவும் புரியலையா பயமா இல்லையா”</div>யோகேஷ் சிரித்தான் “இதோ பார் சௌந்தர்! மேட்டர் சீரியஸ்தான். ஆனா அதிலதான் த்ரில்லே இருக்கு! அந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் முகத்தில் பலமா வெட்டுக்காயம் ஏற்படற அளவுக்கு நாகா அடிச்சுருக்க கூடாதுதான். ஆனா செஞ்சுட்டான் அதுக்காக இப்ப அவனுக்கு பயப்பட முடியுமா”<div class="im"><br />
<br />
அமைதியாக இருந்த நாகா “என்ன சௌந்தர் சமீப காலமா உன் பேச்சுக்களே சரியில்லையே நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான் இன்னும் 2 மாசத்துக்கு நாம செய்ய வேண்டிய டிரக் டீலீங் நிறைய இருக்கு அதை முடிக்கும் முன்னாடி நீ எங்களை விட்டு போக முடியாது அப்படி போக நினைச்சே நீ அவ்வளவுதான்!”<br />
<br />
சௌந்தர் அமைதியாக இருந்தான்.<br />
<br />
”என்ன சௌந்தர் நாகா கேட்கிறான்ல சொல்லு வேலை முடிகிற வரைக்கும் எங்க கூட நாங்க சொல்ற மாதிரி இருப்பியா” <br />
<br />
“இருப்பேன்” என்று கடுமையாக கூறிய சௌந்தரின் மனதில் வேறு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>-------------</div><br />
அவன் கையில் கத்தி இருந்தது மூர்க்கமாக அதை தன் கைவிரல்களில் இடையே மாற்றி மாற்றி குத்திக் கொண்டிருந்தான்.<br />
<br />
“எனக்கு கிடைக்க மாட்டாளா கிடைப்பா எப்படி கிடைக்காமா போய்டுவா”<br />
<br />
அவன் வாய் சப்தமில்லாமல் இதை முணுமுணுத்தாலும் அதில் இருந்த கோபம் பயப்பட வைத்தன.<br />
<br />
திடீரென செல்ஃபோன் ஒலித்தது.<br />
<br />
“ஹலோ ஜெயந்த் எங்கே இருக்க”<br />
<br />
அவன் கைகளில் இருந்த கத்தியை கோபமாக காற்றில் வீசிக் கொண்டே “சொல்லுடா பிரபா நான் ஸ்டீவ் பார்க்கில் இருக்கேன். நீ ஏன் இன்னும் வரலை.”<br />
<br />
“கொஞ்சம் இங்கே வேலை அதான், சரி அரை மணி நேரத்தில வந்துருவேன் சாயங்கலாம் மாஸ்டர் பிஎஸ்வியை பார்க்க போகனும் ஞாபகம் இருக்கில்ல.”<br />
<br />
“ம் இருக்கு”<br />
<br />
”ஏண்டா கோபமா இருக்கே.... அந்த ஏஞ்சலினா விஷயமா”<br />
<br />
“ஆமா அவளை கல்யாணம் பண்ணித் தரச்சொன்னா நீ ஒரு அடியாள் அந்த வேலையை மட்டும் பாரு மத்ததுக்கெல்லாம் ஆசைப்படாதேங்கிறான் அந்த பிஎஸ்வி”</div>“ஜெயந்த் கவலைப்படாதே உனக்கு ஒரு விஷயம் தெரியுமா. ஏஞ்சலினாவோட இந்த பிறந்த நாள்ல சொத்தை தன் பேருக்கு மாத்திட்டு அவளை யாருக்கோ விக்க போறார் அவர்”<div><div class="h5"><br />
“என்னடா சொல்ற”<br />
<br />
“ஆமா அதனால நாம ஏஞ்சலினாவை அடையறுது கொஞ்சம் ஈஸிதான் அது மட்டுமில்லாம ஏதோ ஒரு விஷயத்துக்காக 2-3 மாசமா நமக்கு பயிற்சி குடுக்கிறார் அது என்ன விஷயம்னு இன்னிக்கு தெரியும்னு நினைக்கிறேன் இதெல்லாம் வச்சு பிளாக்மெயில் பண்ணி பணம் பறிக்கலாம்னு நினைக்கிறேன் நீ அப்படியே ஏஞ்சலினாவை மிரட்டி வாங்கு!”<br />
<br />
“டேய் நீ சொல்றது நல்ல ஐடியாதான். சரி நீ சிக்கிரம் வா”<br />
<br />
ஜெயந்த் இப்போ சந்தோசம் மற்றும் குரூரத்துடன் மீண்டும் கைகளிடையே குத்த ஆரம்பித்தான். திடீரென ஒரு விரலின் ஓரத்தில் ரத்தம் வந்தது அவன் கத்தாமல் அமைதியாக குரூரமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வழியே சென்ற ஒருவன் அதை பார்த்து பயத்துடன் அமைதியாக சென்றான்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>-------------</div><br />
அதே ஸ்டீவ் பார்க்கின் மற்றொரு பக்கம் மங்குனியும் பாபும் உட்கார்ந்திருந்தார்கள்.<br />
<br />
“சார் அடுத்த லைன் 2fluid running in moving flow in this non moving” <br />
<br />
“2 படத்தோட எண்ணிக்கையை குறிக்குது அது என்ன ஓடுற இடத்தில் ஓடும் திரவம் ஓடாத இடத்தில் ஓடுது புரியலையே பாபு”<br />
<br />
“என்ன திரவம் அது”<br />
<br />
“இந்த செல்வா எங்கே கூல்ட்ரிங் வாங்க போனவன் இன்னும் காணோம்”<br />
<br />
அப்போது செல்வா திகிலடைந்த முகத்துடன் வந்தான்.<br />
<br />
”என்ன செல்வா ஒரு மாதிரியா இருக்கே”<br />
<br />
‘வரப்ப ஒருத்தனை பார்த்தேன் கையில வேகமாக கத்தியால குத்திகிட்டு இருந்தான் கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டுது. சத்தமே போடாம அமைதியா மரம் மாதிரி இருக்கான். கண்ணில் குரூரம், அப்பபா! ஏதோ சைக்கோ போல!”<br />
<br />
“ரத்தம்... மரம்,,,,,சார் ஐ காட் இட்” பாபு கத்தினான். ”என்ன பாபு”<br />
<br />
“ஓடுற இடத்தில் ஓடும் திரவம் ஓடாத இடத்தில் ஓடுது அது ரத்தம் இங்கே ப்ளீடிங் ட்ரீன்னு ஒரு ரத்தம் ஒழுகும் மரம் இருக்கு”<br />
<br />
“என்ன ரத்தம் ஒழுகும் மரம் அதுவா”<br />
<br />
“ஆமா சார் அது உண்மையான ரத்தமான்னு தெரியலை ஆனா பல நூற்றாண்டுகளாய் அது இருக்கு! அது ஒரு மரம்தானே சோதனை பண்ணி பார்ப்போம் இருந்தா இருக்கலாமில்லையா!”<br />
<br />
மங்குனி ”சரி அப்ப வாங்க உடனே கிளம்பலாம்”<br />
<br />
மூவரும் பார்க்கிற்கு வெளியே இருந்த வண்டியில் கிளம்பினார். அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த ரமேஷும் கிளம்பினார்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>-------------</div><br />
“சதீஷ் அவங்க மட்டும் என் கையில் மாட்டுனாங்க அவ்வளவுதான்!”<br />
<br />
“சார் நீங்க ரொம்ப அதிகமா கோவப்படுறீங்க”<br />
<br />
”வெட்டு உன் மூஞ்சில விழுந்திருந்தா தெரியும்! மவனே அந்த நாகா என் கையில மாட்டட்டும்!”<br />
<br />
“சார் விடுங்க சார் அவங்க மாட்டுறப்ப கோபத்தை காமிக்கலாம்”<br />
<br />
“சே நேத்து கூட தப்பிச்சுட்டானே”<br />
<br />
“நான் கிளம்பறப்பயே சொன்னேன் போலீஸ் படையோட போகலாம்னு நீங்கதான் தன்மானம் அப்படி இப்படின்னு தனியா போய் கோட்டை விட்டுட்டோம்”<br />
<br />
“அவனுங்க நல்லா சண்டை போடுறாங்க ஆனா அடுத்த தடவை அது அவங்களுக்கு கை கொடுக்காது”<br />
<br />
”யார்யா அது 3 பேர் அந்த மரத்தை சுற்றி சுற்றி வராங்க”<br />
<br />
“இரு போய் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு பாண்டியன் சென்றார்.<br />
<br />
சதீஷ் அங்கேயே நின்று யோசித்தார்.<br />
<br />
பாண்டியன் நல்லவர்தான். நல்ல திறமைசாலிதான். ஆனால் கோபக்காரர். அதுவும் நாகாவுடன் ஏற்பட்ட மோதலில் காயம்பட்டதிலிருந்து அடிபட்ட வேங்கையாய் மூர்கத்துடன் இருக்கிறார். அவரை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும்.<br />
<br />
“சார் நீங்களா எப்படி இருக்கீங்க சார்”<br />
<br />
குரல் கேட்டு திரும்பினார் சதீஷ். அங்கே பிரசாத் நின்று கொண்டிருந்தான்.<br />
<br />
“பிரசாத் நீயா பார்த்து ரொம்பம் நாளாச்சு எப்படி இருக்கே தாத்தா எப்படியிருக்கார்?”<br />
<br />
“நல்லாயிருக்கோம் சார் நீங்க எப்படி இருக்கீங்க வேலை எப்படி போகுது?”<br />
<br />
“எனக்கென்ன நல்லாயிருக்கேன் மனைவி குழந்தை எதுவுமில்லை வேலைதான் எல்லாமே குற்றவாளிகளை துரத்திகிட்டு இருக்கேன். ஆமா நீ என்ன இங்க”<br />
<br />
“அது வந்து ஒரு கஸ்டமர் இந்த போக வழி கேட்டாரு ஃபோன்ல சொன்னேன் சரி அவர் இங்கேதான் வந்திருப்பார் அவரை பார்த்து கொஞ்சம் பணம் வாங்கலாம்னு வந்தேன் அவர் எங்கேன்னு தெரியலை அதான் தேடிட்டு இருக்கேன்”<br />
<br />
“சரி சரி, நானும் இன்ஸ்பெக்டர் கூடத்தான் வந்தேன் அவர் இப்ப வந்துருவார்.”<br />
<br />
“சரி சார் அப்புறம் பாக்கலாம் நேரம் கிடைக்கிறப்ப வீட்டுக்கு வாங்க”<br />
<br />
“இந்தா இந்த பணத்தை வச்சிக்க” “இல்ல சார் நான் சும்மா கிடைக்கிற பணமோ தப்பான வழி பணமோ அதை விரும்பறதில்லை.”</div></div>“என்னப்பா நீ என்னை ஒரு தடவை திருடங்க சுத்துபோட்டப்ப காப்பத்தினவன் நீ என் உயிரை காப்பத்தினவன் நீ ஒரு பாசத்தில தந்தேன் வச்சிக்க” என்று அவன் பாக்கெட்டின் பணம் வைத்து விட்டு ”என்ன உதவி வேணும்னாலும் கேள்” என்று சொல்லி விட்டு சென்றார் சதீஷ்.<div><br />
<div class="h5">பிரசாத்தும் ரமேஷை தேடினான்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>-------------</div><br />
“சார் இங்கேயும் ஒரு பெட்டி கிடைச்சிடுச்சு” சந்தோஷத்தில் செல்வா கத்தியபோது...<br />
<br />
“யார் மேன் நீங்க இங்க என்ன பண்ணுறீங்க” என்று அங்கே வந்தார் பாண்டியன்.<br />
<br />
மங்குனி திடுக்கிட்டு பின் சமாளித்தார். “சார் நான் ஒரு புரொபசர் இவங்க என் மாணவர்கள் இந்த ப்ளீடிங் ட்ரீல எப்படி ரத்தம் வருதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்”<br />
செல்வா பெட்டியை பாண்டியனுக்கு தெரியாமல் மறைத்தான். பாண்டியன் சிறிது நேரம் விசாரித்து விட்டு சந்தேகம் விலகிச் சென்றார்.<br />
<br />
“எல்லாத்தையும் எடுத்துகுங்க, வாங்க மிச்சத்தை ரூம்ல போய் பேசிக்கலாம்” என மங்குனி செல்வா, பாபுவுடன் கிளம்பினார்.<br />
<br />
அவர்களை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த ரமேஷின் அருகில் வந்து நின்றான் பிரசாத்.<br />
<br />
”சார் நீங்க இங்க இருக்கீங்களா”<br />
<br />
இவன் எங்கே இங்கே வந்தான் என குழப்பத்துடன் “நீ எப்படி இங்க?”<br />
<br />
“ஃபோன் பண்ணி இடம் பற்றி கேட்டீங்க அப்ப இங்கதானே இருப்பீங்க அதான் பார்க்க வந்தேன்”<br />
<br />
”அப்படியா சரி போலாம்”<br />
<br />
பிரசாத் கேட்டான் “யார் சார் அவங்க”<br />
<br />
ரமேஷ் திடுக்கிட்டு “என்ன கேட்கிற”<br />
<br />
“அந்த 3 பேர் யாரு நீங்க எதுக்கு அவங்களை ஃபாலோ பண்ணுறீங்க”<br />
<br />
“சே நீ என்ன , என்னென்னமோ சொல்ற?”<br />
<br />
“சார் நான் பார்த்தேன் நீங்க அவங்களையே கண்காணிச்சுட்டு இருந்தீங்க, அவங்களை லைட் அவுஸ்லையும் நான் பார்த்திருக்கேன். நீங்க ஒரு சாதாரண டூரிஸ்ட் மாதிரி இல்ல. என்னமோ பண்றீங்க. என்கிட்ட சொல்ல விருப்பம்னா சொல்லுங்க”<br />
<br />
ரமேஷ் சிறிது யோசித்து விட்டு சொன்னார் “ஆமாம் நான் சாதாரண டூரிஸ்ட் இல்லை. நான் ஒரு டிடெக்டிவ் என்னோட வேலை அந்த 3 பேரை கண்காணிச்சு எங்கே போறங்கன்னு பார்த்து தகவல் சொல்லணும்”<br />
<br />
“அவங்க தப்பான வேலை செய்யறாங்களா சார்”<br />
<br />
“தெரியலை அதைதான் நான் கண்காணிக்கணும்”<br />
<br />
”சரி சார் நானும் இனிமே உங்க கூட இருக்கேன் உதவி பண்றேன்”<br />
<br />
ரமேஷ் மீண்டும் யோசித்தான் “சரி ஆனா அவங்களுக்கு நாம கண்காணிக்கறது தெரியக்கூடாது அதேபோல் அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கறத யார்கிட்டயும் சொல்ல கூடாது. ”<br />
<br />
“சரி சார்”<br />
<br />
<div style="text-align: center;">------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>-------------</div><br />
கார்ச் சத்தம் கேட்டவுடன் திடுக்கிட்டார்கள் ராமும் ஏஞ்சலினாவும் அவர்கள் இருந்த அறையின் ஜன்னலின் சிறு சந்து வழி வெளியே பார்த்தார்கள். காரிலிருந்து பிஎஸ்வி ஒருவருடன் இறங்கி கொண்டிருந்தார். அவரை பார்த்து ஆச்சரியப்பட்டான்.<br />
<br />
“ஏஞ்சலினா இது இவரு எதிர்கட்சி தலைவர் எஸ்.கே தானே அவர் எப்படி உங்க மாமா கூட...”<br />
<br />
“என் மாமாவுக்கு நிறைய பெரிய இடத்து ஆளுங்க பழக்கம்”<br />
<br />
“சரி இப்ப எப்படி தப்பிக்கிறது”<br />
<br />
“என் மாமா வழக்கமா மத்தியான நேரத்தில வரமாட்டார் இப்ப வந்திருக்கார் அவர் போற வரைக்கும் ஒளிஞ்சிருக்க வேண்டியதுதான்.” என சொல்லிக் கொண்டே தான் இருந்த அறையை உட்பக்கம் மூடினாள்.<br />
<br />
பிஎஸ்வியும் எஸ்.கேவும் அவர்கள் ஒளிந்திருந்த அறைக்கு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பேசுவது ராமுக்கும் ஏஞ்சலினாவிற்கும் தெளிவாக கேட்டது.<br />
<br />
“உட்கார் எஸ்.கே”<br />
<br />
“ம். இங்கே ஃப்ரீயா பேசலாமில்ல”<br />
<br />
“தாரளாமா. இங்கே யாரும் வர மாட்டாங்க. அதான் நீ திட்டத்தை சொல்ல போறேன்ன உடனே இங்கே கூட்டிட்டு வந்தேன். ஏதாவது சாப்பிடுறியா”<br />
<br />
”வேண்டாம். நாம திட்டத்தை பத்தி பேசலாம். ஆரம்பிக்கவா” “ம் ஆரம்பி!”<br />
<br />
பேச ஆரம்பித்தார் எஸ்.கே.<br />
<br />
“3 மாசம் முன்னால நான் உன்கிட்ட வந்து ஒரு முக்கியமான திட்டம். அதுக்கு சில ஆட்கள் தேவை 2-3 மாசத்துக்குள்ள ஆட்களை கடுமையா சண்டை, எல்லா பயிற்சிகளையும் கொடுத்து தயாரா வைக்க சொன்னேன் சரியா? ”<br />
<br />
“செக்யூரிடி கம்பெனிங்கிங்கிற பேர்ல அடியாள் வேலை பாக்கிற நீ இதையும் ஒரு அடிதடி வேலைன்னு நினைச்சிருக்கலாம். ஆனா இது அப்படியில்லை. இந்த திட்டதிற்காக நீ 2 பேருக்கு நல்லா டிரைனிங் கொடுத்து தயார் பண்ணியிருக்கிறதாவும் சொன்ன.”<br />
<br />
“இந்த 2-3 மாச காலம் உனக்கு குடுத்த வேலைக்கு தயாராக தேவையா இருந்தது அதே போல் எனக்கும் நம்ம திட்டத்தோட முதல் பகுதியை செயல்படுத்த தேவையா இருந்தது. இப்ப நம்ம திட்டம் செயல்பட வேண்டிய காலம் வந்திருச்சு”<br />
<br />
அதுவரை பொறுமையாக இருந்த பிஎஸ்வி “சரி நம்ம திட்டம்தான் என்ன??”<br />
<br />
“சொல்றேன் அதுக்கு முன்னாடி நீ நம்ம பிரசிடெண்ட் சாம் ஆண்டர்சனை பற்றி தெரிஞ்சுக்கனும்.”<br />
<br />
“அழகான மனைவி, 2 வளர்ந்த பிள்ளைகள்னு இருக்கிற, நல்ல அரசியல்வாதின்னு பேரெடுத்த நம்ம பிரசிடெண்ட் சாம் ஆண்டர்சனுக்கு இன்னொரு மறுபக்கம் உண்டு. அவர் அடிக்கடி தன் அலுவலகத்தில் முக்கிய முடிவெடுக்க சில அமைச்சர்களோட சந்திப்பு நடத்துவார். மீடியா எல்லாம் அவர் என்ன சொல்வார்னு அவர் அலுவகத்துக்கு முன்னால காத்திருப்பாங்க. அவரோ சாயங்காலம்தான் முடிவை சொல்வார்”<br />
<br />
“இதான் எல்லோருக்கும் தெரியுமே எஸ். கே”<br />
<br />
புன்னகைத்த எஸ்கே தொடர்ந்தார். ”ஆனா அந்த நம்பிக்கையான அமைச்சர்களை கைக்குள்ள போட்டுகிட்டு அவர் ஒரு தப்பு பண்ணுறார். அந்த மீட்டிங் நடக்குதுன்னு ஒரு மாயை ஏற்படுத்திட்டு ரகசியமா தன் செகரட்டரி ஜான் கூட மட்டும் மாறுவேஷத்தில கிளம்பி தன் காதலி வீட்டுக்கு போய்ட்டு வரார்”<br />
<br />
“என்ன???”<br />
<br />
“ஆமா யாருக்கும் சந்தேகமே வராது இப்படித்தான் எப்பவும் நடக்குது ”<br />
<br />
”அடக்கடவுளே! சரி இதில் நம் திட்டம் என்ன?”<br />
<br />
“திட்டம் இரண்டு பகுதியை கொண்டது முதல் பகுதியை நாம இப்ப பாக்க போற இடத்தில் சொல்றேன். இரண்டாவது பகுதி இதுதான். நல்ல அரசியல்வாதின்னு பேரெடுத்த சாம் ஆண்டர்சன் இப்படி கள்ளகாதல் தொடர்பில் இருக்கார்னு அவர் குடும்பம் மீடியாவுக்கு தெரிஞ்சா, வரப் போற தேர்தல்ல அவர் கட்சி தோற்கும் என் கட்சி ஜெயிச்சு நான் பிரசிடெண்ட் ஆயிடுவேன். ஆனா இந்த விஷயம் வெளியே போனா சாம் எப்படியும் அதை மூடி மறைப்பார். சதி, போலி சாட்சி அது இதுன்னு பேசுவார். நான் ஜெயிக்க முடியாது,”<br />
<br />
“அதனால அவர் மோசமானவர்னு மக்களுக்கு தெரியணும், அதே சமயம்.......”<br />
<br />
“அதே சமயம்......?”<br />
<br />
<b>“அவரை கொலை பண்ணனும்!”</b><br />
<br />
<b>(தொடரும்....)</b></div></div></span> <br />
<div style="color: black;"><br />
</div><br />
<br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"> <a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart3.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b3.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-70628453601208939582011-02-12T16:51:00.000-08:002011-02-18T14:10:11.772-08:00BLACK RIVER - அத்தியாயம் இரண்டு<div style="border: 2px ridge red;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;">பாகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்குன்னு நினைக்காதீங்க சின்னதா போட்டா சுவாரசியமா இருக்காது. மேலும் கதையும் நகராது. அதான். மன்னித்துக் கொள்ளுங்கள்!</div></div></div></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBiQjn5sns1oPdD72ehEfR0xqdUbBnGi736qZ-4W_AIFiitLi_I7W4YU5NuohX00WD3dvbxL7tK-SYA59JyFtYqnW89ERL7gfbkYtDLsAisgt7aWUITsedZ4FCXp4xAJHhKXObhpq91Hxv/s1600/black+river+main.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="376" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBiQjn5sns1oPdD72ehEfR0xqdUbBnGi736qZ-4W_AIFiitLi_I7W4YU5NuohX00WD3dvbxL7tK-SYA59JyFtYqnW89ERL7gfbkYtDLsAisgt7aWUITsedZ4FCXp4xAJHhKXObhpq91Hxv/s400/black+river+main.jpg" width="400" /></a></div><br />
<div style="text-align: center;"><span style="font-size: small;"><u><b>அத்தியாயம் இரண்டு</b></u></span></div><br />
<br />
<span style="color: black;">மொரிஷியஸ்.</span><br />
<div style="color: black;"><br />
</div><div style="color: black;">மங்குனி, செல்வா, பாபு மூவரும் உட்கார்ந்திருந்தனர்.</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">”எப்படி சார் இங்கே புதையல் இருக்குன்னு கன்ஃபார்மா சொல்றீங்க?” </div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">”சொல்றேன் அதுக்கு முன்னால் நாம மூணு பேரும் 2 வருஷத்துக்கு முன்னால் இந்த மொரிஷியசில் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம் நினைவிருக்கா?”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“ஆமாம் சார் பழங்கால கடற்கொள்ளையர்களின் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி அது.”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“அதில் ஒரு முக்கியமான ஆனால் நீங்கள் நம்பாத விஷயம் ஞாபகம் இருக்கா?”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“ம்... இருக்கு சார்! கடற்கொள்ளையர்கள் பற்றி ஆராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளின்படி சுமார் கிபி 1750ஆம் வாக்கில் கேங்குலா நாட்டை சேர்ந்த ஒரு கப்பலை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். அக்கப்பலில் கேங்குலா நாடு மிகவும் போற்றும், மதிப்பு மிக்க சில பொருட்கள் இருந்துள்ளன. அதை காப்பாற்ற அந்த நாட்டு வீரர்கள் போராடினர் அந்த மதிப்பு மிக்க பொருட்கள் அதாவது புதையலை எங்கேயோ பதுக்கி விட்டு அதன் குறிப்பை கொண்டு செல்ல முயற்சித்து அவர்கள் தோற்றுவிட்டார்கள். ”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“ஆமாம் சரிதான் ஆனால் அந்த புதையல் இன்னும் இங்கேதான் உள்ளது என நான் சொன்னதை நீங்க இரண்டு பேரும் நம்பலை.”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“ஆமாம் சார் ஒண்ணு அந்த குறிப்பு கொள்ளையர்கள் கிட்ட கிடைச்சிருக்கணும், இல்லை கேங்குலா நாட்டை சேர்ந்தவங்க கிட்டேயே கிடைச்சிருக்கணும். எப்படியிருந்தாலும் புதையல் இங்க இருக்காது சார்!”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">மங்குனி புன்னகைத்தார். “அப்படி கிடைச்சிருந்த அந்த குறிப்புகள் எனக்கு எப்படி கிடைக்கும்?”<br />
<a name='more'></a></div>”என்ன சார் சொல்றீங்க உங்களுக்கு அந்த குறிப்புகள் கிடைச்சதா?”<br />
<div style="color: black;"><br />
</div><div style="color: black;">”ஆமாம் ஆராய்ச்சி முடிந்து நீங்க போன பிறகு எனக்கு இங்கேதானே வேலை இருந்தது. வழக்கம்போல என்னோட தொல்பொருள் ஆராய்ச்சிகளை பார்த்து </div><div style="color: black;">கொண்டிருந்த ஒரு நாள் ஒரு படிமம் கிடைத்தது. அது மனித உடலின் படிமம். அதனருகே இருந்த ஒரு சிறு ஓலைச்சுருளுக்குள் அந்த தோல் குறிப்புகள் இருந்தன.” மங்குனி சிறிது நிறுத்தி விட்டு அவர்களை பார்த்தார். பாபுவும் செல்வாவும் அவரையே இமை மூடாமல் பார்த்து கொண்டிருந்தனர். </div><div style="color: black;"><div class="h5"><br />
“அந்த குறிப்புகள் பற்றி அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது புதையல் குறிப்பு என அவர்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பிறகு பார்க்கலாம் என அவர்கள் விட்டு விட்டார்கள். ஆனால் நான் யாருக்கும் தெரியாமல் அந்த குறிப்புகளை கூட வேலை செய்யறவங்க யாருக்கும் சந்தேகம் வராமல் நகலெடுத்துக் கொண்டேன்!”<br />
<br />
”சார் இந்த குறிப்பு அந்த புதையலுடையது என்று எப்படி சொல்றீங்க” என்றான் பாபு.<br />
<br />
“இந்த முத்திரை. இது கேங்குலா நாட்டு ராஜ முத்திரை. அதுவும் இது மிக நெருக்கமான அரச குடும்பத்தினர், குறிப்பாக அரசர், ராணி, இளவரசர், இளவரசி போன்றோருக்கான முத்திரை இது!”<br />
<br />
”அப்படின்னா இது புதையல் பற்றிய குறிப்புதான்” “ஆமாம்”<br />
<br />
அந்த குறிப்புகளை காண்பித்தார்.<br />
<br />
<b>2 light for ocean<br />
<br />
2 fluid running in moving flow in this non moving<br />
<br />
2 who have male and female living here<br />
<br />
1 bomb church</b><br />
”என்ன சார் ஒண்ணும் புரியலை” <br />
<br />
“இது ஒவ்வொன்னும் ஒரு இடத்தை குறிக்குது அந்த எண்கள் எதுக்குன்னு தெரியலை” <br />
<br />
“அப்போ புதையல் நாலா பிரிச்சு வச்சுருப்பாங்களா சார்” <br />
<br />
“தெரியலை அந்த இடத்தில் பொருள் எங்கே இருக்குன்னும் தெரியலை ஆனா நாம உடனடியா அந்த இடங்கள் எதுன்னு கண்டுபுடிச்சு அங்கிருக்கிறதை எடுத்தாகனும்.” <br />
<br />
”உடனேவா?” <br />
<br />
“ஆமாம் அரசாங்கம் எப்ப என்ன நடவடிக்கை எடுக்கும்னு தெரியலை கொஞ்ச நாளில் தேர்தல் வேற வரப்போகுது. நாம தாமதிக்க வேண்டாம்” <br />
<br />
“எங்கேன்னு போய் எதை கண்டுபிடிக்கறதுன்னே தெரியலையே” பாபுவும் செல்வாவும் சலித்துக் கொண்டனர். <br />
<br />
“அதுக்குதானே உங்களை கூப்பிட்டேன்”<br />
<br />
“சரி முதல் வரி என்ன 2 light for ocean. அப்படின்னா கலங்கரை விளக்கம். அதுக்கு பக்கத்து மாவட்டத்துக்கு போகணும்ல” என்றான் செல்வா.<br />
<br />
“இல்லை இப்ப இருக்கிற லைட் ஹவுஸ் கட்டி 120 ஆண்டுகள் தான் ஆகுது ஆனா இது நடந்தது கிட்டதட்ட 200 வருசத்துக்கு முன்னாடி அப்படின்னா அது பழைய லைட் ஹவுஸ்!” என்றான் பாபு<br />
<br />
“so, நம்மோட முதல் டார்கெட் பழைய லைட் ஹவுஸ்!” <br />
<br />
<div style="text-align: center;">**************************************</div><div style="text-align: center;"><br />
</div>அளவில்லாத மகிழ்ச்சியில் இருந்தான் ராம். அவன் எதிர்பார்த்த நாள் வந்து விட்டது. ஏஞ்சலினாவை பார்க்க போக வேண்டும். அப்போது கடையின் போன் ஒலித்தது. “ராம் உன்கிட்ட யாரோ அருண் பிரசாத் பேசனுமாம்”<br />
<br />
இவன் எதுக்கு இப்ப போன் பண்ணுறான் என்று யோசித்து கொண்டே சென்றான் ராம். <br />
”ஹலோ அருண் என்னடா என்ன விஷயம்” <br />
<br />
“என்ன விஷயமா, டேய் அடுத்த மாசம் உன் பாட்டியை பார்க்க இந்தியாவுக்கு போகப் போறேன்னு சொன்னேல்ல அது சம்பந்தமா சில பேப்பர்ல கையெழுத்து போட இன்னிக்கு வரேன்னியே” <br />
<br />
அடடா மறந்துட்டேனே! “அது வந்து, சாரிடா, இன்னிக்கு கடையில் பயங்கர வேலை கடையை விட்டு நகர முடியாது நான் நாளைக்கு வரட்டா.”<br />
<br />
“இல்லடா இன்னிக்குதானே கடைசி நாள். ம் என்ன பண்ணுறது? சரி நானே உன் கையெழுத்தை போட்டுடறேன்!” என்றான் அருண். <br />
<br />
“அதானே நீதான் சின்ன வயசில உங்கப்பா கையெழுத்தையே போட்டவனாச்சே ” என்று அவனை கிண்டல் செய்து விட்டு போனை வைத்தான் ராம்.<br />
<br />
ஏஞ்சலினா! ஏஞ்சலினா! உன்னை பார்க்க வரேன். சே ஒரு காதலியை பார்க்க போறோம் ஒரு கிப்ட் வாங்க கூட கையில் இப்ப காசில்லையே மேரி மேடமும் கடைக்கு வரலை. அருண் கிட்ட கேட்க முடியாது! என்ன பண்ணுறது? ஆங்! பிரசாத்! பிரசாத் கிட்ட கேட்டு பார்க்கலாம்.<br />
<br />
பிரசாத் டூரிஸ்ட் கைடாக இங்கே வேலை செய்கிறான். வந்த சில மாதங்களில் நட்பானவன். அவனுக்கும் தன்னைப் போல ஒரு தாத்தா மட்டும் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.<br />
<br />
ராம் பிரசாத் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.<br />
<br />
<div style="text-align: center;">**************************************</div></div></div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">பிரசாத் தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான். ரமேஷ் இங்கே நீண்ட நாள் தங்கப் போகிறார், நிறைய பணம் தருகிறார். அன்பாக பழகுகிறார். கொஞ்ச நாளைக்கு தனக்கும் தன் தாத்தாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை!</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">தூரத்தில் அவன் தாத்தா மாதவன் தன் வீட்டிற்கு பின்புறம் உள்ள அந்த சமாதியின் முன் அமைதியாக தியானம் செய்வது போல் நின்று கொண்டிருந்தார். அவர் இப்படித்தான் அடிக்கடி அந்த சமாதி முன் நிற்பார். அது பல ஆண்டுகளாக எப்போது வைக்கப்பட்டது என தெரியாமல் இருக்கும் ஒரு சமாதி. கோவில் போல. பிரசாத் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவன். அவன் தாத்தாவின் தாத்தா பழங்குடி பெண்ணை திருமணம் செய்து அவர்களுடனே அவர்கள் பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடித்தவர். அவன் தாத்தா மாதவன் தம் பாரம்பரியம் பற்றி அடிக்கடி சொல்வார். நேர்மையானவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர் என என்னென்னவோ சொல்வார். இப்படித்தான் நடக்க வேண்டும் என சொல்வார். ஆனால் பிரசாத் நேர் எதிர். அவனுக்கு வறுமை பிடிக்கவில்லை பணக்காரனாவதே அவன் குறிக்கோள். ஆனால் தப்பு செய்யும் எண்ணம் இதுவரை வரவில்லை.</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">தாத்தா பிரசாத்தை பார்த்தவுடன் அருகே வந்தார். பின் சிறிது நேரம் கழித்து இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர். ”தாத்தா ஒரு புது ஆளை ஊர் சுற்றி காட்டணும் அவர் கூடவே இருக்கணும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த மாசம் நமக்கு பிரச்சினை இருக்காது!” மாதவன் அமைதியாகப் புன்னகைத்தார். “இப்போ அவரை பழைய லைட் ஹவுஸை சுற்றிக் காட்ட போறேன் வர லேட்டாகும்.”</div><div class="im" style="color: black;"><br />
<br />
பிரசாத் கிளம்பும்போது ராம் வந்தான். “எப்படி இருக்கே பிரசாத் எப்படி இருக்கீங்க தாத்தா?” “நல்லா இருக்கோம்பா” ”தாத்தா நானும் ராமும் இப்படியே கிளம்பறோம்”</div><div style="color: black;">“என்னடா விஷயம்” “ஒண்ணுமில்ல கொஞ்சம் பணம் வே(ணு)னும் அவசரமா” </div><div style="color: black;"><div class="h5"><br />
”எதுக்கு” ராம் உண்மையான காரணம் சொல்லவில்லை. பிரசாத் பணம் தந்த பிறகு வாங்கி கொண்டு சென்றான் காதலியை காண!<br />
<br />
<div style="text-align: center;">**************************************</div></div><div class="h5">பழைய லைட் ஹவுஸ்.<br />
<br />
பிரசாத் ரமேஷுக்கு அந்த இடத்தை சுற்றிக் காட்டினான். ரமேஷ் “நீ இங்கேயே இரு, நான் கொஞ்சம் தனியா இருக்கணும்” என்றார். பிரசாத் விநோதமாக அவரை பார்த்துட்டு கொஞ்சம் விலகிச் சென்றான்.<br />
<br />
<div style="text-align: center;">**************************************</div>”ஏன் லேட்?”<br />
<br />
கேள்வி கேட்ட ஏஞ்சலினாவின் அருகில் தயக்கதுடன் உட்கார்ந்தான் ராம். <br />
<br />
“அதை யேன் கேட்கிற கிளம்புற நேரத்தில ஒரு பிரண்டு ஃபோன் பண்ணிட்டான். அவன் கிட்டயிருந்து தப்பிச்சு இன்னொருத்தனை பார்க்க போனேன். அவனை பார்த்துட்டு வரப்ப என் கடையோட ஓனர் மேரி என்னை பார்த்துட்டாங்க. அவங்க வீட்டு கொஞ்ச அங்க பக்கத்தில் இருந்தது. அவங்க கடையில் இல்லையா என கேட்க எப்படியோ கஷ்டப்பட்டு வந்தேன்” <br />
<br />
“நீங்க வர வரைக்கும் காத்துகிட்டு இருந்தன்னா, யாரோ 3 பேர் சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு மாதிரியா போச்சு.”<br />
<br />
“சரி விடு நாம பேசுவோம்”<br />
<br />
“என்னது?”<br />
<br />
“நீ சொல்ல வந்தது.....” <br />
<br />
ஏஞ்சலினா வெட்கப்பட்டாள். எப்படி சொல்வதென தயங்கினாள். ராம் மெதுவாக அவள் கையை பிடிக்கச் சென்றான்.<br />
<br />
“டேய் ராம் நீ எங்கடா இங்க?”<br />
<br />
திடுக்கிட்டு திரும்பினான் ராம். எதிரே பிரசாத் நின்று கொண்டிருந்தான். ஏஞ்சலினா குழப்பத்தில் ஆழ்ந்தாள்.<br />
<br />
இவன் எங்க இங்க வந்தான் என்று நினைத்து கொண்டே “பிரசாத் நீயா எப்படி இருக்கே?”<br />
<br />
“எப்படி இருக்கேவா இப்பத்தானடா கொஞ்ச நேரத்துக்கு முன்னால பார்த்தோம். ஆமா இது யாரு”<br />
<br />
“இது.. இது.. வந்து... என்னோட.. என்னோட...”<br />
<br />
”ம். இதுக்குத்தான் என்கிட்ட காசு வாங்கினாயா? சரி நடத்து நடத்து” சொல்லிவிட்டு சென்று விட்டான் பிரசாத். <br />
<br />
ராம் தர்மசங்கடத்துடன் ஏஞ்சலினாவை பார்த்தான். அவள் அமைதியாக கேட்டாள்.<br />
<br />
“எதுக்கு காசு வாங்கினீங்க?”<br />
<br />
ராம் என்ன செய்வதென்று விழித்து விட்டு பாக்கெட்டிலிருந்து அந்த பரிசை எடுத்தான். ஒரு ஆணும் பெண்ணும் உள்ள சிறிய சிலை, ஒரு சிறிய செயின், ஒரு ரோஜா மூன்றையும் அவளிடம் கொடுத்தான்.<br />
<br />
“வாவ்! சூப்பர்!” அவள் மிகவும் மகிழ்ச்சியாகி அதை வாங்கி கொண்டாள். பின் அவனை காதலோடு பார்த்தாள்.<br />
<br />
“ராம் என் மனசு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நான் ரொம்ப நாளா உங்க கிட்ட சொல்ல நினைச்சது என்னன்னா..... ராம் ஐ.... ”<br />
<br />
<br />
”தம்பி”<br />
<br />
யார்ரா அது மறுபடியும்! ராம் திரும்பினான். அங்கே ஒரு கண்ணாடி அணிந்த நபரும், உடன் இருவர் நின்று கொண்டிருந்தனர்.</div></div><div style="color: black;">“என்ன சார்?” “இல்ல தம்பி கொஞ்ச நேரம் முன்னால என் பர்ஸ் இங்க விழுந்துடுச்சு அதான் தேடு(ட)னும். கொஞ்ச அப்படிக்கா போகா முடியுமா”</div><div class="im" style="color: black;"><br />
<br />
”என்ன சார் என்னென்னமோ சொல்றீங்க” ராம் எரிந்து விழுந்தான்.<br />
<br />
”இல்லப்பா அது இங்கே தான் விழுந்துருக்கணும் கொஞ்சம் பணம் வச்சிருந்தேன்.”<br />
<br />
அவர்கள் இங்கிருந்து செல்ல மாட்டார்கள் என ராமுக்கு புரிந்தது. ராமும் ஏஞ்சலினாவும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.<br />
<br />
”ராம் நான் கிளம்பறேன். லேட்டாயிடுச்சு மாமா திட்டுவாரு.”<br />
<br />
“என்ன ஏஞ்சலினா இப்படி சொல்றே, நாம பேசவே இல்லையே”<br />
<br />
“ஆமா ராம் ஆனா நான் லேட்டா போக முடியாது. ம் ஒன்னு பண்ணுங்க நாளைக்கு மத்தியானம் நீங்க எங்க வீட்டை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி பீச் ஓரமா ஒரு வீடு இருக்கில்ல அங்க வந்திருங்க. யாரும் இருக்க மாட்டாங்க. அது எங்க மாமா அவர் பிரண்டுங்க கூட பேச கட்டியிருக்கார். <span style="background-color: white;">வழக்கமா மத்தியான நேரத்தில எங்க </span>மாமா வர மாட்டார்.”<br />
<br />
ராம் அரை மனதுடன் சரி என சொன்னான். “சரி போய்ட்டு வா ஏஞ்சலினா” ஏஞ்சலினாவும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றாள்.<br />
<br />
சே இன்னைக்கு எதிர்பார்த்து வந்தது நடக்கவே இல்லையே அங்க மேரி மேடம் அப்புறம் இங்க பிரசாத் அந்த மூணு பேரு வேற! அவர்களை பார்த்தான். பர்சை தேடுற மாதிரியா தேடுறாங்க! ஏதோ ஒண்ணு! மொத்ததில என் பிளான் நாசமா போச்சு!!! புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றான்.<br />
<br />
<div style="text-align: center;">**************************************</div><div style="text-align: center;"><br />
</div>”செல்வா பாபு என்ன நல்லா தேடினீங்களா?”<br />
<br />
“தேடினோம் சார் அந்த இடத்தில் ஒண்ணும் இல்ல”<br />
<br />
”இதோ பாருங்க மத்த இடத்தில 3 பேரும் தரவோ தேடிட்டோம். இங்க அந்த பொண்ணு இருந்ததால விட்டுட்டோம் இங்கதான் நிச்சயம் இருக்கும். ஆங்! அதோ பாருங்க. ஒரு சின்ன ஓட்டை!”<br />
<br />
அதனுள் கையை விட்டான் செல்வா. உள்ளே எதுவோ தட்டுப்பட்டது. போராடி அதை வெளியே எடுத்தான். அது ஒரு சிறிய பெட்டி. அதில் அந்த ராஜமுத்திரை!!!</div><div style="color: black;">அதைக் கண்டவுடன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அந்த பெட்டியை மறைவாக கொண்டு சென்று அதை கஷ்டப்பட்டு திறந்தனர். உள்ளே இரண்டு படங்கள் இருந்தன. ஒன்று நெருப்பின் படம், மற்றொன்று ஒரு திடகாத்திரமான மனிதன். மேலும் அந்த படங்களின் பின்னால் இரு ஆங்கில எழுத்துக்கள். C மற்றும் N. எல்லாம் படமும் எழுத்தும் ஏதோ மூலிகை மையால் கையால் வரையப்பட்டவையாக இருந்தாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் தெளிவாக புரியும்படி இருந்தன. </div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">"சார் இதென்ன ஆங்கில எழுத்து?"</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“ஆமாம் கேங்குலா நாட்டின் மொழி ஆங்கிலம்தான் இது எதையோ சொல்லுது. இப்ப புரியுது! அந்த குறிப்பில் இருந்த எண்கள் படங்களின் எண்ணிக்கையை குறிக்குது அப்படின்ன 2,2,2,1 மொத்தம் ஏழு படங்கள் நான்கு இடத்தில் கிடைக்கும்!” </div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">”இந்த ஆங்கில எழுத்துக்கள் எதை குறிக்குதுங்கிறதை எல்லா படமும் கிடைச்ச பிறகுதான் தெரியும். படம் என்ன சொல்லுதுன்னும் தெரியலை. எல்லாத்தையும் சேகரிச்சாதான் புதையல் பற்றிய முழு விவரமும் தெரியும்.”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">“எல்லா படத்தையும் சேகரிச்சாதான் விவரமே தெரியுமா?? எப்ப புதையல் கிடைக்குமோ” </div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">”சரி இங்க நின்னு பேச வேணாம் வாங்க ரூமுக்கு போவோம்”</div><div style="color: black;"><br />
</div><div style="color: black;">அதுவரை அவர்களை தூரத்திலிருந்து மறைவாக கவனித்துக் கொண்டிருந்த ரமேஷ் பிரசாத்தை தேடி கிளம்பினான்.</div><div style="color: black;"><br />
</div><div class="im" style="color: black;"><div style="text-align: center;">**************************************</div>அந்த மறைவிடம் கொஞ்சம் இருளாக இருந்தது. அங்கே அந்த மூவர் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.<br />
<br />
“நாகா நாம எத்தனை நாளைக்கு இப்படியே தப்பிச்சு போய்கிட்டு இருக்கிறது?”<br />
<br />
“இதோ பார் சௌந்தர்! இந்த தொழிலுக்கு வந்துட்டா அதையெல்லாம் பார்க்க முடியாது. எப்பவும் நமக்கு ரிஸ்க்தான்”<br />
<br />
“பார்த்தியா நீயே சொல்ற ரிஸ்க்குனு அப்புறம் எதுக்கு நம்மளுக்கு இந்த தொழில்?”<br />
<br />
“ஹா ஹா ஹா! இந்த தொழிலா!! ஏதோ புத்தர் மாதிரி பேசற நீயும் இதைத்தான் இத்தனை நாளா செஞ்சுகிட்டு இருக்கே”<br />
<br />
“ஆமா யோகேஷ் இல்லைன்னு சொல்லலை! ஆனா இப்ப நம்மை மூணு பேரையும் புடிச்சு குடுத்தா பரிசுங்கிற அளவுக்கு போயிடுச்சு. இதுக்கு மேல....”<br />
<br />
“அதுக்காக போலீஸ்ல சரணடைய சொல்றீயா? உன் பேச்சே சரியில்லையே! இதோ பார் நீயே நினைச்சாலும் நமக்குன்னு இருக்கிற சில வேலைகளை முடிக்கிற வரைக்கும் இந்த கேங்கை விட்டு விலக முடியாது”<br />
<br />
“நாகா நீதான் எங்களுக்கு தலைவன். இப்ப நம்ம மூணு பேர்தான் இதில் இருக்கோம். இது என்ன கேங்க்! அந்த வேலைகள் இருக்குதான். இல்லைன்னு சொல்லலை! ஆனா அந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் நம்மை மேலே வெறியா இருக்காரே”<br />
<br />
“அதுக்கு காரணம் நாகாதான். அவரை அந்த அளவுக்கு காயப்படுத்தினா அதுவும் ஒரு போலீஸ்காரனுக்கு கோபம் வராதா?”<br />
<br />
“யோகேஷ் அவன் கோபம் என்னை என்ன செய்யும்?? நீங்க இரண்டு பேரும் உறுதியா இருந்தா நம்ம வேலைகள் ஸ்மூத்தா நடக்கும்! அந்த இன்ஸ்பெக்டரை சமாளிக்கறது ஈஸி!”<br />
<span style="font-size: small;"><br />
<b>”அது அவ்வளவு சுலபமில்லை” கையில் துப்பாக்கியுடன் இன்ஸ்பெக்டர் பாண்டியனும் சப் இன்ஸ்பெக்டர் சதீஷும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.</b></span></div><div class="im" style="color: black;"></div><div class="im" style="color: black;"><b><span style="font-size: x-small;"><span style="font-size: small;">(தொடரும் ...)</span></span></b></div><br />
<br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"><a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart2.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b2.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-56275888289885345702011-02-10T21:02:00.000-08:002011-02-18T14:09:12.204-08:00BLACK RIVER - அத்தியாயம் ஒன்று<div style="border: 2px ridge red;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"><span style="font-size: medium;"><b> </b></span><b><span style="font-size: medium;">நண்பர்களே சினிமாட்டிக்காக ஒரு சிறு திரில்லர் கதை முயற்சி. ஏழு பாகம் கொண்ட கதை. சில நம்ப முடியாத விஷயங்கள் வரலாம். லாஜிக் பார்க்காம படிங்க! நம் வலைப்பூ நண்பர்களின் பெயர்களையே கதாபாத்திரங்களுக்கு வைத்துள்ளேன். படித்து கருத்து கூறுங்கள்! நன்றி!</span></b></div></div></div></div><br />
<span style="font-size: medium;"><b>முன் கதை:</b></span><br />
<br />
<i><b style="color: #000066;"><div>கிபி 1758. இந்தியப் பெருங்கடல். </div>அந்த நடுக்கடலில் ஒரு கப்பல் அபாயகரமான சப்தங்களுடன் வீற்றிருந்தது. ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த கப்பலில் மரண ஓலமும் வாள் வீச்சின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. கேங்குலா நாட்டை சேர்ந்த அக்கப்பலை கடல் கொள்ளையர்கள் முற்றுகையிட்டிருந்தனர். கொள்ளையர்களிடையே ஒரு சிறு சலசலப்பு. அவர்கள் தேடிவந்த முக்கியமான பெட்டியை காணவில்லை! ஒரு கொள்ளையன் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு படகை கண்டான்.....<div><div><br />
<div style="text-align: center;">----------------------------</div><br />
படகு அத்தீவை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய அவ்வீரனின் நெஞ்சில் கேங்குலா நாட்டு ராஜமுத்திரை இருந்தது. அவன் சிறிது யோசனை செய்தான். பிறகு வேகமாக பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடினான்.<br />
<div style="text-align: center;"><i><b><i><b style="color: #000066;">----------------------------</b></i></b></i></div><div style="text-align: center;"></div>இன்னொரு படகும் அத்தீவை அடைந்தது அதிலிருந்து சில கொள்ளையர்கள் இறங்கினர்.<br />
<br />
”அந்த வீரன் இங்கே தானே வந்தான்?” “ஆம் தலைவா” “தேடுங்கள் அவனை விடாதீர்கள். அவன் கையில் இருக்கும் பெட்டி என்னிடம் வர வேண்டும்!”<br />
<br />
கொள்ளையர்கள் அவ்வீரனை தேடி தீவில் ஓடினர்.<br />
<div style="text-align: center;"><i><b><i><b style="color: #000066;">----------------------------</b></i></b></i></div><br />
தீவின் மற்றொரு பக்கம் கேங்குலா நாட்டை சேர்ந்த வேறு சில வீரர்களும் வந்திறங்கினர்.<br />
<br />
”இளவரசர் இங்கேதானே வந்தார்” ”ஆமாம்” “ஜாக்கிரதை கொள்ளையர் கூட்டமும் இங்கு வந்துள்ளது அவர்கள் கையில் இளவரசர் சிக்கும் முன் நாம் அவரை காப்பாற்றியாக வேண்டும்.”<br />
<br />
<div style="text-align: center;"><i><b><i><b style="color: #000066;">----------------------------</b></i></b></i></div><br />
”இளவரசே, தாங்கள் இங்கிருக்கீறீர்களா”<br />
<br />
“வீரனே நம் நாட்டின் பொக்கிஷத்தை நம்பிக்கை மிகுந்த நபரிடம் ஒப்படைத்துள்ளேன் . அவ்விடம் பற்றிய குறிப்புகள் என்னிடம் உள்ளன. இதை அரசரிடம் சேர்த்து விடு. நிறங்கள் என்பதை நினைவில் வைக்கச் சொல். என்னைப் பற்றிக் கவலைப்படாதே! செல் சீக்கிரம் செல்” <br />
<br />
கொள்ளை கூட்டம் இளவரசை கண்டு ஓடி வந்தது. வீரன் அவனிடமிருந்து ஓடினான். திரும்பி பார்த்தான் அங்கே இளவரசர் அக்கொள்ளையர்களால் வெட்டப்படுவது தெரிந்தது. கண்களில் கண்ணீருடன் அந்த மலைத் தொடரை நோக்கி தன் சகாக்களை நோக்கி அவன் ஓடினான்.<br />
<br />
அப்போது ஒரு கொள்ளையன் விட்ட அம்பு அந்த வீரனை துளைத்தது. அவன் கையில் இருந்த அந்த குறிப்புகள் மலையின் மறுபக்கம் விழுந்து இருளில் மறைந்தது.<br />
<br />
அவனை நோக்கி ஓடி வந்த சகாக்களிடம் “நிறங்கள்” என்ற ஒற்றை வார்த்தையை கூறி விட்டு இறந்து போனான் அவன். </div></div></b><br style="color: #000099;" /> </i><br />
<div><div>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDRTTvGGuP6gKDLjFhFvqUWR1HmFfKlegHZyZMHDsOLZEDCwNsNnP9FeJOoxAGCbv3NljoqrWQjmIir0uW94-kACjAKG86sXCx_FyP9-YitpoGgQLTGGRKW76i6X4fNYkqmZH5rW0UaF3C/s1600/BLACK+RIVER2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="398" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDRTTvGGuP6gKDLjFhFvqUWR1HmFfKlegHZyZMHDsOLZEDCwNsNnP9FeJOoxAGCbv3NljoqrWQjmIir0uW94-kACjAKG86sXCx_FyP9-YitpoGgQLTGGRKW76i6X4fNYkqmZH5rW0UaF3C/s640/BLACK+RIVER2.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<br />
<div style="text-align: center;"><span style="font-size: medium;"><b><u>அத்தியாயம் ஒன்று<a name='more'></a></u></b></span></div><br />
ராம் அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தன் வேலைகளை செய்து கொண்டே அவளுக்காக காத்திருந்தான். ராம் என்கிற ராம்சாமி சிறு வயதில் இருந்து எந்த இன்பத்தையும் அனுபவிக்காதவன். அவனின் ஒரே சொந்தம் பாட்டி மட்டும்தான். சிறு வயதில் நண்பர்கள் உறவு கூட அவனுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்தியாவில் ஏதோ வாழ்க்கையை செய்து கொண்டு நாளை ஓட்டி கொண்டிருந்த ராமை ஒரு நாள் அவனின் பால்ய கால நண்பன் அருண் பிரசாத் பார்க்க வந்தான். மொரீசியசில் அவன் பெரிய ரிப்போர்ட்டர். அங்கே வேலை இருப்பதாகவும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான். ஏற்கனவே சில பேரை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளான். ராம் வேலைக்காக அங்கே செல்லவில்லை. புது நபர்கள் அங்கேவாவது அவன் விரும்பிய அன்பு கிடைக்காதா என்றுதான் சென்றான். அவன் எண்ணம் பொய்க்கவில்லை.<br />
<br />
இந்த வேலை அவனுக்கு பிடித்து போனதற்கு மேரி மேடமும் ஒரு காரணம். அவர்தான் இந்த கடையின் உரிமையாளர். அதிகமாக கடைக்கு வர மாட்டார்கள். அவருக்கு என்று குடும்பம் எதுவுமில்லை. அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். அவரின் வீட்டில் சில வேலைகள் செய்ய எப்போதாவது ராம் செல்வான். இங்கே ஒரு சில நண்பர்களும் கிடைத்தார்கள். ஆனால் அவன் மனதில் காதல் வந்தபோது எல்லாம் மேலும் இனிமையானது......<br />
<br />
ஏஞ்சலினா. பெயரை போலவே அழகானவள். அவளுக்கும் இவனுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அன்பிற்காக ஏங்குவதுதான். அவள் மாமா பெரிய செக்யூரிடி ஆபிசர். பிஎஸ்வி எனும் தன் பெயரில் நிறுவனம் வைத்துள்ளார். அவளுக்கும் தாய் தந்தை கிடையாது. இந்திய வம்சாவளி சேர்ந்தவள்தான் அவள். அன்பாக ராமிடம் பழகினாள், ராமும்....<br />
<br />
ராம் நாளடைவில் ஏஞ்சலினாவை காதலிக்க ஆரம்பித்து விட்டான். அவளும் காதலிப்பது போலத்தான் தெரிகிறது. ஆனால் இதுவரை இருவருக்குமே காதலை சொல்ல தைரியம் வரவில்லை. இதோ அவள் வந்து விட்டாள்.<br />
<br />
“ராம் எப்படி இருக்கீங்க?” “நேற்றுதானே பார்த்தோம்!” அவள் சிரித்தாள். <br />
<br />
“ராம் நாளைக்கு மாலை பழைய லைட் ஹவுஸ்க்கு வரீங்களா?” “என்ன விஷயம்”<br />
<br />
“ரொம்ப நாளா நான் சொல்வேன்னு நீங்களும் நீங்க சொல்வேன்னு நானும் காத்திருக்கிற ஒரு விஷயத்துக்காக” ”கண்டிப்பா வரேன்”<br />
<br />
அவள் ஒரு வெட்கச் சிரிப்புடன் வேகமாக திரும்பிச் சென்றாள். ராம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.<br />
<br />
<div style="text-align: center;">----------------------</div><br />
பிரசாத் காத்திருந்தான். யாருக்காக என்றே அவனுக்கு தெரியவில்லை. அவன் செய்யும் தொழில் டூரிஸ்ட் கைட். தினமும் யாராவது சுற்றுலா பயணியை பார்ப்பான் இடங்களை சுற்றி காட்டுவான். சிலர் விரும்பினால் அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை கூடவே இருந்து வசதிகளை செய்து கொடுப்பான்.<br />
<br />
அவன் தன் வேலையை திட்டினான். ஏழையாய் பிறந்த தன்னை திட்டினான். ஏழையாய் பிறந்த தன் தந்தையை, இப்போது ஒரே சொந்தாமாக இருக்கும் தாத்தாவை திட்டினான். பிரசாத் சிறு வயதிலிருந்தே வறுமையின் கொடுமையை அனுபவித்துள்ளான். அவனுக்கு நன்றாக பணம் புகழுடன் வாழ ஆசை. இயலாமையால் எதைக் கண்டாலும் கோப்படுவான்.<br />
<br />
இதோ இப்போதும் அவனுக்கு எதிரே தூரத்தில் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவர் எதிர்க்கட்சி தலைவர் போல ஆளுங்கட்சியின் குறைகளை சொல்லிக் கொண்டிருந்தார். நான் யாரை யாரிடம் குறை சொல்வது. அவரின் கைத்தடிகள் ”சாந்தகுமார் வாழ்க” “எஸ்.கே வாழ்க” என கத்தி கொண்டிருந்தனர். தன்னையும் யாராவது “பிரசாத் வாழ்க” என கத்த மாட்டார்களா என நினைத்தான்.<br />
<br />
காலையில் கூட பேப்பரில் ஒரு அறிவிப்பு. மூன்று குற்றவாளிகளை பிடித்து தந்தால் பரிசாம். அவர்களை பிடித்து தந்தால் கொஞ்ச நாள் கஷ்டமில்லாமல் இருக்கலாம். அவர்களை நினைவில் வைத்துள்ளான். பேர் நாகா, சௌந்தர், யோகேஷாம். பார்க்கலாம். எங்கேயாவது பார்த்தால் எப்பாடுபட்டாவது பிடித்து விட வேண்டியதுதான்.<br />
<br />
பல வித யோசனைகளுடன் இருந்த பிரசாத்தை நோக்கி அந்த சிவப்பு சட்டை அணிந்த நபர் புன்னகையுடன் வந்தார்.<br />
<br />
“எக்ஸ்க்யூஸ் மி சார்! எனி கைட்ஸ் ஆர் அவைலபிள் ஹியர்?” “வெல்கம் சார்! ஐயம் ஆல்சோ எ கைட்!”<br />
<br />
“கிரேஷியஸ்! கேன் யூ கைட் மீ டு சீ சம் பிளேசஸ்?” “யெஸ் சார் இட்ஸ் மை ட்யூட்டி!”<br />
<br />
“தேங்க்யூ! மை நேம் இஸ் ருமேஷ்” “ரமேஷ்?” “நோ ருமேஷ். பட் யூ கேன் கால் மீ ரமேஷ்”<br />
<br />
“ஓகே ஐ திங்க் இட்ஸ் எ நேம் இன் இந்தியா” ரமேஷ் புன்னகைத்தார். “ஐ நோ இந்தியன் லாங்குவேஜஸ் ஆல்சோ” <br />
<br />
“ஓ! டூ யூ நோ தமிழ்?” “ம் நல்லா தெரியும்” <br />
<br />
“ரொம்ப சந்தோசம் சார் முதல்ல எங்கே போகனும்” “ஒரு நல்ல ஹோட்டலுக்கு”<br />
<div style="text-align: center;">----------------------</div><br />
இந்தியா. <br />
<br />
புரொபசர் மங்குனி யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டது. கதவை திறந்தார். இருவர் நின்றிருந்தனர்.<br />
<br />
“வா பாபு, வா செல்வா உள்ளே வாங்க”<br />
<br />
“எப்படி இருக்கீங்க சார்” “நல்லா இருக்கேன்”<br />
<br />
அவர்கள் இருவரும் உட்கார்ந்த பின் கேட்டனர். <br />
<br />
“எங்களை எதுக்கு சார் ஒரு மாசம் லீவ் போட்டுட்டு வரச் சொன்னீங்க? ஏதோ வெளிநாட்டு பயணம்னு வேற சொன்னீங்க.”</div></div>“நம்ம மூணு பேருக்கும் விசா டிக்கெட்டெல்லாம் ரெடி பண்ணிட்டேன். நாம மூணு பேரும் உடனே மொரிஷியஸ் போறோம்”<br />
<div><br />
“மொரீஷியசா? எதுக்கு?”<br />
<br />
“புதையல் வேட்டைக்கு!”<br />
<br />
<b>(தொடரும்......................</b><wbr></wbr><b>....)</b><br />
<br />
</div><br />
<div style="border: 2px ridge red; text-align: center;"><div style="background: none repeat scroll 0% 0% lightgreen; color: black;"><div style="padding: 5px;"><div style="font-family: monospace; font-weight: bold;"><a href="https://sites.google.com/site/myextradownload/story/BLACKRIVERpart1.pdf?attredirects=0&d=1">PDF VERSION DOWNLOAD</a> <a href="https://sites.google.com/site/myextradownload/story/b1.rar?attredirects=0&d=1">FLIPPING BOOK VERSION DOWNLOAD</a></div></div></div></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-81068819842901759342011-01-10T14:20:00.000-08:002011-01-10T14:20:20.099-08:00திரும்பி பார்க்கிறேன்............!<div style="text-align: center;"><span style="font-size: large;"><u><b>அத்தியாயம் ஒன்று</b></u></span></div><div style="text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkVNwaXwaTtZX-Ii-MgHzlIWN2oBis_JsCJRfWSKanGSC9nSrATXYR1Aa5JSfF9sHa8jGJ8WrgaNDaBHmRQIQedUoY8HJ0WTtanZDFceP9Sf0APXBvVjWWZbNu8VbYGOcjrvkqzp3uUyk6/s1600/Horn-4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkVNwaXwaTtZX-Ii-MgHzlIWN2oBis_JsCJRfWSKanGSC9nSrATXYR1Aa5JSfF9sHa8jGJ8WrgaNDaBHmRQIQedUoY8HJ0WTtanZDFceP9Sf0APXBvVjWWZbNu8VbYGOcjrvkqzp3uUyk6/s320/Horn-4.jpg" width="204" /></a></div><div style="text-align: center;"><br />
</div><div style="background-color: cyan;"><b>கிபி. 1979. ஆகஸ்ட் 27.</b></div><br />
<br />
அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான். மனம் ஏனோ அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.<br />
<br />
<br />
அரச குடும்பத்தில்தான் பிறந்தேன் நான். பல போர்களில் பங்கு கொண்டு நாட்டிற்காக போராடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன். பல பெருமை பெற்றேன். இதோ இப்போது எனக்கு 79 வயது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். பேரன் பேத்திகள் என வாழ்க்கையும் விரிவடைந்து மகிழ்ச்சியாக உள்ளது.<br />
<br />
<br />
வெளியே நான் மகிழ்ச்சியாக இருந்தபோதும் உள்ளுக்குள் இத்தனை காலம் வாழ்ந்ததற்கான திருப்தி இல்லை. ஏன்????<br />
<br />
<br />
என் எதிரே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவர்கள் முகத்தோற்றத்திலிருந்து அவர்கள் இந்தியர்கள் என புரிந்துகொண்டேன். இந்தியா! எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று! இந்தியாவுடனான என் நினைவலைகளில் மூழ்கிப் போனேன்.<br />
<br />
<br />
<div style="background-color: cyan;"><b>கிபி. 1947. இந்தியா.</b></div><br />
<br />
கிளமண்ட் அட்லி என்னை இந்தியாவின் வைஸ்ராயாக நியமித்தார். 1948க்கு முன் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு நான் குடும்பத்துடன் குடியேறினேன். அந்த நாட்டின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கையாண்ட அஹிம்சா முறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.<br />
<br />
<br />
1947ல் போராட்டங்கள் அதிகமான காரணத்தால் மற்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி நான் சுதந்திரம் வழங்க முடிவெடுத்தேன். சில ஆட்சியாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்க வேண்டாம் என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரிவினை வேண்டும் என்றார்கள். சில இந்திய தலைவர்களும் ஒப்புக்கொள்ள 1947, ஆகஸ்டு 15 இரவு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அந்த பிரிவினையை என் உள்மனம் தவறென சொன்னபோதும், என் வெளிமனம் சந்தோசப்பட்டது அப்போது. அதற்கு பிறகு இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையோடு வெளிவந்தேன்.<br />
<br />
<div style="background-color: cyan;"><b>மீண்டும் கிபி. 1979. ஆகஸ்ட் 27.</b></div><br />
நினைவலைகளிலிருந்து வெளிவந்தேன். அந்த இந்திய சம்பவங்களுக்கு பின்னும் எத்தனையோ போர்கள், ஆட்சிகள், ஆக்கிரமிப்புகள்…. வாழ்க்கையில் அதனால் எத்தனையோ வெற்றிகளை நானும் என் நாடும் சம்பாதித்திருந்தது. அந்த போர்களினால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருந்தபோதும் எத்தனையோ பேரின் கண்ணீர் இருந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. இதனால் எத்தனை ஆபத்துக்களும் வந்து கொண்டுதான் உள்ளது. இதோ இந்த அயர்லாந்து பகுதிக்கு வருவதுக் கூட ஆபத்தான ஒன்றுதான் என எச்சரித்த போதும் மன அமைதிக்காக வருடந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.<br />
<br />
என் எதிரே இருந்த அந்த சிறுவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் கொஞ்சம் பெரிதாக இருந்த ஒரு இந்தியச் சிறுவன் அவர்களிடம் எதையோ சொன்னான். அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டார்கள். நான் என் அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் அவன் என்ன சொன்னான் என கேட்டேன். அவர் கூறினார்.<br />
<br />
“ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள்? வாழ்க்கையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இரண்டு வழி உள்ளது. சண்டை மற்றும் அமைதி. சண்டையினால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானது மேலும் பல இழப்புகளும் துன்பங்களும் ஏற்படும். ஆனால் அமைதியால் கிடைக்கும் தீர்வு நிரந்தரமானது. இழப்புகள் குறைவானது. ஒற்றுமை நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு விரலின் பலத்தை விட ஐந்து விரல்கள் சேரும்போது அதிக வலிமை கிடைக்கும்!”<br />
<br />
இந்த சிறிய வயதில் அவனின் முதிர்ச்சியை கண்டு வியந்தேன். என் மனம் அமைதியில்லாமல் இருப்பதற்கு காரணம் நான் செய்த சண்டைகள். அதன் நினைவுகள் என்னை அலைகழித்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்வில் மீண்டும் பிறந்தால் நான் ஆட்சி செய்த ஆக்கிரமித்த நாடுகளுக்குள் ஒன்றி பிறந்து அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும். என் மனதில் உறுதியாக எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்……<br />
<br />
<span style="font-size: large;"><b>”டமால்!”</b></span><br />
<br />
<div style="background-color: cyan;"><b>கிபி. 1979. ஆகஸ்ட் 28.</b></div><br />
<i><b>முக்கியச் செய்தி: ”மௌண்ட் பேட்டன் பிரபு அயர்லாந்து நாட்டின் முல்லாஹ்மோர் பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த போது அயர்லாந்து ராணுவப்படை வைத்த வெடிகுண்டு வெடித்து காலமானார் அவருடன் படகில் சென்ற அரச குடும்பத்தினர் உட்பட………”</b></i><br />
<br />
<br />
<div style="text-align: center;"><span style="font-size: large;"><u><b>அத்தியாயம் இரண்டு</b></u></span></div><div style="text-align: center;"><span style="font-size: large;"><u><b><br />
</b></u></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHnAEY-66TaCHMBcy1l6nVCURr_yzVezD2VE3HHdkR5eHbZlvIMM0ddodudO-Oa2c1edAJEBlL26sLmalgYMDc4mP72grJ3aLROWkOyvmrBV3WVdloNpoFgtoZa1Im8r830KDo0IO7dCwV/s1600/2233.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHnAEY-66TaCHMBcy1l6nVCURr_yzVezD2VE3HHdkR5eHbZlvIMM0ddodudO-Oa2c1edAJEBlL26sLmalgYMDc4mP72grJ3aLROWkOyvmrBV3WVdloNpoFgtoZa1Im8r830KDo0IO7dCwV/s400/2233.jpg" width="400" /></a></div><br />
<div style="background-color: cyan;"><b>கிபி. 2011. ஜனவரி 7.</b></div><br />
மாலை நேரம். அந்த அறைக்குள் நுழைந்தேன். அந்த அறையின் அமானுஷ்யம் என்னை பயமுறுத்தியது. மனதிற்குள் கலக்கம் வந்தபோது வேலை நிறைவேண்டியிருந்ததால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சென்றேன். எதிரே அவர் அமர்ந்திருந்தார்.<br />
<br />
“வணக்கம் சார்”<br />
<br />
அவர் அமைதியாக புன்னகைத்தார். உட்காரச் சொன்னார்.<br />
<br />
“உங்களுக்குத்தான் உங்க பூர்வ ஜென்மத்தை பற்றி தெரிஞ்சிக்கனுமா?”<br />
<br />
“ஆமா சார். எப்படி சார் அதை பண்ணுவீங்க? எதாவது ஆவியை கூப்பிடுவீங்களா?”<br />
<br />
அவர் மீண்டும் புன்னகைத்தார்.<br />
<br />
“இல்லை. உங்கள் வெளிமனதை நன்றாக உறங்க செய்து ஆழ்மனதை தட்டி எழுப்புவோம். ஆழ்மனதில் படிந்துள்ள பூர்வஜென்ம ஞாபகங்கள், மறக்காத நினைவுகள் உங்களுக்கு நினைவிற்கு வரும்.”<br />
<br />
அவர் பதில் சொல்லிவிட்டு ஒரு படுக்கை போன்ற அமைப்பில் என்னை படுக்கச் சொன்னார். பின்னர் ஏதோ பயிற்கள் செய்தார். எனக்கு கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. சிறிது நேரம் எங்கோ இருப்பது போன்ற உணர்வு. பிறகு திடீரென பல நினைவுகள் தோன்றின….<br />
<br />
<i>“அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்…………”</i><br />
<br />
<div style="text-align: center;">*************************</div><br />
<br />
கண் விழித்தேன். வேறொரு உலகத்திலிருந்து வந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது. போன ஜென்மத்தில் நான் மவுண்ட்பேட்டன் பிரபுவா?? என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு தெளிவிற்கு வந்தேன். போன ஜென்மத்தின் இறுதியில் எடுத்த முடிவின்படி அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராட வேண்டுமென்று.<br />
<br />
அங்கிருந்து கிளம்பும்போது அந்த பயிற்சியாளர் கேட்டார்.<br />
<br />
“எதற்காக நீங்கள் பூர்வஜென்மத்தை தெரிந்து விரும்பினீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா?”<br />
<br />
“அது ஒன்றுமில்லை சார். என் வலையுலக நண்பர் <a href="http://arunprasathgs.blogspot.com/">அருண்பிரசாத்</a> என்பவர் கடந்தகால நினைவுகளை பற்றி ஒரு தொடர்பதிவு எழுதச் சொன்னார் அதற்காகத்தான்”<br />
<br />
<div style="text-align: center;"><span style="font-size: large;"><b>- முற்றும் -</b></span></div><br />
<div style="text-align: center;">---------------------</div><br />
<u><b>பின்குறிப்பு 1:</b></u><br />
<br />
<br />
சென்ற 2010 ஆரம்ப மாதங்கள் என் வேலைகள் சுறுசுறுப்பான காலகட்டம் அது. இருந்தபோதும் என் மனம் அமைதியின்றிதான் இருந்தது. மனதில் விரக்தியும் கவலைகளும் குடிகொண்டிருந்தன. மனதிற்கு மாற்றம் தேவைப்பட்டது. அப்போதுதான் வலைப்பூக்களில் மனதை திருப்பினேன். சிறிது நாட்களிலேயே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது. இப்படி வலையுலகம் மூலம் நான் பெற்ற நண்பர்கள் பலர்.<br />
<br />
ஹாலிவுட் பாலா, கீதப்பிரியன், ஜோதிஜி, கருந்தேள், நாஞ்சில் பிரதாப், கொழந்த, சு.மோகன், டெனிம், RNS, Phantom mohan, காகி, கனவுகளின் காதலன், இலுமினாட்டி, இராமசாமி கண்ணன், மரா என ஆரம்பகாலத்தில் வலைப்பூக்களில் கிடைத்த நண்பர்கள் இவர்கள்.<br />
<br />
பின்னர் ஒரு கும்பலாக கும்மியடித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர எனக்கு மிகவும் ஆசையாகவும் தயக்கமாகவும் இருந்தது. எப்படியோ சேர்ந்து இன்று இவர்களுடன் நித்தம் பொழுது சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள்: அருண், தேவா, பாபு, டெரர், ரமேஷ், ராம்சாமி, வெங்கட், மங்குனி, பட்டாபட்டி, சௌந்தர், செல்வா, ஜெயந்த், பிரசாத், மாதவன், பிஎஸ்வி, தில்லுமுல்லு, நாகராஜசோழன், சமீர், வினோ<br />
<br />
என பெரிய பட்டாளமே உள்ளது. இன்னும் பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, ஆர்கேசதிஷ், சிபி, ஜில்தண்ணி, குத்தாலத்தான் என நிறைய பேர். சுபத்ரா, கௌசல்யா போன்ற சகோதரிகளையும் இந்த வலைப்பூ உலகத்தில் பெற்றுள்ளேன்.<br />
<br />
<br />
இது தவிர இன்னும் ஏராளமான பேர் என் நண்பர்கள் என சொல்ல முடியும். பலரின் பேரை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் அவர்கள் என்னை நண்பர்களாக நினைக்கிறார்களா என்ற தயக்கமே. ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________<br />
<br />
<br />
எல்லோருடனும் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. அது என் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புகின்றேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZGH5SRiMFQqw6ljNAY5FSENVs9V1dR5vF64LhkAmL1gPpP46aXBqx4mrDra_d3TKFXMGodnj92rpWqvUgYWfsoHw9F9bD1JHbVcv-f6wrppTtAOdJ8_9x2DCkp7Wuo6Mw4N6Mz0KfQD5P/s1600/friendship.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZGH5SRiMFQqw6ljNAY5FSENVs9V1dR5vF64LhkAmL1gPpP46aXBqx4mrDra_d3TKFXMGodnj92rpWqvUgYWfsoHw9F9bD1JHbVcv-f6wrppTtAOdJ8_9x2DCkp7Wuo6Mw4N6Mz0KfQD5P/s1600/friendship.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<u><b>பின்குறிப்பு 2:</b></u><br />
<br />
<br />
<br />
<i>இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்................................... </i>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com91tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-2370019858395167882010-11-26T05:05:00.000-08:002010-11-26T05:05:05.760-08:00பெண் மன வானில்.....<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://images2.layoutsparks.com/1/27185/green-emo-mind-woman.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://images2.layoutsparks.com/1/27185/green-emo-mind-woman.gif" width="311" /></a></div><br />
பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் பற்றிய இத்தொடருக்கு அழைத்த நண்பர் <a href="http://apkraja.blogspot.com/">ராஜாவிற்கு</a> நன்றியும் வணக்கங்களும்!<br />
<br />
பெண் மனம் ஆழமானது ஒரு வானம்போல பரந்தது அதில் பல்வேறு உணர்வுகள் இருந்தாலும் பல சமயங்களில் அவற்றை ஆண்கள் போல வெளிப்படுத்த முடிவதில்லை. திரைப்படங்களில் பெண்கள் மட்டும் பாடல்கள், பெண் மனதை வெளிப்படுத்தும் பாடல்கள் பல வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலனவை காதல் சார்ந்தவையாக வந்துள்ளன. தாய்ப்பாசம் கூட ஆண் பாடுவது போலதான் பல பாடல்கள் உள்ளன. உண்மையில் மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் திரைப்படங்கள் அதிகமாக இல்லை என்பதே உண்மை.<br />
<a name='more'></a><br />
பொதுவாக எனக்கு மெலடி பாடல்களே அதிகமாக பிடிக்கும். அவற்றை கேட்கையில் மனம் லேசாகிவிடுகிறது. எனக்கு பிடித்த பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. எல்லாவற்றையும் எழுத முடியாததால் அவற்றில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன். எல்லாப் பாடல்களை கேட்கவும் லிங்க் தந்துள்ளேன். கிளிக் செய்து கேட்கலாம்.<br />
<br />
1. ஸ்ரேயா கோஷல் அவர்கள் பாடி ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR1290%27&lang=ta" target="_blank">எனக்கு பிடித்த பாடல்</a> என்ற பாடல். இப்பாடலில் ஏதோ ஒரு புரியாத உணர்வு ஏற்படும். ஸ்ரேயா அவர்களின் குரல் மிக இனிமையாக இருக்கும்.<br />
<br />
2. <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGARR0249%27&lang=ta" target="_blank">எங்கே என் புன்னகை</a> (தாளம்). இப்பாடலை ஷோபா என்பவர் பாடியுள்ளார் (எஸ்பிபி அவர்களின் குரலும் சிறிது வரும்). ஒரு பெண்ணின் காதல் ஏக்கம் இதில் தெரியும். பலருக்கு இந்த பாடலும், இசையும் மிகவும் பிடிக்கும்.<br />
<br />
3. <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR3949%27&lang=ta" target="_blank">என்னுள்ளே என்னுள்ளே</a> (வள்ளி) : ஸ்வர்ணலதா அவர்களின் பெரும்பாலான பாடல்கள் இனிமையாகவே இருக்கும். இது மிக உருக்கும் குரலான் ஆன பாடல். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்.<br />
<br />
4. சித்ரா அவர்கள் பாடிய பல பாடல்கள் சிறப்பாக இருக்கும். அதில் இந்த இரண்டு பாடல்கள் சிந்து பைரவி படத்தில் இடம்பெற்றவை முதல் படம், முதல் பாடல் போல் தெரியாமல் அற்புதமாக பாடியிருப்பார்.<br />
ஒரு மகள் பெற்றோர் அன்புக்காக ஏங்கும் பாடல் - <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR3335%27&lang=ta" target="_blank">நானொரு சிந்து</a><br />
இது சித்ரா அவர்களின் முதல் பாடல்- <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR3337%27&lang=ta" target="_blank">பாடறியேன் படிப்பறியேன்</a><br />
<br />
5. ஜானகி அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும் அவர்களின் பாடல்கள் பல எனக்கு பிடிக்கும் அதில் சில:<br />
சாதனை படத்தில் இடம்பெற்ற <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR3159%27&lang=ta" target="_blank">அன்பே அன்பே</a>, <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR3160%27&lang=ta" target="_blank">அத்தி மர பூவிது</a> ஆகிய இரண்டு பாடல்கள்.<br />
தாய் பாடும் பாடல் - <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2326%27&lang=ta" target="_blank">பிள்ளை நிலா</a> (நீங்கள் கேட்டவை)<br />
காதல், ஆசை கலந்த ஒரு பெண்ணின் பாடல் - <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR1135%27&lang=ta" target="_blank">பொன்வானம் பன்னீர் தூவுது</a> (நேற்று நீ நாளை நான்)<br />
<a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2072%27&lang=ta" target="_blank">சின்ன சின்ன</a> (மௌன ராகம்)<br />
<a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR1281%27&lang=ta" target="_blank">காற்றில் எந்தன்</a> (ஜானி)<br />
<br />
6 ஜென்சி அவர்கள் ஒரு கால கட்டத்தில் அவரின் பாடல்கள் மிக பிரபலம். அதில் ஜானி படத்தில் வரும் இப்பாடல் <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR1280%27&lang=ta" target="_blank">என் வானிலே</a> - வெறுமை நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை<br />
<br />
7. <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD2302%27&lang=ta" target="_blank">ஏண்டி முத்தம்மா</a> (ஆறு புஷ்பங்கள்)- இது ஒரு ஆண் பாடும் பாடல் ஆனால் பெண்ணின் வெட்கத்தை சொல்லும் பாடல். இசையமைத்து பாடியவர் சந்திரபோஸ் அவர்கள்.<br />
<br />
8. சில பழைய பாடல்கள்:<br />
* <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD1773%27&lang=ta" target="_blank">கண்ணும் கண்ணும்</a> (வஞ்சி கோட்டை வாலிபன்) - பெண்கள் போட்டியிடுவது போல பல பாடல்கள் திரைப்படங்களில் வந்தாலும் இப்பாடல் அவற்றிற்கு முன்னோடி. கேட்பதை விட பார்க்க நன்றாக இருக்கும். இப்பாடலை பாடியவர்கள் ஜிக்கி, பி.லீலா<br />
* <a href="http://www.raaga.com/play/?id=88" target="_blank">நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா</a> (உயர்ந்த மனிதன்) - இந்த பாடல் பி. சுசீலா அவர்களால் பாடப்பட்ட இப்பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்ததாம். மிக அருமையான பாடல். அவரின் மற்றுமொரு பாடல் <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2278%27&lang=ta" target="_blank">மயங்கினேன்</a> (நானே ராஜா நானே மந்திரி)<br />
* <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD1606%27&lang=ta" target="_blank">காதோடுதான் நான் பாடுவேன்</a> (வெள்ளி விழா) - எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் கணீர் குரல் அற்புதமானது. இதில் மென்மையாக பாடுவார். மிக இனிமையான பாடல்.<br />
* <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD2026%27&lang=ta" target="_blank">பூவாகி காயாகி</a> (அன்னை) - பானுமதி அவர்கள் பாடிய தாய்ப் பாசம் உணர்த்தும் பாடல்<br />
* <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD0533%27&lang=ta" target="_blank">பழம் நீயப்பா</a> (திருவிளையாடல்)- இந்த கணீர் குரலும் கம்பீரமும் எந்த பெண் பாடகிக்கும் இருந்ததில்லை. அதுதான் இவரின் சிறப்பு நடிப்பு பாடல் என சிறப்பாக செய்திருப்பார் கே.பி. சுந்தராம்பாள்.<br />
<br />
9. <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGDSP0030%27&lang=ta" target="_blank">கடவுள் தந்த</a> (மாயாவி): இந்த பாட்டு இந்த லிஸ்டில் சேருமா என தெரியவில்லை. ஆனால் கல்பனா என்ற பாடகி இந்த பாடலை சிறப்பாக பாடியிருப்பார். அவர் குரல் மிக நன்றாக இருந்தது, கூடவே எஸ்பிபி சரணும்.<br />
<br />
10. <a href="http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2132%27&lang=ta" target="_blank">ஆறும் அது ஆழமில்ல</a> (முதல் வசந்தம்) - இளையராஜா அவர்கள் பாடிய பாடல்.<br />
<br />
<br />
இது போல பல பாடல்கள் உள்ளன. எனக்கு இப்போதைக்கு நினைவில் இருக்கும் பாடல்களை தந்துள்ளேன். இந்த தொடர்பதிவை விருப்பமுள்ளவர்கள் யாரும் தொடரலாம்!எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com63tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-56136139114221596372010-11-23T21:49:00.000-08:002010-11-23T21:52:04.342-08:00காதல் என்பது..... பாகம்-2<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSQMlybnfMQZlJeZRcwHRWFzNQIF-g4QFvYcJ0uuHkDTLVp5KtO" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSQMlybnfMQZlJeZRcwHRWFzNQIF-g4QFvYcJ0uuHkDTLVp5KtO" /></a></div>குமாருக்கு பல விஷயங்கள் புதிராகவே இருந்தன. தியாகுவும் ரூபாவும் அந்த அளவு அன்னியோன்யமாக இருந்ததுபோல் தெரியவில்லை. ஒரு உணர்ச்சிவசப்படலில் காதலுக்காக தற்கொலை முடிவு எடுப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் ஒரு வருடம் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டு சரியாக அந்த நாளில் இறப்பது......<br />
<br />
தியாகுவிற்கு அந்த வயதில் வந்தது காதல் இல்லாமல் வெறும் இனக்கவர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் அவன் அன்பு உண்மையானது என்று புரிகிறது, அதற்காக அவன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்றாலும் கூட....<br />
<br />
இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் குமாரின் மனதில் அலைபாய காரணம் என்ன?<br />
<br />
<a name='more'></a><br />
<div style="text-align: center;">--------------------------------</div><br />
<u><b>குமாரின் டைரிக் குறிப்பு - 2</b></u><br />
<i><span class="Apple-style-span" style="color: purple;"><br />
</span></i><br />
<i><b>அதே 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளியில் காதலைப் பற்றி ஏற்பட்ட ஆர்வம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. எனக்கு காதலிக்க பிடிக்கவில்லை, தைரியமில்லை என்றாலும் மற்றவர்களின் கதைகளை கேட்கும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. காதல் வதந்திகள் எனக்கு பிடித்திருந்தன.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>நாங்கள் அப்போது குடியிருந்த வீடு ஒரு ஒண்டுக் குடித்தனம், சிறு சிறு வீடுகள். அதில் எனக்கு முதலில் நட்பான பெண் சொப்னா. அதே போல் நட்பான ஆண் ஷியாம். இவர்கள் இருவரும் வயதில் என்னை விட பெரியவர்கள் ஆனால் வா போ என பேசியே பழகுவோம். எனக்கு அப்போது அவர்கள் இருவர்தான் நண்பர்கள். உற்ற நண்பர்கள்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>ஒரு நாள் நானும் ஷியாமும் எங்கள் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காதல் காட்சி வந்தது. உடனே ஆர்வம் எழுந்தது. நான் அவனிடம் கேட்டேன். “ஷியாம், நீ யாரையாவது காதலிக்கிறாயா?”</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>”இல்லையே”</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>”அப்படி காதலிப்பதாக இருந்தால் யாரை காதலிப்பாய்?” இந்த கேள்வியை நான் கேட்டிருக்க கூடாது. அது நான் செய்த பெரிய தவறாக இன்று வரை நினைக்கிறேன். </b></i><i><b>ஷியாம் யோசித்தான் அவன் வயது பெண்கள் மூவரை தேர்ந்தெடுத்து அதில் ஒருவரை இறுதியாக முடிவு செய்தான். அவன் சொன்ன பதில் “சொப்னா” </b></i><i><b>ஷியாம் சொப்னாவை காதலிக்க ஆரம்பித்தான். அவன் காதலை சொல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கோ சுவராசியமாக இருந்தாலும் எங்கே போய் முடியுமோ என்ற பயமும் இருந்தது.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>ஒருநாள் நான், ஷியாம், சொப்னா மூவரும் தனியாக விளையாடி கொண்டிருந்தோம். வீட்டில் வேறு யாருமில்லை. விளையாடிக் கொண்டிருக்கும்போது ஷியாம் சொப்னாவிடம் ”நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றான்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>எனக்கு பக்கென்று இருந்தது. என்ன இவன் இப்போது சொல்ல போகிறான என பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என எழுதி அவளிடம் தந்தான். தந்துவிட்டு ஓடி விட்டான். </b></i><i><b>எனக்கு கோபமாக வந்தது என்ன இவன் இதற்கே இப்படி பயப்படுகிறான்? சொப்னாவோ அதற்கு மேல் பேப்பரை காண்பித்து இது என்ன என்று என்னிடமே கேட்கிறாள். என் ஆத்திரம் அதிகமானாலும் சொன்னேன், ஷியாம் சொப்னாவை காதலிக்கிறான் என...</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<div style="text-align: center;"><i><b>------------------------------------------</b></i></div><div style="text-align: center;"><i><b><br />
</b></i></div><i><b>சொப்னாவும் ஷியாமை காதலிக்க ஆரம்பித்தாள். அந்த இளம்பருவத்தில் அதுதான் காதாலா என தெரியாமல் பழகினர் அவர்கள். நானும் அதற்கு ஒரு உடந்தையாய் இருந்தது தவறு என இப்போது உணர்ந்தாலும் அப்போது எனக்கு அது பிடித்திருந்தது. </b></i><i><b>பெரும்பாலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேசுவது அவர்கள் வாடிக்கை. நாளடைவில் அவர்கள் காதல் தீண்டல்களுடன் தொடர்ந்தை பின்னாளில் அறிந்தேன். இப்படியாக அவர்களின் காதல் இனிமையாக நாளொருமேனியாக வளர்ந்து வந்தது. </b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும். சண்டைக்கான காரணம் ஒன்றுமில்லாமல் இருக்கும். சிறுவர்கள் போல இவன் என்னை திட்டி விட்டான் அவள் என் மீது கோபப்பட்டாள் என சண்டை இருக்கும். ஆனால் நான் இனி அவனிடம்/அவளிடம் பேசவே மாட்டேன் என்கிற மாதிரி சொல்வார்கள். நான் அவர்களை சமாதானப்படுத்துவேன்.</b></i><br />
<i><b>பிறகு வழக்கம்போல் பேச, பழக தொடங்கி விடுவார்கள்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>அவர்களின் காதல் அவர்களின் இரு வீட்டிற்கும் அரசல்புரலசலாக தெரியுமென நினைக்கிறேன். ஆனால் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. நாட்கள் சென்றன. அமைதியான இரவுகளில் நானும் ஷியாமும் மாடியில் படுத்துக் கொண்டிருக்கும்போது தங்கள் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென ஷியாம் சொல்வான். எனக்கு தூக்கம் வந்தபோதும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்களின் காதலை நானும் ஆழமாக ரசிக்க தொடக்கி விட்டேன். அவர்களை விட அதிகமாகவே அவர்கள் ஒன்று சேர வேண்டும் என நினைத்தேன்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>அவர்கள் காதல் 6-7 வருடங்கள் முடிந்திருந்த நிலையிலேயே நாங்கள் அந்த ஒண்டுகுடித்தன வீட்டில் இருந்து காலி செய்து விட்டோம். ஒன்றாக இருந்த நாங்கள் பிரிந்தோம். ஆளுக்கொரு பக்கம் என்றாலும் ஒரே ஏரியாவில் அருகருகில்தான் இருந்தோம். ஆனால் அவர்கள் சந்திப்பு இப்போதெல்லாம் வீட்டில் நிகழாததால் எனக்கு தெரிந்தும் தெரியாமலும் பல முறையில் வெளியில் சந்தித்திருக்கிறார்கள். வெளி இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர்களுக்குள் சில விளையாட்டுத்தனமான சண்டைகள் வரும். வழக்கம்போல் நானே சமாதானப்படுத்துவேன்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>கிட்டதட்ட 8 வருடங்கள் அவர்கள் காதல் தொடர்ந்தது. டீன் ஏஜ் வயதில் ஆரம்பித்த அவர்கள் காதல் இப்போது நன்கு வளர்ந்திருந்தது. அவர்கள் இப்போது திருமண வயதை எட்டி இருந்தனர். நிச்சயம் அவர்கள் காதலை அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், குறிப்பாக சொப்னா வீட்டில். அதனால் அவர்கள் இருவரும் தம் திருமணம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என திட்டமிட ஆரம்பித்திருந்தனர்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>அவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்ந்து இணைந்து வாழ்வார்கள் என நான் சந்தோசமாக இருந்தேன். என் உற்ற நண்பர்கள் இருவர் வாழ்க்கையில் இணைந்தால் எனக்கு மகிழ்ச்சிதானே. பல சமயம் என் கனவுகளில் அவர்களின் வாழ்க்கை வந்தது. அவர்கள் திருமணத்திற்கு தயாராக போகிறார்கள் என நான் நினைத்து கொண்டிந்தேன், காலம் என்னை பார்த்து சிரிப்பதை அறியாமல்.....</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<div style="text-align: center;"><i><b>----------------------------------------</b></i></div><div style="text-align: center;"><i><b><br />
</b></i></div><i><b>அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. மருத்துவமனையில் சேர்ந்தபின் மிக மோசமான நிலை என தெரிந்தது, ஏறக்குறைய உயிருக்கு ஆபத்தான நிலை. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற மாதக் கணக்காகி விட்டது. ஆனால் மருத்துவமனையில் இருந்தபோது ஷியாம், சொப்னா இருவரும் வந்து பார்க்கவில்லை. அதற்காக நான் கவலைப்பட வில்லை. அவர்கள் காதல் என்ன ஆனது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>உடல்நிலை சரியாகி வீட்டிற்கு சென்ற பின் ஒரு நாள் சொப்னாவை சந்தித்தேன். இனிமேல் ஷியாமிடம் பேச மாட்டேன், எல்லாம் முடிந்தவிட்டது என்றாள். எனக்கு அதிர்ச்சியாகி என்னவென்று கேட்டேன். ஷியாமை குறைகூறி ஏதோ சண்டை என்றாள். அவன் ஏதோ திட்டிவிட்டதாக மோசமாக பேசியதாக கூறினா.ஷியாமை தொடர்புகொண்டு கேட்டபோது அவன் சொப்னாவை குறை கூறினான். ஆனால் அவனும் பேச மறுத்தான்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>எனக்கு கோபம்தான் வந்தது. என்ன இவர்கள் 23 வயது ஆன பின்னும் முதிர்ச்சியே இல்லையா? இத்தனை வருடம் காதலித்த பின்னும் சண்டை போட்டு கொள்கிறார்களே. எப்படியோ அவர்களை சமாதான படுத்த முயன்றேன். ஷியாம் ஒருவழியாக சமாதானமாகினான். ஆனால் சொப்னா விடாப்பிடியாக இருந்தாள். அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். கொஞ்ச நாட்களாக சொப்னாவை தொடர்புகொள்ள முடியவில்லை. ஷியாம் அடிக்கடி என்னை வந்து கேட்டான், ஆனால் என்னால் பேச முடியாத போது என்ன செய்வது? யோசித்து கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், ஷியாமே ஒரு தகவலோடு வந்தான். “சொப்னாவிற்கு அவள் அத்தை பையனுக்கும் திருமணம் நடக்க போகிறதாம்!” </b></i><i><b>எனக்கு பலத்த அதிர்ச்சி! ஒருவேளை அவள் வீட்டிற்கு தெரிந்து இந்த ஏற்பாடா? குழப்பமாக இருந்தது. தன் நிச்சயதார்த்த பத்திரிக்கை வைப்பத்தற்காக என் வீட்டிற்கு சொப்னா தன் தாயுடன் வந்திருந்தாள். அப்போது பேசினேன்.</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>”நான் என் அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு அவரை ரொம்ப பிடிச்சுருக்கு. எப்ப கல்யாணம் நடக்குமோ என காத்திருக்கேன்!”</b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>இது அவள் என்னிடம் பேசியது நான் பதில் பேசவில்லை. வாழ்த்து சொல்லி அனுப்பினேன். ஷியாமை எப்படி மறந்தாள் அவள்? அவள் வீட்டிற்கு அவர்கள் காதலால் எந்த பிரச்சினையும் வராதபோது ஏன் இந்த முடிவு? ஷியாமை யோசித்தேன் - அவன் இப்போது ஏதோ சிறுசிறு வேலைகள் செய்து வருகிறான். ஆனால் சொப்னாவின் அத்தைப் பையனுக்கு சொந்தமாக கடை உள்ளது. கடைசி நேரத்தில் சினிமாபோல் ஏதாவது திருப்பம் வருமென நினைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. </b></i><br />
<i><b><br />
</b></i><br />
<i><b>கடைசியாக சொப்னாவின் திருமணத்திற்கு 1 வாரம் முன்பு அவர்கள் இருவரையும் தொலைபேசியில் பேச வைத்தேன். அவன் அவளுக்கு வாழ்த்து சொன்னான். நானும் சொன்னேன். நான் ரசித்த அவர்கள் காதல் எங்கோ கரைந்துபோனது. அன்றிரவும் நான் உறங்கவில்லை. </b></i><br />
<br />
<div style="text-align: center;">-----------------------------------</div><br />
சொப்னா திடீரென ஏன் மாறிப்போனாள்? காதலிக்க எதுவும் தேவையில்லை. ஆனால் திருமணத்திற்கு அப்படியில்லை என்றா? ஷியாமும் ஏதோ காதல் தோல்வி என உருகவில்லை. இதோ இன்று அவனும் ஒரு திருமணத்திற்கு தயாராகி விட்டான். அவர்கள் இருவருமே வெறும் உடல் தீண்டல்களுக்காக, உடல் கவர்ச்சியினால் காதலித்திருக்கிறார்கள். 8 வருடம் ஆனால் என்ன, அவர்களிடம் உண்மையான அன்பு இருக்க வில்லை என குமாரால் புரிந்துகொள்ள முடிந்தது. அதுதான் தியாகு-ரூபவை ஞாபகப்படுத்தியது. தோல்வியில் முடிந்த இரண்டு காதல்களிலும் மோசமான முடிவே இருந்தன. ஆனால் ஒன்றில் அறியா பருவத்திலும் உண்மையான அன்பு இருந்தது. ஒன்றில் வயது ஏறிய போதும் வெறும் உடல் கவர்ச்சிதான் இருந்தது.<br />
<div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">**************************</div><span class="Apple-style-span" style="color: purple;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="color: purple;"><b>இந்த இரு சம்பவங்களும் சொல்ல காரணம். இப்பொதெல்லாம் டீன் ஏஜ் வயதில் காதல் வருவது இயல்பாகி விட்டது. பல நேரங்களில் இதன் முடிவு தவறாகி போகிறது. வாழ்க்கை சீரழியும் நிலை கூட ஏற்படுகிறது. அறியாப் பருவத்தில் ஓடிப் போகும் காதல்களும் உள்ளன. இதில் சும்மா டைம்பாஸாக காதலிப்பவர்களும் உண்டு!! இங்கே வழிகாட்டல் என்பது பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் முழுமையாக செய்யப்படுவதில்லை. மேலும் உடனிருக்கும் நண்பர்களும் இங்கே தவறான வழிகாட்டல்களையே செய்கிறார்கள்.</b></span><br />
<span class="Apple-style-span" style="color: purple;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span" style="color: purple;"><b>காதல் என்பது என்ன என்று என்னால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் அதன் மீதான ஆர்வம் சுத்தமாக வடிந்து விட்டது. வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது மற்றவகளின் வாழ்க்கையை நீ தீர்மானிக்க முடியாது. அதேபோல் எந்த தவறையும் என்றும் ஆதரிக்காதே!</b></span><br />
<span class="Apple-style-span" style="color: purple;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span" style="color: purple;"><b><i>மேற்கண்ட இரு சம்பங்களும் என் வாழ்க்கையில் நடந்தவைதான்! ஆம் அந்த குமார் நான்தான்!</i></b></span><br />
<div><br />
</div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-45019709435984350152010-11-23T21:48:00.000-08:002010-11-23T21:51:38.784-08:00காதல் என்பது..... பாகம் 1<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS2fYt3WcCHBxywmfBpSdbetfNN_KrByL1070JKaSRGgrrHHHFg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS2fYt3WcCHBxywmfBpSdbetfNN_KrByL1070JKaSRGgrrHHHFg" /></a></div>காதல் என்றால் என்ன?<br />
<br />
காதல் என்பது....<br />
ஒரு இனிமையான அனுபவம்<br />
ஒரு அற்புதமான உணர்வு<br />
அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்<br />
காமம்தான் காதல்<br />
கல்யாணத்து பிறகு வருவதுதான் உண்மையான காதல்<br />
<br />
இப்படி ஆளாளுக்கு சொல்லிகிட்டே போகலாம்....<br />
ஆனால்.....<br />
<br />
<a name='more'></a><br />
<div style="text-align: center;">*********</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: left;"><u><b>குமாரின் டைரிக் குறிப்பு-1</b></u></div><div style="text-align: left;"><br />
</div><b><i>அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். பொதுவாகவே நான் கொஞ்சம் மூடி டைப். அதிகமாக யாரிடமும் பேச மாட்டேன். சட்டென்று எல்லோரிடமும் சகஜமாக பழகுவது எனக்கு கடினம். அதனால் நான் மற்றவர்களிடமிருந்து ஓரளவு விலகி இருப்பது போன்ற சூழல் இருந்தது. அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று அதிகமில்லை 4 பேர் தான். அதில் ஒருவன் பெயர் பரமேஷ். ஆனால் அவனுக்கு என்று ஒரு தனி கேங் இருந்தது. அவர்கள் எல்லோரும் அடிக்கடி கூடி பேசிக் கொள்வார்கள். அதில் கொஞ்சம் வாட்டசாட்டமாக நல்ல உடற்கட்டுடன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தியாகு. அவனிடம் நான் அதிகம் பேசியதில்லை.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>எங்கள் வகுப்பில் மாணவர்கள் உட்காரும் விதம் கொஞ்சம் வித்தியாசமானது. ‘ப’ வடிவில் டெஸ்க்குகள் இருக்கும். அதில் இரு பக்கமும் பையன்களும் நடுவிலும் கீழேயும் பெண்களும் அமர்வார்கள். தியாகு எனக்கு எதிர்பக்கத்தில் அமர்ந்திருப்பான். பரமேஷ் எனக்கு இரண்டு பையன்கள் தள்ளிதான் உட்காருவான்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>அரையாண்டு பரீட்சை முடிந்து விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற நேரம். ஒரு நாள் எங்கள் டீச்சர் வேறொரு டீச்சருடன் வகுப்பு வாசலுக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். நான் வகுப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டே கதை எழுதுகிறேன் என நோட்டில் கிறுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தியாகும் பரமேஷும் சைகையில் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன். அவர்கள் பேசுவது எனக்கு புரியவில்லை. திடீரென ஒரு பர்ஸை அங்கிருந்து தூக்கிப் போட்டான். அதை பரமேஷ் கேட்ச் பிடித்தான். பிறகு என்ன செய்தான் என எனக்கு தெரியவில்லை. ஒரு இங்கிலீஷ் கைடை என்னிடம் பரமேஷ் தந்தான். அதை எனக்கு அருகில் கீழே உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் தரச் சொன்னான்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>எனக்கு புரியவில்லை. அந்த பெண் எதையும் கேட்கவே இல்லை. அப்புறம் எதற்கு கைடு? நான் எதையும் கேட்கவில்லை. அந்த பெண்ணிடம் கைடை கொடுத்தேன். அந்த பெண் அமைதியாக வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரத்தில் கைடை கொடுத்தது. நான் அதை பரமேஷிடம் கொடுத்தேன். அவன் அதை எடுத்துக் கொண்டு தியாகுவிடம் சென்று விட்டான். பரமேஷ், தியாகு, இன்னும் சில நண்பர்கள் எதையோ பார்த்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>எனக்கு ஆர்வம் அதிகமானது தெரிந்துகொள்ள ஆசை ஆனால் கேட்க தயக்கம்? எனக்கு அருகில் இருந்த குமார் என்ற நண்பனிடம் இது பற்றி கேட்டேன். அவன் முதலில் சொல்லவில்லை. ஆனால் பிறகு சொன்னான். தியாகுவும் அந்த பெண்ணும் காதலிக்கிறார்களாம். தியாகு தன் போட்டோவை கைடு மூலம் அந்த பெண்ணிடம் தந்திருக்கிறான். அந்த பெண்ணும் தன் ஃபோட்டோவை தந்திருக்கிறாள்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>அதுவரை காதல் என்பதை பற்றி நான் நினைத்ததே இல்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த வயதில் எனக்கு அதன் மீது ஆர்வம் அதிகமானது. எனக்கு காதலிக்க பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் செய்வதை கவனிப்பது எனக்கு சுவாரசியமாகதான் இருந்தது. அதன் பின் அவர்களது பரிமாற்றங்கள், பரமேஷும் யாருக்கோ ரத்தத்தால் கடிதம் எழுதியது என பல விஷயங்களை கவனித்தேன். நான் எதையும் அவர்களிடன் கேட்க மாட்டேன். அவர்களும் என்னிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால் முடிந்தவரை என்னவென்று கவனிப்பேன், அவர்கள் சந்தோசமாக சிரித்து எதைப் பற்றியோ பேசுவதை அமைதியாக ஊமைப்படத்தை ரசிப்பது போல கவனிப்பேன்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<div style="text-align: center;"><b><i>----------------------</i></b></div><b><i><br />
</i></b><br />
<b><i>எட்டாவது சென்ற பிறகு தியாகு எனக்கு கொஞ்சம் நெருங்கிய நண்பனான். எனக்கு அருகில் உட்காருவான். நன்றாக பேசுவான். உதவிகள் செய்வான். எனக்கு அவனை பிடித்து போனது. அவனும் அந்த பெண்ணும் பேசி நான் பார்த்தே இல்லை. ஆனால் அவர்களுக்கு காதல் இருந்தது. அந்த பெண்ணை பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை இல்லை? அந்த பெண்ணின் பெயர் ரூபா. அமைதியான பெண். நன்றாக படிப்பவள்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>நான் படித்த பள்ளியில் எட்டாவது வரை மட்டுமே இருந்தது. எனவே அதுதான் அங்கே கடைசி வருடம். அதனால் நான் என் படிப்பை கடுமையாக படித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம். தியாகு அடிக்கடி தன் நண்பர்களுடன் கூடி பேசுவது குறைந்திருந்தது. எனக்கு காரணம் தெரியவில்லை.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>காலாண்டு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற போது ரூபா பள்ளிக்கு வரவில்லை. ஒரு வாரம் ஆகியும் பள்ளிக்கு வரவில்லை. தியாகுவும் சில நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. நான் காரணம் புரியாமல் வழக்கம்போல் குழம்பிக் கொண்டிருந்த போது, ஒரு பரமேஷ் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். அதன் மூலம் தெரிந்தது. ரூபா எங்கள் தமிழாசியரின் தம்பி பெண். அவர்களின் வீட்டில் காதல் விஷயம் தெரிந்ததால், ரூபாவை அருகில் இருந்த வேறு பள்ளிக்கு மாற்றி விட்டார்கள்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாள் கழித்து தியாகு பள்ளிக்கு வந்தான். முன்போல் கலகலப்பாக இருப்பதில்லை என்றாலும் சாதாரணமாகவே இருந்தான். நான் அவனிடம் எதையும் கேட்கவில்லை.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>நாட்கள் சென்றது முழு ஆண்டு பரிட்சை முடிந்து, அந்த பள்ளி வாழ்க்கை முடிந்தது. விடுமுறையில் நான் வீட்டில் இருந்த சமயம் ஒரு நாள் பரமேஷ் என்னை பார்க்க வந்தான். அந்த வருட ஆண்டு விழாவிற்கு நான் செல்லவில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய ஒரு பரிசை ஆசிரியர்கள் தரச்சொன்னதாக சொன்னான். பரிசை வாங்கிக் கொண்டு நண்பர்கள் பற்றி விசாரித்தேன்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>அவன் மவுனமாக இருந்தான். பின் சொன்னான், “ரூபா இறந்துட்டாடா!”</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>நான் அதிர்ச்சியானேன் ”என்னடா சொல்ற?”</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>”ஆமாம் ரூபா இறந்துட்டா, கொஞ்ச நாள் முன்னாடி ஊட்டிக்கு போன பஸ் மலையிலிருந்து கவிழ்ந்ததா பேப்பர்ல கூட வந்ததே, அதில் அவளும் இருந்தாள்”</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>எனக்கு பலத்த அதிர்ச்சி எதுவும் பேச தோன்றாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>”நாங்க எல்லோரும் அவள் இறுதி சடங்குக்கு போனோம். தியாகும் வந்தான்.” கொஞ்சம் நிறுத்தி விட்டு தொடர்ந்தான். “அவன் அன்னிக்கு பூச்சி மருந்து குடிச்சிட்டான். எப்படியோ காப்பத்திட்டாங்க”</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>எனக்கு இந்த விஷயங்கள் மிகவும் சோகத்தை அளித்தன. பரமேஷ் சென்ற பிறகு இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<div style="text-align: center;"><b><i>------------------------------------------------------</i></b></div><b><i><br />
</i></b><br />
<b><i>பள்ளியில் கடைசியாக பார்த்த பின் தியாகுவை நான் பார்க்கவே இல்லை. பள்ளி நண்பர்களின் தொடர்பும் இல்லை. இப்போது புதிய பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போது எதேச்சையாய் தியாகுவை பார்த்தேன்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>தியாகு தூரத்தில் ஒரு வீட்டை காட்டி அது அவன் வீடு என கூறினான். தான் இப்போது படிக்கவில்லை என்றும் அவன் அப்பாவின் மளிகை கடையில் வேலை செய்வதாகவும் கூறினான். அதன் பிறகு அவ்வப்போது பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அவன் வீட்டை பார்த்துக் கொண்டே செல்வேன். எப்போதாவது அவன் வெளியில் நிற்பான் என்னை பார்த்து என் அருகில் வருவான் கொஞ்சம் பேசுவோம், பிறகு நான் செல்வேன். ஆனால் அவனிடம் என்றுமே ரூபாவை பற்றி கேட்டதில்லை.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>நான் 9ஆம் படித்த வருடத்தில் அவனை அதிகபட்சமாக 6-7 தடவை பார்த்திருப்பேன். 10வது சென்ற பிறகு அவனை காணவே இல்லை. ஒரு நாள் வீட்டிற்கு செல்லும்போது பரமேஷும் இன்னொரு நண்பனையும் பார்த்தேன். மற்ற நண்பர்கள் பற்றியெல்லாம் பேசிய பின் தியாகுவின் பேச்சு வந்தபோது பரமேஷ் மீண்டும் ஒரு அதிர்ச்சி தந்தான்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>”தியாகு இறந்துட்டாண்டா கடல்ல குளிக்க போய் மூழ்கி இறந்துட்டாண்டா” “ஆனா அது இயற்கையான மரணமில்லை தற்கொலை ஏன்னா அவனுக்கு நல்லா நீச்சல் தெரியும்” “அதை விட முக்கியமான ஒரு விஷயம் அவன் இறந்த நாள் சரியா போன வருஷம் ரூபா இறந்த அதே நாள்!”</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>அன்றிரவு எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. என் இயலாமை குறித்து நொந்துகொண்டேன். என் தயக்கம், நண்பர்களிடம் சகஜமாக பழகாததற்காக வருத்தப்பட்டேன். இல்லையென்றால் நண்பர்களின் மரணம் கூட எனக்கு தெரியாமல் போகுமா?</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<b><i>அதன் பின் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் தியாகுவின் வீட்டை தூரத்திலிருந்து பார்த்து கொண்டே போவேன். பரமேஷ் சொன்னதெல்லாம் பொய்யாக இருக்கும். என்றாவது ஒரு நாள் தியாகு வந்து பேசுவான் என எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்.</i></b><br />
<b><i><br />
</i></b><br />
<div style="text-align: center;">-------------------------</div><div style="text-align: center;"><br />
</div>இந்த சம்பவம் எதை சொல்கிறது? காதலுக்காக உயிரை விட்டது முட்டாள்தனம்தான். தியாகுவிற்கு அந்த வயதில் ஏற்பட்டது வெறும் infatuation, attraction, பருவக் கோளாறு என சொல்லிக் கொண்டே போகலாம்!! ஆனால் அவன் மரணம் எதை குறிக்கிறது?<br />
<br />
குமாருக்கு இந்த சம்பவம் மனதில் ஆழமாய் பதிந்து விட்டாலும், கால ஓட்டத்தில் இதனை மறந்துவிட்டான். ஆனால் 2 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இதை இந்த நிகழ்வை அவனுக்குள் மீண்டும் கிளறிவிட்டது. அந்த சம்பவம்......எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-48302455090493366722010-11-18T10:33:00.000-08:002010-11-18T10:33:32.576-08:00என்னோட எதிரி!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.virakesari.lk/cinema/vimarsanam/admin/vimar_img/uploaded/thamirabaranu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="312" src="http://www.virakesari.lk/cinema/vimarsanam/admin/vimar_img/uploaded/thamirabaranu.jpg" width="640" /></a></div><br />
அவன் வந்துட்டுகிட்டு இருக்கான்! அவன்தாங்க என்னோட எதிரி! வரட்டும் வரட்டும் என்ன செஞ்சுருவானு பாக்கிறேன்! அவன் எல்லாம் என் முன்னாடி நிக்க முடியுமா! அவன்லாம் எனக்கு ஜுஜுபி மாதிரி!<br />
<a name='more'></a><br />
நீங்களே சொல்லுங்க! நான் என்ன பண்ணேன்! அரசியல்வாதிகிட்ட அமைச்சர் பதவி கொடுத்துட்டு ஒழுங்கா இருன்னா இருப்பாங்களா! நான் மட்டும் ஒழுங்கா இருக்கணும்னா எப்படி? யார்தான் தப்பு செய்யலை! உங்களுக்கு புடிக்கலைன்னா நான் என்ன செய்ய முடியும்? என் சுபாவம் அப்படி! அதை போய் புடிக்கலைன்னா நான் இனிமே மாத்திக்கவா முடியும்.<br />
<br />
அந்த மாதிரி இடத்தில நான் இருப்பேன்னு தெரியும்ல, சபலபட்டு வந்து யார் தப்பு! அது இவர் தப்பு! அப்புறம் என்னை புடிக்கலை, என்னால பிரச்சினைனா நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க!<br />
<br />
என்னால என் குணத்தை மாத்திக்க முடியாதுங்க! நான் என் இஷ்டம்போலத் தான் நடப்பேன். அதை இவர் பொறுத்தானே ஆகணும் அதை விட்டுட்டு எனக்கு எதிரா சதி செஞ்சா எப்படி?என்னை அழிக்க ஒருத்தனை வரவச்சிருக்காருங்க இவரு! இது நியாயமா சொல்லுங்க!<br />
<br />
என்ன அழிக்க ஒரு எதிரியை இவரு கொண்டு வந்துட்டாரு! எனக்கு செம கடுப்பாயிருச்சு! என்னை அழிக்க ஒரு எதிரியா வரட்டும்! அவன் வரட்டும்! என்ன பண்ணுறான் நானும் பாக்கிறேன்!<br />
<br />
பக்கத்தில வந்துட்டான் என்னோட எதிரி..... டேய்! எதிரி! வாடா வா! நீயெல்லாம் பெரிய ஆளா? என்னை வேணா நீ சாய்ச்சிடலாம், ஆனா என்னை மாதிரி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? உன்னால எல்லாரையும் சமாளிக்க முடியாது. டேய்! வாடா! நீயா நானா பார்த்திடலாம். நீயெல்லாம் எனக்கு சமமா! சொந்தமா ஒரு பேரை வச்சுக்க கூட துப்பில்ல! உன் பேர்ல பாதி என் பேரை வச்சிருக்க! நீயெல்லாம் என்னை அழிக்க வந்துட்ட! பேரைப் பாரு <b>ஆண்டிவைரஸாம்</b>! கொய்யால வாடா பாத்துறேன்...........<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.hugepedia.com/wp-content/uploads/2010/03/computer-virus-remove.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.hugepedia.com/wp-content/uploads/2010/03/computer-virus-remove.jpg" /></a></div><br />
<span> </span>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-38330185127739852022010-11-15T02:29:00.000-08:002010-11-15T02:30:23.853-08:00ரஜினி ஒரு சிறந்த Entertainer!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://upload.wikimedia.org/wikipedia/en/0/0b/Aarilirunthu_arubathu_varai.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/en/0/0b/Aarilirunthu_arubathu_varai.JPG" /></a></div><br />
பொதுவாக ரஜினியின் பெரும்பாலான படங்களை பிடிக்கும். சிலவற்றை திரும்ப திரும்ப பார்க்கலாம். அப்படிப்பட்ட படங்களில் எனக்கு பிடித்த சில படங்களை சொல்கிறேன். ஏதோ சாதாரண ரசிகனா இது புடிக்கும் அது புடிக்குங்கிற மாதிரி எழுதறேன். இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்ட சவுந்தரை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்.<br />
<a name='more'></a><br />
<br />
* 1. <b>மூன்று முடிச்சு்</b>: இந்த படத்தில் ரஜினிதான் வில்லன்/ஹீரோ எல்லாமே. கமல் கொஞ்ச சீன்தான் வருவார். குறிப்பா வசந்தகால நதிகளிலே பாட்டில் கடையில் கமல் படகிலிருந்து தவறி விழுந்த பிறகு அவரை காப்பாத்தாமா பாடுவார் பாருங்க அந்த சீன் ரொம்ப பிடிக்கும். 2. அதேபோல்<b> பதினாறு வயதினிலே</b>வில் வரும் பரட்டை கேரக்டரும் ரொம்ப பிடிக்கும். அதில் ஸ்ரீதேவி பற்றி மாப்பிள்ளை வீட்டுகாரங்க கிட்ட வத்தி வைப்பாரு பாருங்க அந்த சீன் பிடிக்கும்.<br />
<br />
* ரஜினியின் நடிப்பு நான் பார்த்து ஆச்சரியப்பட்ட படங்கள். இது மாதிரி இப்ப நடிக்கறதில்லையே என்கிற ஏக்கம் இருக்கத்தான் செய்யுது.<br />
1. <b>ஆறிலிருந்து அறுபதுவரை</b>: தம்பிகள் தங்கைக்காக உழைச்சு கடைசில தன்னோட குடும்பத்த காப்பாத்த கஷ்டப்படுவாரு. அவர் மனைவி கடைசியில் இறந்த பிறகு அவரால் பணம் கிடைக்கும். ரொம்ப ரொம்ப செண்டிமெண்டலான படம். சோ இந்த படத்தில் ஃபிரண்டா கடைசி வரை உதவியா வருவார். இந்த படம் பார்த்தா ஒரு சீன்லயாவது நம்ம மனசு நெகிழ்ந்துடும், கண்ணில் தண்ணி வர மாதிரி ஆயிடும்.<br />
2. <b>கை கொடுக்கும் கை</b>: கண்ணு தெரியாத பொண்ணை குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிப்பாரு. வேறொரு கிராமத்துக்கு போனா அங்க வில்லனால பிரச்சினை வரும். இது ரஜினியின் நடிப்பை காண்பிக்கும்.<br />
3. <b>எங்கேயோ கேட்ட குரல்</b>: ஓடிப்போன மனைவியா இருந்தாலும் அவங்க இறந்த பிறகு இறுதிச் சடங்கை எதிர்ப்பை மீறி செய்வார். ரொம்ப நல்ல சீன் அது.<br />
4. <b>முள்ளும் மலரும்</b>: தங்கை- அண்ணன் கதை. இதுவும் ரஜினியின் நடிப்பை சொல்லும் படம்.<br />
5. <b>அன்புள்ள ரஜினிகாந்த்</b>: ஒரு குழந்தைக்காக ஒரு நடிகர் உதவுவது போன்ற கதை, அதற்குள் நிறைய கிளைக்கதை இருக்கும். இதில் பாக்யராஜ்-ரஜினி சீன் ரொம்ப பிடிக்கும்.<br />
6. <b>ஜானி</b>: இந்த படம் நிறைய தடவை பார்த்துட்டேன். எனக்கு அந்த பார்பர் ரஜினி கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.<br />
7. <b>படிக்காதவன்</b>: இதுதான் நான் அதிகமாக பார்த்த ரஜினி படமா இருக்கும். ரஜினி-சிவாஜி காம்பினேசன் ரொம்ப பிடிக்கும்.<br />
8. <b>அன்னை ஒர் ஆலயம்</b>: யானை குட்டியை கண்டுபுடிச்சு அதோட அம்மா கூட சேர்க்கிற படம். ரஜினி அம்மா செத்த பிறகு வரும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.<br />
9. <b>பொல்லாதவன்</b>: இதுவும் பிடிக்கும் எதுக்குனு தெரியலை. ஆனா நல்லாயிருக்கும். நான் பொல்லாதவன் பாட்டுக்காக கூட இருக்கலாம்<br />
<br />
* ரசிக்கிறமாதிரி இன்னும் நிறைய படங்கள் 1. <b>தில்லுமுல்லு</b>- எப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும். 2. <b>குருசிஷ்யன்</b>- இதுவும் நல்ல நகைச்சுவை படம். 3. <b>தம்பிக்கு எந்த ஊரு</b> - அந்த பாம்பு காமெடி ரொம்ப நல்லாயிருக்கும்.<br />
<br />
* <b>படையப்பா, பில்லா, ரங்கா, நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத்</b> இப்படி சொல்லிகிட்டே போகலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
நான் ரஜினிக்கு தீவிர ரசிகன் கிடையாது. ஆனா அவர் படம் பெரும்பாலும் எல்லாமே புடிக்கும். அவர் படங்களில் அவருக்கு இருக்கிற மாதிரியே மற்றவங்களுக்கும் நடிக்க நல்லா சான்ஸ் கொடுத்திருப்பாரு. அது ரொம்ப பிடிச்ச விசயம். அவர் படங்களில் அவருக்கு ஏற்ற பெஸ்ட் காமெடியன் ஜனகராஜ்தான்!<br />
<br />
நான் எந்த படத்தையும் விவரிக்கலை. ஒரு சாதாரண ரசிகனா இதெல்லாம் புடிக்கும்னு சொல்லியிருக்கேன். அவ்வளவுதான். எனக்கு இப்ப இருக்கிற ரஜினியை விட செண்டிமெண்ட் நடிப்பால் கவர்ந்த ரஜினிதான் புடிக்கும். என்னைப் பொறுத்தவரை ரஜினி ஒரு சிறந்த Entertainer! அவர் படங்கள் போரடிக்காம போகும். இந்த தொடரை யார் வேணும்னாலும் தொடருங்க!<br />
<div><br />
</div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-4708561896613522812010-11-11T15:45:00.000-08:002010-11-11T15:53:46.403-08:00கருணை<b><span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="color: purple;"><span class="Apple-style-span" style="background-color: cyan;">நேரம் மாலை 4.40 </span></span></span><span class="Apple-style-span" style="font-size: x-large;"> </span></b><br />
<br />
<b><span class="Apple-style-span" style="font-size: x-large;"></span>இ</b>னிமையான கடற்கரை காற்று வீசியது. அதை அனுபவித்தபடியே நடந்தேன்.<br />
<br />
”அய்யா தர்மம் பண்ணுங்கய்யா”<br />
<br />
குரல் கேட்டு திரும்பினேன். ஒரு வயதான மூதாட்டி நின்று கொண்டிருந்தாள்.<br />
<br />
யோசித்தேன். பிறகு சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 1 ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுக்கு போட்டேன்.<br />
<br />
”தர்மராசா நீங்க நல்லாயிருக்கணும்”<br />
<br />
நான் புன்னகைத்து கொண்டே நடந்தேன்.<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: purple;"><span class="Apple-style-span" style="background-color: cyan;">நேரம் மாலை 4. 15</span></span></b><br />
<a name='more'></a><br />
<b>க</b>டல் மணலை எட்டி உதைத்தேன். கடல் மணல் கண்ணில் விழுந்தது.<br />
<br />
”டேய் நில்லுடா”<br />
<br />
”குரல் கேட்டு நின்றேன்”<br />
<br />
”டேய் நீ இங்கியா இருக்க, அவசரமாக ஒரு 100 ரூபா இருந்தா தாடா ரொம்ப அர்ஜண்டுடா”<br />
<br />
அவன் முகத்தை பார்த்தேன். பாக்கெட்டில் இருக்கும் பணத்தை தொட்டு பார்த்தேன்.<br />
<br />
”இல்லடா என் கிட்ட ஏது பணம் நானே வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருக்கேன்.”<br />
<br />
”டேய் பிளீஸ்டா ரொம்ப அவசரம்டா”<br />
<br />
”டேய் சத்தியமா என்கிட்ட எந்த பணமும் இல்ல” சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தேன். அவன் நம்பாத பார்வை பார்த்தவாறே சென்றான்.<br />
<br />
ரொம்ப அவசரமாம். பணம் வாங்கிட்டு குடிக்கதானே போகப்போறான். பணம் போனாலும் திரும்பி வராது. இவனுக்கெல்லாம் எவன் பணம் தருவான்?<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: purple;"><span class="Apple-style-span" style="background-color: cyan;">நேரம் மாலை 4. 00</span></span></b><br />
<br />
<b>க</b>டலும் வானமும் நீலமாக தெரிந்தது. உண்மையில் இரண்டிற்கும் அது உண்மையான நிறமில்லை. ஆனாலும் நம் கண்ணுக்கு அதுதான் தெரிகிறது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.<br />
<br />
மெதுவாக யோசித்து கொண்டே நடந்தேன். மீதமிருக்கும் பணத்தை என்ன செய்வது?<br />
<br />
திடீரென என் பேண்ட் பாக்கெட்டில் யாரோ கைவிடுவது போல இருந்தது. சடாரென திரும்பினேன். ஒருவன் என் பேண்ட் பாக்கெட்டில் கைவிட முயன்றான் அவனை பிடித்தேன். பளாரென அறை விட்டேன்.<br />
<br />
”என்னடா பிக்பாக்கெட்டா” கோபமாக கேட்டேன். இதற்குள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சூழ்ந்தனர்.<br />
<br />
”என்ன சார் பிக்பாக்கெட்டா?” “இந்த வயசிலேயாவா” ”இவனையெல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கணும்”<br />
<br />
சிலர் விமர்சித்தனர். சிலர் அவனை கொஞ்சம் அடிக்க ஆரம்பித்தனர். அவன் அழம்பித்தான்.<br />
<br />
“நிறுத்துங்க” அவனை பார்த்தேன். விடலை வயது. “அவனை விட்ருங்க பரவாயில்லை” ”டேய் மறுபடியும் இந்த மாதிரி பண்னாதடா” என மிரட்டினேன். அவன் தலையாட்டி விட்டு ஓடினான். எல்லோரும் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: purple;"><span class="Apple-style-span" style="background-color: cyan;"><br />
</span></span></b><br />
<b><span class="Apple-style-span" style="color: purple;"><span class="Apple-style-span" style="background-color: cyan;">நேரம் மாலை 3.00</span></span></b><br />
<br />
<b>க</b>தவை தட்டினேன். அவன் திறந்தான்.<br />
<br />
”என்ன சார் பணம் கொண்டு வந்திருக்கிங்களா”<br />
<br />
”ம்”<br />
<br />
உள்ளே சென்றேன்.<br />
<br />
”எவ்வளவு”<br />
<br />
யோசித்தேன். இரண்டு லட்சம் உள்ளது. எல்லாவற்றையும் கொடுக்கலாமா? ம்ஹூம் வேண்டாம்.<br />
<br />
”ஒரு லட்சம்”<br />
<br />
”கொடுங்க”<br />
<br />
”உன்னோட கமிஷன் போக மீதியை கட்டிடு”<br />
<br />
”இந்த தடவையாவது நல்ல அமவுண்ட் கிடைக்குமா”<br />
<br />
”நானா சார் ஓடறேன். எல்லாம் ஓடற குதிரைங்க கையிலதான் ஜாக்பாட் இருக்கு”<br />
<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: purple;"><span class="Apple-style-span" style="background-color: cyan;">நேரம் மதியம் 12.00</span></span></b><br />
<br />
<b>அ</b>ந்த பஸ் ஸ்டாப்பில் நான், ஒரு பெண், ஒரு ஆள் மட்டுமே இருந்தோம்.<br />
<br />
அந்த ஆளின் செல்ஃபோன் ஒலித்தது. “சொல்லுமா பணத்தை ரெடி பண்ணிட்டேன். கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்” சத்தமாக பேச ஆரம்பித்தார். அவர் சத்தமாக பேசியது அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை போல மூஞ்சை சுளித்துக் கொண்டு திரும்பிக் கொண்டது. அது அவரின் இயல்புபோல தொடர்ந்து சத்தமாக பேசினார்.<br />
<br />
”இங்க ஏதோ கலாட்டாவாமா, பஸ் ரொம்ப நேரமா காணோம், ஆட்டோ கூட பக்கத்தில் இல்லை. பஸ் கிடைச்ச உடனே ஆஸ்பிடலுக்கு வந்திடறேன்மா”<br />
<br />
”அழாத அதான் பணம் தயாரா இருக்குன்றேன்ல, நாளைக்கு நம்ம குழந்தை ஆபரேசன் கண்டிப்பா நடக்கும். என் பிரெண்டு 2 லட்சம் ஒரு இடத்தில் கடன் வாங்கி கொடுத்தான். ” அவர் பார்வை கையில் வைத்திருந்த கைப்பைக்கு யதேச்சையாய் போனது.<br />
<br />
”நான் வந்துருவேன் கவலைப்படாத குழந்தை எப்படி இருக்கான் தூங்குறனா”அப்போது தூரத்தில் ஏதோ பஸ் வந்தது.<br />
<br />
”இரும்மா பஸ் வர மாதிரி இருக்கு” சொல்லிக் கொண்டே திரும்பினார்.<br />
<br />
இதுவரை கவனித்துக் கொண்டிருந்த நான் அவரருகே சென்று அவரின் கைப்பையை பிடுங்கிக் கொண்டு பயங்கர வேகமாக ஓடினேன்.<br />
<div><br />
</div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-47600112735550445302010-11-09T18:19:00.000-08:002010-11-09T18:19:37.620-08:00உலகத்தின் கடைசி நாள்<div style="text-align: left;">இந்த பதிவு எழுதவுதற்கு முக்கிய காரணம் நண்பர் <a href="http://denimmohan.blogspot.com/">டெனிம் மோகன்</a> தான். அவர்கூட பேசுறப்ப உலகம் அழிவது பற்றி சில தகவல்கள் சொன்னார். ஆர்வம் அதிகமாகி அதை இன்னும் விவரமா தெரிஞ்கிட்டு எழுதுகிறேன். அவருக்கு மிக்க நன்றி!</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">எவ்வளவோ சுருக்கி எழுதினேன். ஆனாலும் ரொம்ப பெரிசா ஆயிடுச்சு. அதனால் பதிவா போடாம பிரசண்டேசனா மாத்திட்டேன். இது பெரிசா இருப்பதா நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க. ஃபுல்ஸ்க்ரீனில் படித்தால் நன்றாக இருக்கும்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">கருத்துக்களை சொல்லுங்க!</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: center;"><iframe frameborder="0" height="451" src="https://docs.google.com/present/embed?id=dgpfqp4z_7fb8fdpcp&size=m" width="555"></iframe></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><b><span class="Apple-style-span" style="font-size: x-large;">அனைவருக்கும் நன்றி!</span></b></div>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-42268864702813467162010-10-31T10:03:00.000-07:002010-11-09T10:31:59.516-08:00ஆவியுடன் பேசலாம் வாங்க!<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXiS0Qf-tbyoOwKxICajEAqfy3z2xCeLP3YfcayjEJ7D8DIKiLFb3nnet55KqDx0QVY-zOCMZwO_O0E58a7lboiqRO2DX2_D98Vv2lG5D9CCnh9Lw0SKTMnOmDNPVuWtgJU0afpNoTkGsf/s1600/36838-7175.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXiS0Qf-tbyoOwKxICajEAqfy3z2xCeLP3YfcayjEJ7D8DIKiLFb3nnet55KqDx0QVY-zOCMZwO_O0E58a7lboiqRO2DX2_D98Vv2lG5D9CCnh9Lw0SKTMnOmDNPVuWtgJU0afpNoTkGsf/s1600/36838-7175.gif" /></a></div>ஆவியுடன் பேச வேண்டும் என எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. அப்போது எனக்கு 13 வயது இருக்கலாம். ஒரு புத்தகத்தில் ஆவியுடன் பேசும் முறை என சில விசயங்களை போட்டிருந்தார்கள். எனக்கு ஆசை. சரி பலிக்கிறதோ இல்லையோ முயற்சித்து பார்ப்போமே என தீர்மானித்தேன்.<br />
<br />
துணைக்கு என் தம்பி மற்றும் அவன் நண்பர்கள் இருவரை அழைத்துக் கொண்டேன். இதில் மணி என்பவன் மிகவும் தைரியசாலி(அப்படித்தான் நினைத்தோம்). எனக்கும் என் தம்பிக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் தயாரானோம். <br />
<a name='more'></a><b><br />
</b><br />
<b>ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.</b><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWkzjslvW2-Qbp-UKX_mAqJzR3vLo02IhwTRTCMBcrbBXZvfOm-_Triqwv3dQXaX2mKJZ-zMrg04XEPJkLab3KD6QZDYXauqwwpal4NFTDxeE0K7eyMaQyB-I8qe5NnGiXf4LIrn7zXGVB/s1600/GHOST.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="305" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWkzjslvW2-Qbp-UKX_mAqJzR3vLo02IhwTRTCMBcrbBXZvfOm-_Triqwv3dQXaX2mKJZ-zMrg04XEPJkLab3KD6QZDYXauqwwpal4NFTDxeE0K7eyMaQyB-I8qe5NnGiXf4LIrn7zXGVB/s320/GHOST.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இதுதான் தரையில் வரைய வேண்டிய படம்</td></tr>
</tbody></table><b><span class="Apple-style-span" style="font-weight: normal;"><b>சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும். அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும். நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும்.</b></span></b><br />
<b> <br />
டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம். அனைவரும் சேர்ந்து “ஆவி நண்பரே வருக! ஆவி நண்பரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி நண்பரே வருக! ஆவி நண்பரே வருக!” என அழைக்க வேண்டும்.<br />
<br />
பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும். உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும். அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம்,இல்லை என சொல்ல yes, noவையும் காண்பிக்கும். ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் <br />
தானாக நகர்வது தெரியும்.</b><br />
<br />
இப்படித்தான் அந்த புத்தகத்தில் எழுதி இருந்தது.<br />
<br />
பகலில் நாங்கள் தயாரானோம். அறையை மூடி ஜன்னல்களை சாத்தி விட்டோம். நான் படத்தை வரைந்தேன். பிறகு மின்விசிறி, விளக்கு எல்லாவற்றையும் அனைத்து விட்டோம். நான்கு பேரும் சுற்றிலும் உட்கார்ந்திருந்தோம். <br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAQjNXI0FxbbHwJId3CUBzm439auHCx5fI0sITEoibL88A5KmEEy1U4pEQCuFp_k7Y8JiCYwOZ1Ws4-vHaXm1MYVNWP5ccD9UUIa1aZWmsaGjAzEeaaPgPocTR3PyDoMfcmF7HWRdZ7ZjO/s1600/2222222.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAQjNXI0FxbbHwJId3CUBzm439auHCx5fI0sITEoibL88A5KmEEy1U4pEQCuFp_k7Y8JiCYwOZ1Ws4-vHaXm1MYVNWP5ccD9UUIa1aZWmsaGjAzEeaaPgPocTR3PyDoMfcmF7HWRdZ7ZjO/s200/2222222.jpg" width="161" /></a></div>மெழுகுவர்த்தியை கொளுத்தினேன். அது உடனே பற்றிக் கொண்டது. மேலும் வழக்கத்தை விட மிக பிரகாசமாசமாக எரிந்தது. அதைப் பார்த்த உடனே, மணி,” ஆ!!!” என கத்திக் கொண்டே கதவை திறந்து வெளியே ஓடி விட்டான். அவனை அழைத்து வருகிறேன் என போன என் <br />
தம்பியும் அவன் நண்பனும் கூட வரவில்லை. என் முயற்சி தோல்வியடைந்தது. அதற்கு பிறகு யாரையும் அழைத்தாலும் வரவில்லை.<br />
<br />
இன்னும் காத்திருக்கிறேன் என்றாவது ஒருநாள் ஆவியுடன் பேச.........எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-18549706095579085072010-10-30T04:25:00.000-07:002010-10-30T04:26:03.060-07:00பாகம் 1<b><i></i></b><b><i><span style="color: red;">முதலிடம் வர நினைத்தேன் முடியவில்லை பள்ளியில்</span><br style="color: red;" /><span style="color: red;">முதலிடம் பெற நினைத்தேன் முடியவில்லை விளையாட்டில்</span><br style="color: red;" /><span style="color: red;">எதிர்பாரா தருணத்தில் வந்தேனே நான்!</span><br style="color: red;" /><span style="color: red;">வடை எனக்கே!</span><br />
<a name='more'></a><span style="color: purple;">ஐயா போஸ்ட்!</span><br style="color: purple;" /><span style="color: purple;">நான் போஸ்ட்மேனில்லை....</span><br style="color: purple;" /><span style="color: purple;">மெயில் அனுப்பினேன் ஃபாலோயருக்கு!</span><br />
<br />
<span style="color: orange;">காதல் கடிதம் கொடுத்தேன்</span></i></b><br />
<b><i><span style="color: orange;"></span><span style="color: orange;">பதில் வந்தது அறையாக!</span><span style="color: orange;"> </span></i></b><br />
<b><i><span style="color: orange;">வீடு திரும்பிய எனக்கு யோசனை வந்தது</span><br style="color: orange;" /><span style="color: orange;">இன்றைக்கு என்ன போஸ்ட் போடுவதென்று!</span><br />
<br />
<span style="color: black;">சிறு வயதில் திக்குவாய்</span><br style="color: black;" /><span style="color: black;">கொஞ்சம் வளர்ந்தபின் பேசுவதற்கு கூச்சம்</span><br style="color: black;" /><span style="color: black;">இன்றோ ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்</span><br style="color: black;" /><span style="color: black;">கும்மியாய நமஹ!</span><br style="color: black;" /><br />
<span style="color: magenta;">எண்களில் வாழ்க்கையில்லை</span><br style="color: magenta;" /><span style="color: magenta;">எண்ணாமலும் வாழ்க்கையில்லை</span><br style="color: magenta;" /><span style="color: magenta;">மீ த 100!</span> </i></b>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-57482584388076421432010-10-25T17:22:00.001-07:002010-10-26T00:43:33.452-07:00காலப்புதிர்கள் - பாகம் மூன்று (இறுதிப் பாகம்)யோகேஷ் மற்றும் ஜெயந்த் வாசலில் காத்திருந்தனர்.<br />
<br />
கொஞ்ச நேரத்தில் டாக்ஸியில் இருந்து இறங்கினார் தேவா.<br />
<br />
”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”<br />
<br />
”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”<br />
<br />
”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்” <br />
<br />
“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”<br />
<a name='more'></a><br />
”எங்களால இன்னமும் நம்ப முடியலை நாங்க நேற்று வெறும் ஆட்டோ கிராஃப் வாங்கத்தான் வந்தோம் சும்மா கூப்பிட்டோம் ஆனா...”<br />
<br />
”உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதான் கூப்பிட்டதால நானே தனியா வந்தேன் ஆனா ரொம்ப நேரம் இருக்க முடியாது 1 அவர்ல கிளம்பிடுவேன்.” புன்னகைத்தபடியே சொன்னார் தேவா.<br />
<br />
”நீங்க வந்ததே பெரிய சந்தோசம். காபி சாப்பிடுங்க சார்” <br />
<br />
“ஆஹா நான் காபி டீ சாப்பிடுறதில்லப்பா”<br />
<br />
”அப்போ கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வரேன்”<br />
<br />
”எதுக்குப்பா”<br />
<br />
”இல்லை சார் வரேன்” சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பினான் ஜெயந்த்.<br />
<br />
அவன் வரும் பேசலாம் என பேச ஆரம்பித்தனர் தேவாவும் யோகேஷும்.<br />
<br />
இவ்வளவு நேரம் வீட்டருகில் இருந்து கவனித்து கொண்டிருந்த ரமேஷ் எழுந்திரித்தான். உள்ளே இருவர் மட்டுமே... சமாளிக்கலாம். துப்பாகியை தயாராக்கி கொண்டு வீட்டருகே சென்றான்.<br />
<br />
<div style="text-align: center;">------------------------------------</div><br />
”சார் இந்த இடம்தான் அவனை கோட்டை விட்டோம்”<br />
<br />
”இங்கே நிறைய கம்பெனி வீடுங்கல்லாம் இருக்கு.”<br />
<br />
”அப்ப ஒன்னு பண்ணுங்க. முதலில் எல்லா வீட்டையும் விசாரிப்போம் எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு தேடுங்க” போலீஸ் அருண், ராம்சாமி, பாபு, சௌந்தர் தலைமையில் கிளம்பியது.<br />
<br />
<div style="text-align: center;">-----------------------------------------</div><br />
செல்வா 3வது முறையாக சுற்றி விட்டு சலித்துக் கொண்டான். ஒன்னும் தெரியலை எல்லாம் அமைதியா இருக்கு இதுக்குமேல சுத்தறது வேஸ்ட் ஏற்கனவே அந்த வாட்ச்மேன் ஒரு மாதிரியா பாக்கிறான். இவ்வளவு வந்தது வேஸ்டா போச்சே சலித்து வண்டியெடுத்து சிறிது தூரம் போயிருப்பான்.<br />
<br />
”ஹலோ நீங்க எங்க இங்க” என்னும் குரல் கேட்டது. செல்வா வண்டியை நிறுத்தி பார்த்தான். ஜெயந்த. இரவில் லிஃப்ட் கேட்டவன். இவன் இங்கேயா?<br />
<br />
”என்ன ஞாபகம் இல்லை நைட் பார்த்தோமே கவிஞரை பார்த்தோமே இப்பக் கூட அவர் எங்க வீட்டில தான் இருக்கார்” அவன் பாட்டுக்கு குதுகலமாக பேசிக்கொண்டு போனான். <br />
<br />
“எங்க வீடு இதோ இங்க கொஞ்சம் பக்கத்திலதான் வர்றீங்களா” யோசித்தான் செல்வா. சரி வந்ததுக்கு அங்க போய் கவிஞர்கிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்குவோம். <br />
<br />
ஜெயந்த வண்டியில் ஏறிக்கொள்ள செல்வா கிளம்பினான். ஆனால் அவன் மனம் முழுவதும் திருடன் பற்றியே இருந்தது. கவனிக்காமல் எதிரே ஒரு கார் மீது மோதப் போனான். மயிரிழையில் நகர்ந்தான். <br />
<br />
”சாரி சார் சாரி” என்றான் செல்வா. காரிலிருந்தவர் இவனை பார்த்துவிட்டு முறைத்து விட்டு கிளம்பினார். அவர் பாண்டியன்.<br />
<br />
பாண்டியன் கொஞ்ச தூரம் காரை ஓட்டிய பிறகு மனதில் ஒரு ஸ்பார்க். அட நைட் டைம் மெஷினில் ஒருவனை சுடுவது போல் பார்த்தோமே அதில் சுடப்படுபவன் இந்த வண்டி ஓட்டிச் செல்பவன்தானே!<br />
<br />
பாண்டியனுக்குள் வேகம் வந்தது. காரை திருப்பினார். பைக் தூரத்தில் புள்ளியாய் தெரிந்தது. சீறினார் வண்டியை.....<br />
<br />
<div style="text-align: center;">----------------------------------</div><br />
ரமேஷ் துப்பாக்கியை நீட்டி மீண்டும் ஒருமுறை சொன்னான். <br />
”நகரு இல்லை உன்னையும் சுட வேண்டியிருக்கும்” யோகேஷ் யோசித்தான். இவ்வளவு நேரம் இவன் கூட சண்டை போட்டோம் தேவா வேற அடிபட்டு மயங்கி கிடக்கிறாரு எப்படி காப்பாத்தறது. <br />
<br />
’’”எனக்கு வேற வழி தெரியலை” என்று யோகேஷை சுடச் சென்றான் ரமேஷ். அவன் மேல் யாரோ விழுந்தார்கள். அது ஜெயந்த். <br />
”யோகேஷ் இவன் யாரு”<br />
”தெரியலை ஆனா தேவா சாரை கொல்ல வந்தான். நான் இவன் மேலே சேரை தூக்கி அடிக்க அது அவர் மேலே பட்டு மயங்கிட்டாரு இவன் சுடப்போனான் நீ வந்துட்டடே”<br />
<br />
பேசிக்கொண்டே இருவரும். ரமேஷை அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரமேஷ் அவர்கள் இருவரையும் எளிதாக சமாளித்தான். அவன் அனுபவம் அவனுக்கு கைகொடுத்தது. விரைவில் அவர்கள் இருவரை களைப்படையச் செய்தான் இருவரும் மிகவும் களைத்து விழுந்தார்கள். யோகேஷ் ஜெயந்த் இருவரின் கைகளையும் சண்டையில் கிழிந்திருந்த தன் சட்டையை அவிழ்த்து கட்டினான் ரமேஷ்.<br />
<br />
இத்தனையும் கவனித்தாலும் பயந்துகொண்டே தான் தேடியவன் திருடனில்லை கொலைகாரன் என்று உணர்ந்து மேலும் பயந்து வாசலுக்கு வெளியே ஒளிந்துகொண்டிருந்த செல்வாவை அவன் கவனிக்கவில்லை.<br />
<br />
தேவா மயக்கம் தெளிந்து எழுந்திருக்க முயன்றார்.<br />
<br />
”ஓ மயக்கம் தெளிஞ்சிருச்சா நல்லது ” “சாரி நண்பா உனக்கும் எனக்கும் முன்விரோதம் இல்லை ஆனால் சொன்னாங்க செய்யறேன்” சுடச் சென்றான் ரமேஷ்.<br />
<br />
தன் கண் முன்னால் ஒரு உயிர் போவதை விரும்பவில்லை செல்வா. பயத்தை அடக்கிக் கொண்டே கண்ணை மூடி வேகமாக ஓடி ரமேஷை மோதினான் இருவரும் விழுந்தார்கள்.<br />
<br />
புதிதாக யார். குறுக்கே பல தடங்கல்கள் வெறி அதிகமாயிற்று ரமேஷிற்கு. துப்பாக்க்கியை தேடினான் அருகே கிடந்தது.<br />
<br />
”ஹேண்ட்ஸ் அப்”<br />
<br />
<div style="text-align: center;">-----------------------------------</div><br />
பாண்டியன் காரை நிறுத்தினார். எங்கே போனான் அந்த பையன். அவனுக்கு ஆபத்து இருக்கே! கவலையுடன் தேடினார்.<br />
<br />
கொஞ்ச தூரம் நடந்த போது.....<br />
<br />
”எல்லோரும் நகருங்க இல்லை இவனை சுட்டுருவேன்” ரமேஷ் செல்வாவின் தலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தன் முன்னால் இருந்த போலீஸிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவனிடம் வெறி அதிகமாக இருந்தது தன் டார்கெட்டை கொல்வதற்கு எததனை இடைஞ்சல்கள் இவன் வேறு கடைசியில் போலிசும் வந்து விட்டது. எப்படியோ அந்த வீட்டில் இருந்து இவனை வைச்சே வெளியே வந்தாச்சு! இப்ப இங்க இருந்து தப்பிக்கனும்! தன் டார்கெட் தப்பியது அவனுக்கு ஆத்திரம். அதைவிட இப்போது அவன் தப்பிக்க வேண்டும்.<br />
<br />
<br />
பாண்டியன் கவனித்தார். ஆ! அதே ஆள் இவன் தான் அந்த பையனை சுடுவான்! அச்சச்சோ எப்படி தடுப்பது! பாண்டியன் அவனுக்கு தெரியாமல் அவன் பின்பக்கமாக அருகில் சென்றார். அருகில் சென்ற போது....<br />
<br />
ரமேஷ் இடுப்பருகே தழும்பு. பாண்டியன் இடுப்பில் உள்ளது போல்..<br />
<br />
பாண்டியனுக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. அப்படியானால் இவன் என் சகோதரனா... என் சகோதரன் கொலைகாரனா இல்லை.<br />
<br />
பாண்டியன் உணர்ச்சி வசப்பட்டு சத்தப் போட....<br />
<br />
ரமேஷ் திரும்பி பார்த்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தான் செல்வா. செல்வா தப்பிப்பதை உணர்ந்த ரமேஷ் அவனை சுட்டான்.<br />
<br />
அவனைக் காப்பாற்ற பாண்டியன் குறுக்கே சென்று அவனை தள்ளினார். குண்டு பாண்டியனின் தோள் பட்டையில் பாய்ந்தது. போலீஸ் ரமேஷின் கையை சுட்டது.<br />
<br />
”சுடாதீங்க அவன் என் பிரதர் சுடாதீங்க” கதறினார் பாண்டியன். ரமேஷ் அதிர்ச்சி ஆச்சரியம் கலந்து பார்த்தான்.<br />
<br />
<div style="text-align: center;">---------------------------</div><br />
ஒரு நாளுக்குள் எத்தனை சம்பவங்கள் எத்தனை முடிச்சுகள். காலம் போகும் பாதையை அறியவே முடியவில்லை.<br />
கவிஞனுக்காக உருகும் ரசிகன், கொல்லத் துடிக்கும் கொலைகாரன், எதற்கோ வந்து மாட்டிக்கொண்ட நான், காப்பாற்றியவர் கொலைகாரனின் சகோதரர். சிறுவயதில் பிரிந்தவர் சேர்ந்தனர். அவர்கள் நிலை பாவம்.<br />
<br />
செல்வா மலைப்பாக யோசித்தான். தன் தைரியம் பற்றி கூட ஆச்சரியப்பட்டான். காலம் போகும் பாதையை அறியவே முடியவில்லை. <br />
ஆச்சரியத்தோடு அன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்தான்.. “ஹலோ நான் உங்க செல்வா பேசறேன்”<br />
<br />
<br />
<b>காலம் போடும் புதிர்கள் ஏராளம்..<br />
அதற்கான விடைகளை அது மட்டுமே சொல்கிறது............</b><br />
<br />
<div style="text-align: center;"><b>------------முற்றும்-------------</b></div><br />
<b style="color: purple;">இந்த கதையை சுருக்கமா எழுதிட்டேன். இல்லைன்ன வழவழான்னு ஆகிடும். கொஞ்சம் சினிமேட்டிக்கா இருக்கலாம். பிடிக்காததை சொல்லுங்க.</b>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-77476955097163618702010-10-25T17:22:00.000-07:002010-10-26T00:43:14.821-07:00காலப் புதிர்கள் - பாகம் இரண்டுRHINO ELECTRONICS.<br />
<br />
ரமேஷ் உள்ளே பதுங்கி பதுங்கி நுழைந்தான். கோட் சூட் போட்ட ஒருவர் ஒரு அறையிலிருந்து வெளியேறுவது தெரிந்தது. அவர் சென்றவுடன் வேகமாக உள்ளே நுழைந்தான்.<br />
<br />
பாண்டியன் வெளியே சென்றவர் கார் சாவி எடுக்க மறந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் தன் அறை நோக்கிச் சென்றார்.<br />
<br />
ரமேஷ் ஆள் வரும் சத்தம் கேட்டதும் அருகே இருந்த ஒரு பீரோவின் பின்னால் ஒளிந்தான். உள்ளே ஒருவர் நுழைந்தார். அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தான். அவர் ஒரு சிறு கதவின் பக்கம் சென்றார் ஆட்கள் யாரும் இல்லை என்ற நினைப்பால் சாதாரணமாக எண்களை தட்டினார், ரமேஷின் கண்கள் அதை மிக கவனமாக பதிவு செய்தது.<br />
<a name='more'></a><br />
பாண்டியன் சாவியை எடுத்துக் கொண்டி வெளியே சென்றார். ரமேஷுக்கு ஆச்சரியம். அந்த கதவின் பின்னால் என்ன இருக்கும் பணமா ஏதாவது முக்கியமான ஃபைலா? பார்த்து விடுவோமே! என தன் மனதில் ஞாபகம் வைத்திருந்த அந்த எண்களை அழுத்தினான். கதவு திறந்தது உள்ளே நுழைந்தான்.<br />
<br />
உள்ளே ஒரு கருவி. கருவியில் டைம் மெஷின் என்ற எழுத்துக்கள். ரமேஷால் நம்ப முடியவில்லை. இது கால இயந்திரமா! சிரிப்புதான் வந்தது. நன்றாக கருவியை சுற்றிப் பார்த்தான். ம் இது என்ன காலத்தை காட்டுமா இல்லை அந்த காலத்திற்கே கொண்டு போகுமா? அதில் PICTURE என்பது அவனை கவர்ந்தது. ம். மனதில் ஒரு எண்ணம். நம் டார்கெட் இந்த ஊர்லதான் இருக்கான் அவன் நாளைக்கு எங்கே இருப்பான்னு பார்ப்போமா. சரி. பாக்கெட்டில் இருந்து ஃபோட்டோவை எடுத்தான். அதில் கவிஞர் தேவா சிரித்துக் கொண்டிருந்தார்.<br />
<br />
<div style="text-align: center;">----------------------</div><br />
”சே தப்பிச்சிட்டான்” <br />
<br />
”எவ்வளவோ ட்ரை பண்ணோம் முடியலையே” <br />
<br />
ராம்சாமி தன் சகாக்கள் சௌந்தர், பாபுவுடன் புலம்பிக் கொண்டிருந்தார். <br />
<br />
“சார் ஆட்களை வரவழைத்து இந்த ஏரியாவை நல்லா தேடச் சொல்வோம?” <br />
<br />
“எப்ப ஆளுங்க வந்து, இந்த நைட்ல அது நடக்கிறதா அதுக்குள்ளே அவன் எங்கியோ போய்டுவான்” <br />
<br />
“சரி வாங்க அவன் தங்கியிருந்த இடத்தை இன்னொரு முறை சோதனை போடலாம் ஏதாவது தடயம் கிடைக்கலாம்,”<br />
<br />
மூவரும் அப்பகுதியை விட்டு கிளம்பினார்.<br />
<br />
<div style="text-align: center;">-------------</div><br />
ஆச்சரியமாக இருந்தது ரமேஷுக்கு. இப்படி நடப்பதுச் சாத்தியமா? இது உண்மையா? அந்த கருவியில் ஃபோட்டோ வைத்து ஹெட்போனை மாட்டி பட்டனை அழுத்தினால், அவனுக்கு படக்காட்சி தோன்றியது.<br />
<br />
”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”<br />
<br />
”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”<br />
<br />
”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்” <br />
<br />
“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”<br />
<br />
தேவா இரண்டு பேருடன் பேசிக் கொண்டே ஒரு வீட்டில் நுழைவது தெரிந்தது. <br />
<br />
ஹெட்போனை கழற்றிவிட்டு யோசித்தான் ரமேஷ். அந்த வீட்டை எங்கோ பார்த்தது போல் இருந்தது.<br />
<br />
ரமேஷ் அதற்கு பின் கருவியில் Place என்பதை பார்த்தபோது அது தான் இப்போது இருக்கும் இடத்தை காண்பித்தது. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. போலீஸ் துரத்தி வந்த போது இந்த வீடு வழியாக ஓடி வந்தேனல்லவா!<br />
<br />
தேதி நாளை தேதி. நாளை தேவா இங்கே வருகிறார். டார்கெட் நம்மளை தேடி வருது! சரி ம் இந்த கம்பெனியில் பின்பக்கம் வந்த வழியே தப்பி விடலாம். காலையில் இந்த வீட்டுப்பக்கம் செல்ல வேண்டியது சந்தர்ப்பம் பார்த்து .............<br />
<br />
ஒருவேளை இதெல்லாம் பொய்யாக இருந்தால்... பிறகு பார்த்துக் கொள்ளலாம். துப்பாக்கியை தொட்டுப் பார்த்துக் கொண்டான் ரமேஷ்.<br />
<br />
<div style="text-align: center;">-----------------------------------------------</div><br />
காலை.<br />
<br />
இரவெல்லாம் தூக்கம் வரவில்லை செல்வாவிற்கு. இரவு நடந்த சம்பவங்கள் அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தன. குறிப்பாக திருடன் காம்பவுண்டிற்குள் குதித்ததும் போலீஸ் விசாரித்ததும்....<br />
<br />
காலை பேப்பரை புரட்டி பார்த்தான். அந்த திருடன் பற்றியோ கம்பெனி பற்றியோ எந்த தகவலும் இல்லை. அதைப் பற்றி நினைக்க வேண்டாமென்றாலும் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது. இன்று வேலை இல்லைதானே. ஒரு முறை அங்கே சென்று பார்த்து விட்டு வருவோமா. பயம் வந்தாலும் போவதென தீர்மானித்தான் செல்வா.<br />
<br />
<div style="text-align: center;">-----------</div><br />
”ஐயாம் இண்டர்போல் ஆபிசர் அருண் பிரசாத்”<br />
<br />
”வெல்கம் சார் நாங்க என்ன செய்யனும்” என்றார் ராம்சாமி.<br />
<br />
”சார் மொரீஷியசில் வேறு ஒரு கேஸ் விசயமாக ஒருத்தனை விசாரிக்கிறப்பொ ஒரு முக்கியமான விசயம் தெரிய வந்தது.”<br />
<br />
ராம்சாமி, பாபு, சௌந்தர் மூவரும் அவர் சொல்வதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர்.<br />
<br />
”இந்தியாவுக்கு தற்சமயம் வந்திருக்கிற என் ஆர் ஐ ஒருத்தரை முன்விரோதம் காரணமா கொலை பண்ண போறாங்க. கில்லரும் அவரை அந்த நாட்டிலிருந்தே ஃபாலோ செய்து வந்திருக்கான்.”<br />
<br />
”அந்த என் ஆர் ஐ பேர் தேவா. அந்த கில்லர் நேம் ரமேஷ்” மூவரும் திடுக்கிட்டு நிமிர்ந்தனர். <br />
<br />
“நீங்க அந்த கில்லரை தேடுறதா சொன்னதால விசாரிக்க வந்தேன்”<br />
<br />
மூவரும் இரவு நடந்த சம்பவங்களை சொன்னார்கள்.<br />
<br />
”சரி அப்படின்னா உடனடியா மிஸ்டர் தேவாவை அலர்ட் பண்ணனும்”<br />
<br />
உடனே பாபு தகவல்களை சேகரித்தார். கவிஞர் தங்கியிருந்த இடத்தின போன் நம்பரை கண்டு பிடித்து விசாரித்தார். <br />
<br />
“சார் தேவா காலையிலேயே தனியா எங்கேயோ கிளம்பி போய்ட்டாராம்”<br />
<br />
”எங்கே” <br />
<br />
“எங்கேன்னு தெரியலை ஆனா போரூர்க்கு போக எவ்வளவு நேரம் ஆகும்கிறத பற்றி ரிஷப்னிஷ்ட்கிட்ட விசாரிச்சிருக்காரு”<br />
<br />
”போரூர்.... நாமை கில்லரை தப்பிக்க விட்ட இடம்”<br />
<br />
”தேர் இஸ் சம்திங்.... கமான் கெட் ஹரி அப்” நால்வரும் கிளம்பினர்.<br />
<br />
<b><i>(அடுத்த பாகத்தில் முடியும்)</i></b>எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-39124760224438254842010-10-25T17:21:00.000-07:002010-10-26T00:42:55.638-07:00காலப் புதிர்கள் - பாகம் ஒன்று“இந்த பாடலோடு நான் விடைபெறுகிறேன்! அடுத்து வருவது இனிய கீதங்கள். ரசிச்சு ரசிச்சு கேளுங்க டெக்னோ எஃப் எம்” சந்தோசமாக கூறிவிட்டு தன் ஹெட்போனை கழற்றினான் ஆர்ஜே செல்வா.<br />
<br />
இப்பவே நைட் மணி 11 ஆச்சா. கிளம்பனும், நிம்மதியா போய் தூங்கணும். என்றபடியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் சென்று கொண்டிருந்தான். கும்மிருட்டு. சாலையின் யாருமில்லை தூரத்தில் யாரோ நிற்பதுபோல் தெரிந்தது அருகில் சென்றதும் அவர் லிஃப்ட் கேட்பது தெரிந்தது. நிறுத்தினான் பைக்கை. <br />
<br />
உடனே சாலையில் இருந்தவன் திடீரென வேகமா வந்தான் கையில் எப்போது பேனாக்கத்தி முளைத்தது என்றே தெரியவில்லை. “ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு போ சத்தம்போட்டே அவ்வளவுதான்.” செல்வா அமைதியாக அவனை ஏற்றிக் கொண்டு வண்டியில் சென்றான்.<br />
<a name='more'></a> <br />
<div style="text-align: center;">------------------------------</div><br />
RHINO ELECTRONICS. இரவிலும் கம்பீரமாக இருந்தது அந்த நிறுவனம். அதி நவீன எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் அது. அங்கே ஒரு அறையில் மட்டும் அமைதியாக ஆனால் ஆழ்ந்த சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தார் அவர். அவர் முன்னால் இருந்த பெயர் பலகை அவர் பெயர் பாண்டியன் எனவும் அவர் அந்த நிறுவனத்தின் எம். டி என்பதையும் சொல்லிற்று. அவர் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.<br />
<br />
”வாழ்வில் என்ன சாதித்தோம். இந்த நிறுவனம் கூட என் தந்தை உருவாக்கியதுதானே. ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும் 5 வருடமாக முயற்சித்தும் என்னால் நான் நினைத்த கண்டுபிடிப்பை உருவாக்க முடியவில்லையே” அவர் தான் தொகுத்த விவரங்களை தன் லேப்டாப்பில் மீண்டும் ஒரு முறை பார்த்தார். அதில் TIME MACHINE என்ற கோப்பை திறந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் முகத்தில் பிரகாசம். வேகமாக எழுந்தார்.<br />
<br />
<div style="text-align: center;">-------------------------------------</div><br />
டிஎஸ்பி ராம்சாமி டென்சனோடு காத்திருந்தார். அவரிடம் டிஜிபி மங்குனி சொல்லியது ஞாபகம் வந்தது.....<br />
<br />
”மிஸ்டர் ராம்சாமி உங்களுக்கு 3 நாட்கள் டைம். அதுக்குள்ளே இவனை பிடிச்சாகனும். நம் உளவுத்துறை ரிப்போர்ட்படி ஏதோ ஒரு டீலிங்காக 2 நாளைக்கு முன்னாடி இங்கே வந்துருக்கான். அவன் எங்க இருக்கான்கிறதை கண்டு பிடிப்பது உங்க பொறுப்பு.”<br />
<br />
2 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவனைப் பற்றி விவரங்களை கண்டு பிடித்தார். இப்போது கூட அவனிருக்குமிடம் பற்றி ஒரு இன்ஃபார்மர் மூலம் தெரிந்துகொள்ளத்தான் தன் அசிஸ்டென்ஸ்கள் சவுந்தர் மற்றும் பாபுவை அனுப்பியிருந்தார். தன் முன் இருந்த ஃபைலை ஒருமுறை திறந்தார். அதில் போட்டோ விவரங்கள் இருந்தது. பெயர்: ரமேஷ் தொழில்: புரொஃபஷனல் கில்லர்.<br />
<br />
திடீரென போன் ஒலித்தது. எடுத்தார். “சார் நான் சவுந்தர் பேசறேன். அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சிட்டோம்.”<br />
<br />
<div style="text-align: center;">---------------------------------------</div><br />
செல்வா வண்டி நிறுத்திய இடம் ஒரு ஆடிட்டோரியம் அங்கே ஏற்கனவே ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் பைக்கிலிருந்தவனை ”ஏண்டா ஜெயந்த் ஏன் லேட்” என்றான். ”வண்டி பஞ்சர் ஆயிடுச்சு அதான் லிஃப்ட் கேட்டு வந்தேன்” என்றான்.<br />
இதுக்கா கத்தி வைச்சே என்று கேட்டான் செல்வா. சாரிங்க அவசரம் அதான்! என்றான் ஜெயந்த. ”டேய் யோகேஷ் நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சா” ”முடிகிற நேரம்தான்”<br />
<br />
ஆடிட்டோரியம் உள்ளே....<br />
<br />
“வாழ்க்கையும் ஒரு கவிதைதான்<br />
பல சமயங்களில் புரிவதே இல்லை.” தேவா பேசி முடித்ததும் கரகோஷம் விண்ணை தொட்டது. கவிஞர் தேவாவிற்கு இந்த பொன்னாடையை போர்த்துகிறேன் என ஒருவர் பொன்னாடை போர்த்தினார். புத்தக வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு வெளியே வந்தார் கவிஞர் தேவா.<br />
<br />
அவரிடம் பலர் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். கடைசியாக ஜெயந்தும், யோகேஷும் சென்றார்கள். <br />
“சார் என்னை தெரியுதா” என்றான் யோகேஷ்.<br />
தேவா யோசித்துவிட்டு, “ஆ! ஞாபகம் வந்துவிட்டது போனதடவை நான் இந்தியா வந்தப்ப எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு அப்ப ரத்தம் கொடுத்தவன்தானே நல்லாயிருக்கியா தம்பி”<br />
“நல்லாயிருக்கேன் சார் இவன் என் ஃபிரெண்ட் ஜெயந்த் உங்களின் தீவிர ரசிகன் உங்களை பார்க்கணும்னு ஆசைப்பட்டான்.”<br />
ஜெயந்த் ஆவலாக அவரின் கைப்பற்றினான்.<br />
<br />
செல்வா தூரத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வண்டியை கிளப்பினான். என்ன ஒரு விநோதம் ஒரு கவிஞரை பார்க்க துடிக்கும் ரசிகன் அவரை பார்க்க வேண்டி கத்தி காட்டி லிஃப்ட் கேட்கிறான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே வண்டியெடுத்தான் செல்வா.<br />
<br />
<div style="text-align: center;">--------------------------------------------</div><br />
பாண்டியன் அந்த அறையில் நுழைந்தார், அங்கே இருந்த ஒரு கணிணி பலகையில் சில எண்களை தட்டினார். அருகிலுள்ள கதவு திறந்தது. உள்ளே நுழந்தார். <br />
<br />
எதிரே ஒரு பிரம்மாண்டா கருவி அதன் நடுவில் மெல்லியதாக Time Machine என்ற எழுத்துக்கள். அதில் நடுவே ஒரு நாற்காலில் அதன் கைப்பிடியில் எடுத்து மாட்டிக்கொள்ள ஒரு ஹெட்போன் போன்ற அமைப்பு இருந்தது அதனை மாட்டினால் கண்களையும் அது மூடும். பக்கவாட்டில் ஒரு கணிணி போன்ற அமைப்பு அதில் Time, Picture, Place என மூன்று பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தன. தன் கையில் வைத்திருந்த சிடியை அதில் ஒரு இடத்தில் பொருத்தி சில வேலைகள் செய்தார். Time, Picture, Place என மூன்று பகுதிகளிலும் விளக்கு எரிந்தது.<br />
<br />
யுரேகா என கத்த வேண்டும் போல் இருந்தது. இத்தனை நாளாக அந்த மூன்று பகுதிகளும் இணைந்தாற் போல் வேலை செய்யவில்லை ஒன்று இயங்கினால் ஒன்று இயங்காமல் இருந்தது. ஆஹா என் கனவு நிறைவேறி விட்டதா டைம் மெஷின் ரெடியாகி விட்டதா மனமெல்லாம் ஒரே மகிழ்ச்சி சிறுவன் போல குதித்தார். சரி இப்போது இதை சோதிக்க வேண்டுமே சரி.அன்றைய தேதி 10 நிமிடங்களுக்கு முந்தைய நேரத்தை Time என்ற இடத்தில் உள்ளீடு செய்தார். Place என்ற இடத்தில் கம்பெனி இருக்கும் ஏரியாவான போரூர் என்பதை உள்ளீடு செய்தார். ஹெட்போனை மாட்டினார். நாற்காலியின் மறு கைப்பிடியில் இருந்த குமிழை அழுத்தினார்.<br />
<br />
கண்கள் மூடியிருந்த்து. தலைக்குள் ஏதோ சர் என்று பாய்வது போல உணர்வு. திடீரென படம் போல காட்சி தெரிந்தது. பாண்டியன் சேரில் உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார். ஹெட்போனை கழட்டினார். நம்பமுடியவில்லை அவரால். பத்து நிமிடங்களுக்கு முன் அவர் இருந்த நிலை அதுவல்லவா!!!<br />
சரி! இன்னொன்றை சோதித்து பார்ப்போம். எதை? தீடிரென அவர் தன் இடுப்பை தொட்டுப் பார்த்தார் தழும்பு.<br />
<br />
அவரின் பழைய ஞாபகங்கள். அவரும் அவர் சகோதரணும் இரட்டை பிறவிகள் ஒட்டிப் பிறந்தவர்கள் ஆபரேசன் மூலம் பிரித்தார்கள். குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் தாயும் தந்தையும் பிரிந்து விட்டார்கள். தாய் சில வருடங்களில் இறந்தது மட்டும் தெரியும். ஆனால் சகோதரன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. தந்தை முயற்சித்தும் பலனில்லை கடைசி நாட்களில் இதை எண்ணி அவர் புலம்பியுள்ளார். கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.<br />
<br />
தன் சகோதரன் எங்கிருப்பான். ஒரு யோசனை. தன் பிறந்த நாளையும். தான் பிறந்த ஆஸ்பத்திரி இருந்த இடத்தையும் மிஷினில் எழுதினார். பிறகு பார்த்தார். அதேபோல் நிகழ்படங்கள். இருகுழந்தைகள் ஒட்டிப்பிறந்தன. பார்த்துக் கொண்டே இருந்தபோது திடீரென ஸ்பார்க் ஆகிற்று கருவி. கருவியில் காலம் இடம் தானாக மாறியது. உடனே எங்கெங்கோ நிகழ்வுகள் சென்றது கடைசியாக ஒரு ஒளிப்படம் அவர் முன் தோன்றியது. அதில் ஒருவர் ஒரு இளைஞனை சுடுகிறார் குண்டு அந்த இளைஞன் மீது படுகிறது. அவ்வளவுதான் தீடீரென ஒரு சத்தம். கருவி வேலை செய்யவில்லை.<br />
<br />
ஹெட்போனை கழட்டினார். ஏதேதோ செய்தார். பலனில்லை. அவருக்கு என்னவோ போல் இருந்தது. சகோதரன் பற்றிய எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக யாருக்கோ ஆபத்து என்று வேறு காட்டுகிறது. கருவிக்கும் ஏதோ ஆகிவிட்டது. அப்போதைய மனநிலையில் எதையும் செய்யமுடியும் என தோன்றவில்லை. வீட்டுக்கு கிளம்பினார். அந்த கருவியில் Time என்ற இடத்தில் அடுத்த நால் தேதியும் Place என்ற இடத்தில் அவர் கம்பெனி இருந்த பகுதி பெயரும் இருந்தது இதை பாண்டியன் கவனிக்கவில்லை. <br />
<br />
<div style="text-align: center;">--------------------------------------------------------------</div><br />
செல்வா பைக்கில் வந்துகொண்டிருந்தான். திடீரென பைக் நின்று விட்டது. சே இதான் இந்த பைக்கோட என்று புலம்பி கொண்டே இறங்கி வண்டியை சோதித்தான். அப்படியே அவன் இருந்த தெருவுக்கு எதிரே செங்குத்தாக ஒரு தெரு சென்றது. அவன் அங்கே பார்த்துக் கொண்டே வண்டியில் ஒயரை பிரித்த போது....<br />
யாரோ ஒருவன் வெகு வேகமாக ஓடி வந்தான். பின்னால் ஒரு முறை திரும்பி பார்த்தான் பிறகு அங்கிருந்த காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே குதித்தான். செல்வா அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே 3 பேர் பின்னாலே ஓடி வந்தனர். அவர்கள் உடையிலேயே போலீஸ் என தெரிந்தது.<br />
<br />
செல்வாவுக்கு பயம் வந்தது. முதலில் ஓடியவன் வேறு பக்கம் இருந்ததால் செல்வாவை பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் போலீஸ்... <br />
<br />
”பாபு நீங்க இந்த பக்கம் போங்க, சௌந்தர் நீங்க இந்த பக்கம் போங்க தேடுங்க அவனை சே மிஸ்ஸாயிட்டான்” என கோபப்பட்டார் ராம்சாமி.<br />
<br />
செல்வா பயந்து என்ன சொல்வது என யோசிக்கும்போதே சௌந்தர் அருகில் வந்தார். <br />
”யாருப்பா நீ”<br />
”சார்.. நான்.. சும்மா.. பைக் ரிப்பேர்..” தடுமாறினான் செல்வா.<br />
”சரி இங்கே யாராவது ஓடி வந்ததை பார்த்தியா”<br />
செல்வா பயந்தான் பார்த்தேன் என்று சொன்னால் அந்த திருடனாலும் நாளை பிரச்சினை வரலாம். போலிஸும் அடிக்கடி வரச்சொல்லும். ”பார்க்கலை சார்...”<br />
”ம் சரி போ” சவுந்தர் சந்தேகத்தோடே செல்வாவை பார்த்துக்கொண்டே அவனை தாண்டி வேறு பக்கம் ஓடினார்.<br />
<br />
செல்வாவிற்கு உயிர் வந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்தான். இப்போது அந்த திருடன் அந்த காம்பவுண்ட் உள்ளேதான் இருப்பான்ல. அவனுக்குள் ஒரு திரில் பயன், பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டே அந்த காம்பவுண்டை தாண்டிச் சென்றான். செல்லும்போது அந்த கட்டிடத்தின் பெயரை படித்தான். <br />
<br />
RHINO ELECTRONICS.எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-15504085829777989032010-10-25T16:55:00.000-07:002010-10-26T00:42:25.751-07:00பீட்டரும் ரோஸியும் - சிறுகதைநாங்கள் மேரியின் வீட்டில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிதுதான். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. நாங்கள் மேரியின் வீட்டில் மிகவும் சந்தோசமாகத்தான் இருந்தோம், பீட்டர் வரும் வரை.<br />
<br />
பீட்டர் வந்த நாள் முதல் எங்களுக்கு அவனை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கும் எங்களை பிடிக்கவில்லை. அவன் மிகவும் முரட்டுத்தனமானவன். அவன் முரட்டுத்தனம் நாளடைவில் எங்களை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும்போது நாங்கள் வெளியே செல்வதில்லை.<br />
<br />
<a name='more'></a>பீட்டர் எப்போது அந்த வீட்டை விட்டு செல்வான்? அவன் செல்வது நடக்காது ஏனென்றால் மேரிக்கு பீட்டரை மிகவும் பிடிக்கும். ஆனால் பீட்டருக்கோ ரோஸியைத் தான் மிகவும் பிடிக்கும்.<br />
<br />
ரோஸி எதிர்வீட்டில் இருந்தாள். மிகவும் அழகானவள். அவளும் பீட்டரை காதலித்தாள். பீட்டரும் அவளும் காதலிப்பது எனக்கு எப்படி தெரியுமென்றால்....<br />
<br />
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. அது யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை திருட்டுத்தன்மாக சாப்பிடுவது. ஒரு நாள் இரவு அப்படித்தான் யாருக்கும் தெரியாமல் சமையலைறைக்கு சாப்பிடச் சென்றேன். அப்பொழுதுதான் சமையலறை ஜன்னல் வழியாக அந்த காட்சியை பார்த்தேன்.<br />
<br />
பீட்டரும் ரோஸியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். மிகவும், மிகவும், மிகவும்.....<br />
<br />
ஒரு நாள் அவர்களின் காதல் விளையாட்டு வெளியுலகத்திற்கு தெரிந்தது. ரோஸி கர்ப்பமானாள்.<br />
<br />
காலங்கள் உருண்டோடின. பீட்டர்-ரோஸி காதலிற்கு பரிசாக குழந்தைகள் பிறந்தன. ஒன்றல்ல நான்கு! அவர்கள் காதல் மிகவும் வலிமையானது போல! <br />
<br />
அதுவரை நன்றாக இருந்த வாழ்க்கை அன்று முடிவுக்கு வந்தது, குழந்தை பிறந்த சில நாளிலேயே ரோஸி ஏதோ ஒரு நோயால் இறந்து போனாள்.<br />
<br />
அதுநாள் வரை இருந்த பீட்டர் மாறிப் போனான். ரோஸி இறந்த சோகம் அவனை வாட்டிற்று. ஒரு நாள் அவன் ரோட்டில் பரிதாபமாக ஒரு சாலை விபத்தில் இறந்தான்....<br />
<br />
பீட்டர்-ரோஸியின் காதல் வாரிசுகள் இன்று அநாதையாய்...<br />
<br />
ரோஸியின் வீட்டார் அந்த வாரிசுகளை வளர்க்க விரும்பவில்லை. ஆனால் மேரி விரும்பினாள். மேரி தன் தந்தை தாமஸிடம் சொன்னாள். அவர்தான் தன் மகளின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டவராயிற்றே. நாளை முதல் அந்த வாரிசுகள் இதோ இங்கே தாமஸிடம் வீட்டில் வளரப்போகின்றன.<br />
<br />
மேரி சந்தோசமாக இருந்தாள். ஆனால் நாங்கள் பயப்பட்டோம்....<br />
<br />
சரி, பீட்டராய் இருந்தால் என்ன? ரோஸியாய் இருந்தால் என்ன? எங்களைப் போன்ற எலிகளுக்கு எல்லாப் பூனைகளை கண்டாலும் பயம்தான். சமாளிப்போம் என்று எண்ணியபடியே யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் நுழைந்தேன்.எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4962084170883265050.post-15731255789467620472010-10-25T16:39:00.000-07:002010-10-25T16:39:06.630-07:00எதுவும் நடக்கலாம்!விரும்பியது கிடைக்காமல் போகலாம், கிடைத்ததும் பறிக்கப்படலாம்.<br />
வாழ்விற்கு முடிவு போல தோன்றலாம், கூடவே ஒரு காற்புள்ளியும் வரலாம்.<br />
காற்புள்ளி கேள்விக்குறியாய் மாறி சில ஆச்சரியங்களை தரலாம்.<br />
வாழ்வை எண்ணி வியந்து கொண்டே வாழ ஆரம்பித்தால் மேலும் அதியசங்கள் காணலாம்!<br />
<br />
மொத்தத்தில் வாழ்வில் எதுவும் நடக்கலாம்! காத்திருங்கள் மாற்றம் வரும் வரை நம்பிக்கை இழக்காமல்!எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com8